microsoft edge

Advertisment

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசர நடவடிக்கைகள் குழு, மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரின் பழைய வெர்சன்களை பயன்படுத்துபவர்களுக்கு அதி தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பிரவுசரின் பழைய வெர்ஷன்களில் இருக்கும் பல்வேறு குறைபாடுகள், சைபர் தாக்குதலை அனுமதிக்கும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதலில் இருந்து தப்பிக்க எட்ஜ் பிரவுசரை புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்யுமாறும் இந்திய கணினி அவசர நடவடிக்கைகள் குழு கேட்டுக்கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் எட்ஜ்ஜின் புதிய வெர்ஷனான 98.0.1108.55 இந்த வாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் எட்ஜ்ஜின் புதிய வெர்ஷனான 98.0.1108.55-ல் புதிய பாதுகாப்பு அப்டேட்டுகளும், புதிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.