Skip to main content

கிரண்பேடியை திரும்பப்பெற கோரிய வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Published on 21/07/2018 | Edited on 27/08/2018
kp

 

புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரண்பேடியை திரும்பப்பெற கோரி இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசும்,  புதுச்சேரி அரசும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 

யூனியன் பிரதேசங்களுக்கு துணைநிலை ஆளுனரை நியமிக்க அரசியலமைப்பு சட்டம் வழிவகை செய்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, அரசு பணத்தை வீணாக்கவே துணைநிலை ஆளுநர்கள் நியமிக்கப்படுவது தேவையில்லை. அரசியலமைப்பு சட்டத்தை மீறி புதுச்சேரி ஆளுநர் கிரன்பேடி செயல்படுகிறார் என்பதால் அவரை திரும்பபெற மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில குழு உறுப்பினர் முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அந்த மனுவில், அரசு நிர்வாகத்தில் தேவையில்லாமல் தலையீடு என்பது கிரன்பேடி எடுத்துக்கொண்ட பதவிபிரமானத்தை மீறும் வகையில் செயல்படுவதாகவும், மருத்துவ மாணவர் சேர்க்கை, பசுமை தீர்ப்பாய வழக்கு, அதிகாரி மாற்றம் செய்யும் தலைமை செயலாளர் உத்தரவு ஆகியவற்றில் தலையிட்டு அரசியலமைப்பு விதிகளையும், பதவிப்பிரமான விதிகளையும் மீறியிருக்கிறார் என முருகன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், அங்கீகரிக்கப்பட்ட ஆளுனர் மாளிகையான ராஜ் நிவாசில் ஆளுனருக்கான தனிச்செயலாளரும், 68 பணியாளர்களும் அரசியலமைப்பு சட்டத்தின்படி பணியில் உள்ள நிலையில், தனக்கு தேவையான ஆட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கூடுதலாக பணியாளர்களை நியமித்து விதிகளை மீறியுள்ளதாக மனுவில் முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் சி.ட்டி.செல்வம், என்.சதிஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தபோது "டெல்லி ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு புதுச்சேரிக்கும் பொருந்தும் என மனுதாரர் முருகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதிட்டார்.

 

இதேபோல 2011ல் துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டபோது இதே மனுதாரர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தள்ளுபடி செய்யப்பட்டதாக மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் வி.வெங்கடேசன் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

 

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் , மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும், புதுச்சேரி அரசும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதிக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி அரசின் சுற்றுலா மேம்பாடு; 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்'  மியூசியம் திறப்பு

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
Opening ceremony Of Artist AP Shreethar's Wonders of White Town 

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ் கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தற்போது இவரது கைவண்ணத்தில் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க ஒய்ட் டவுன்-இல் பிரம்மாண்ட கலாச்சார நிறுவனம் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்' என்ற மியூசியம் தைத்திருநாளை முன்னிட்டு ஜனவரி 15-ஆம் தேதி மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் திறக்கப்பட்டு இருக்கிறது.

வில்லா குகா, ரூ சுஃப்ரென், புதுச்சேரி - 605001 என்ற முகவரியில் உருவாகி இருக்கும் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்', இந்தியாவின் அருங்காட்சியக மனிதராக அறியப்படும் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் திரு.வே.குகன் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

லைவ் ஆர்ட் மியூசியம், டெடி மியூசியம் மற்றும் ஃபிஷ் மியூசியம் என மூன்று பிரத்யேக அருங்காட்சியகங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த கலை மற்றும் கலாச்சார மையத்தை கட்டடத்துறையில் புகழ்பெற்ற அகிலன் ஆர் வடிவமைத்துள்ளார். மெழுகு சிலை சிற்பங்கள், கொண்ட லைவ் ஆர்ட் மியூசியத்தில் உலகின் பிரபல தலைவர்களான மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மதர் தெரேசா, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பலர் தத்ரூபமாக இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் மிக உயரமான மனிதன் மற்றும் குள்ளமான மனிதன் பார்க்க உண்மையாகவே காட்சியளிக்கும் சிலிகான் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

டெடி (Teddy) மியூசியம் மனித குலத்தின் சர்வதேச அழகியல், குழந்தை பருவ நினைவுகளை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மைகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிஷ் (Fish) மியூசியத்தில் நீருக்கடியில் உள்ள எண்ணற்ற உயிரினங்களை தழுவி உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மியூசியத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்தினார். மேலும் அவர் கூறும்போது, மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள, தலைவர்களின் சிலிகான் சிலைகள் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்த மியூசியம் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இந்த மியூசியத்தை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது இருக்கிறது. கலையம்சம் பொருந்திய நல்ல அருங்காட்சியம் அமைந்து இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும். சுற்றுலாவுக்கு புதுச்சேரி அரசு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இந்த அருங்காட்சியகம் அமைந்து இருப்பது எங்களுக்கு சிறப்பு என்று பாராட்டி கூறினார்.

Next Story

வெள்ளிக்கிழமை தோறும் 2 மணி நேரம் வேலை குறைப்பு; புதுச்சேரி அரசு அறிவிப்பு  

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

2 hours work reduction every Friday; Puducherry Government Notification

 

புதுச்சேரி அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு வாரத்தில் ஒருநாள் வெள்ளிக்கிழமை மட்டும் இரண்டு மணி நேரம் வேலைக் குறைப்பு செய்யப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதன்படி அன்று ஒரு நாள் மட்டும் பெண்கள் காலை 9 மணிக்கு பதில் காலை 11 மணிக்கு வேலைக்கு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஆளுநர் தமிழிசை, “முதலமைச்சர் ரங்கசாமியிடம் நான் ஒரு கோரிக்கை வைத்திருந்தேன். பெண்களுக்கு வெள்ளிக்கிழமை காலை 2 மணி நேரம் வேலையில் சலுகை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். புதுவையில் உள்ள பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களுக்கு செல்வ சலுகையும் உள்ளது. நேர சலுகையும் உள்ளது. ரூ.1000 பணமும் கொடுக்கப்படுகிறது. நேரச் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இதனால் பெண்கள் ஆக்கப்பூர்வத்துடனும் ஊக்கமுடனும் பணியாற்றுவார்கள். பெண்களுக்கான இரண்டு மணி நேர வேலை நேரம் குறைப்பு என்பது அரசுத் துறைக்கு சொல்லியுள்ளோம். அரசுத் துறையைப் பார்த்து தனியார் துறையும் பின்பற்றுவார்கள் என நினைக்கிறேன்.” என்றார்.

 

அதே வேளையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரெங்கசாமி, “பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் காலை 9 மணிக்கு பதில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதுமானது. வெள்ளிக்கிழமை வீடுகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகள் இருக்கும்” எனத் தெரிவித்தார். பின்னணியில் தமிழிசை சவுந்தரராஜன், “பெண்கள் லேட்டாக வராமல் லேட்டஸ்ட்டாக வரலாம்” எனக் கூறினார்.