Skip to main content

"ஆளுங்கட்சி அதிக இடங்களில் மோசடி செய்து வெற்றி பெறுகிறது" - மாயாவதி

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

bsp mayawati talks about ruling party missue election rules local body election 

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  760  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மொத்தமுள்ள 17 மாநகராட்சி மேயர் பதவிகளையும் பாஜக கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 17 மேயர் பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில் ஒரு மேயர் பதவியைக் கூட கைப்பற்ற முடியவில்லை.

 

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து பகுஜன் சமாஜ்வாதி  கட்சி தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பதிவில், "உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி பல முறைகேடுகளுடன் வெற்றி பெற்றுள்ளனர். நேரம் வரும்போது பாஜக அதற்கான பின்விளைவுகளை நிச்சயம் சந்திக்கும். இது குறித்த பிரச்சனையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி அமைதியாக இருக்கப் போவதில்லை.

 

மேலும், அனைத்து பாதகமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சியை நம்பி அதன் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்தத் தேர்தலும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடந்திருந்தால் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும். வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் மேயர் தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றிருக்கும். பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி, சமாஜ்வாதி கட்சியாக இருந்தாலும் சரி, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வெற்றி பெறுவதில் இரு கட்சிகளுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல. எப்பொழுதும் ஆளுங்கட்சி அதிக இடங்களில் மோசடி செய்து வெற்றி பெறுகிறது. இந்த முறையும் அதுதான் நடந்தது" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

கைவிரித்த பா.ஜ.க.! எதிர்த்து களம் இறங்கும் வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
BJP leader is contesting against Radhika in Virudhunagar

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக, தன்னுடைய தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தமாக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி,  புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது.

BJP leader is contesting against Radhika in Virudhunagar

காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக கூறிய சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா என்பவர் விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், பாஜக தலைமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த டாக்டர் வேதா  சுயேட்சையாக தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.