Skip to main content

சமூக வலைதளங்கள் மற்றும் ஓ.டி.டிகளுக்கு அரசு விதித்த கட்டுப்பாடுகள் என்னென்ன...?

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

social media and ott

 

சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கோரி ஒரு சாரார் தொடர்ந்து கோரிக்கை விடுத்தது வந்தனர். அதேபோல் ஓ.டி.டி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்து வந்தது. இந்தநிலையில் சமூக வலைதளங்களுக்கும்,  ஓ.டி.டி தளங்களுக்கும் மத்திய அரசு இன்று கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 

 

சமூக வலைதளத்திற்கான கட்டுப்பாடுகள்:
 

சமூக வலைதளங்கள் குறை தீர்க்கும் முறையை தங்கள் தளங்களில் சேர்க்கவேண்டும். பயனாளர்கள் தெரிவிக்கும் எந்தவொரு குறையும், 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் தீர்க்கப்படவேண்டும். பயனாளர்களின் கௌரவத்திற்கு எதிராகப் புகார்கள் வந்தால், குறிப்பாக பெண்களின் கண்ணியம் தொடர்பான புகார்கள் (நிர்வாணம், ஆள்மாறாட்டம் உள்ளிட்டவை) வந்தால் அந்தப் பதிவுகள் 24 மணிநேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும். சமூக வலைதளங்கள், தலைமை இணக்க அலுவலர் (Chief Compliance Officer), நோடல் தொடர்பு நபர் ஆகியோரை நியமிக்க வேண்டும். இவர்கள் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். தவறான தகவல்களை முதலில் பதிவிடுபவர்களை சம்மந்தப்பட்ட சமூக வலைதளம் கண்டறிய வேண்டும். அரசோ, நீதிமன்றமோ கேட்டால் அதுகுறித்த தகவல்களைத் தர வேண்டும். ஒருவேளை அவ்வாறு பதிவிட்டவர், வெளிநாட்டில் இருந்தால் இந்தியாவில் முதலில் அதைப் பதிவிட்டவர் குறித்த தகவலை தர வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் சமூகவலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

 

ஓ.டி.டி. தளங்களுக்கான கட்டுப்பாடுகள்:


ஓ.டி.டி. தளங்கள், பதிவு செய்துகொள்வது கட்டாயமில்லை. ஆனால், தளங்கள் குறித்த தகவல்களை அரசு கேக்கும். தளங்களில் எவ்வாறு எங்கிருந்து கண்டென்டுகள் பதிவேற்றப்படுகிறது என்ற தகவல்களை வழங்க வேண்டும். குறை தீர்க்கும் முறை இருக்க வேண்டும். ஒரு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது ஒரு சிறந்த நபரின் தலைமையிலான சுய ஒழுங்காற்று முறை இருக்க வேண்டும். வயதிக்கேற்றார் போல் (U,16+, ADULT ETC) கண்டென்டுகள் பிரித்து வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஓ.டி.டி தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. 

 

ஓ.டி.டி தளங்களுக்கான கட்டுப்பாடுகள் மூன்று மாதத்திற்குப் பிறகு அமலுக்கு வருமெனவும், சமூக வலைதளங்களுக்கான கட்டுப்பாடுகள் அரசு கெசட்டில் வெளியானவுடன் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கங்குவா டூ கேம் சேஞ்சர் - பட்டியலை வெளியிட்ட முன்னணி ஓடிடி நிறுவனம்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
kanguva to game changer amazon prime ott announced his list

திரையரங்கிற்கு பின் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு சமீபகாலமாக ரசிகர்கள் அதிகளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதே போல் வெப் சீரிஸ்களுக்கும் படங்களுக்கு நிகரான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைம் 2024ல் தங்களது ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

கங்குவா - சூர்யாவின் 42ஆவது படமாக உருவாகும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யூட்யூபில் 11 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து தற்போது ட்ரெண்டிங் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது. 

கேம் சேஞ்சர் - ஷங்கர், ராம் சரண் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. ஆந்திராவில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. ரிலீஸ் அப்டேட் நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். 

சிட்டாடெல் - வெப் சீரிஸான இதில் வருண் தவான், சமந்தா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ் மற்றும் டீகே இயக்கி வரும் இத்தொடர் ஹாலிவுட்டில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சிட்டாடெல் தொடரின் இந்திய பதிப்பாகும். இந்தியாவில் சிட்டாடல் ஹனி பனி என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. 'கேங்க்ஸ்' - சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ ரன்னராக பணியாற்றும் இந்த சீரிஸில் அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நோஹா ஆபிரஹாம் என்பவர் இயக்குகிறார். 

சுழல் சீசன் 2 - ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எழுத்தில் பிரம்மா மற்றும் சர்ஜுன் இயக்கத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால் சரவணன், மஞ்சிமா மோகன், கௌரி கிஷன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதைத் தவிர்த்து ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2, அபிஷேக் பச்சன் நடித்துள்ள 'பி ஹேப்பி', அனுஷ்கா ஷெட்டியின் ‘காதி’, விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார், எனப் பல படங்களின் திரையரங்கிற்கு பின் வெளியாகும் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

Next Story

விபரீத இன்ஸ்டா ரீல் இளைஞர்கள் கைது; போலீசார் எச்சரிக்கை

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
nn

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தில் விபரீதமாக மண்ணுக்குள் குழிதோண்டி அதனுள் இளைஞரை தலைகீழாக புதைத்து சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார் ரஞ்சித் பாலா அவரது நண்பர்கள் சிவக்குமார், இசக்கி, ராஜா ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.