Skip to main content

சென்னை: கரோனா பாதித்த பாஜக எம்.பி உயிரிழப்பு... பிரதமர் இரங்கல்...

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

bjp mp abhay bhardwaj passes away

 

 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த குஜராத் பாஜக எம்.பி. அபய் பரத்வாஜ் நேற்று மாலை உயிரிழந்தார்.

 

குஜராத் மாநில பாஜகவின் மூத்த தலைவரும் குஜராத் மாநில மாநிலங்களவை உறுப்பினருமான அபய் பரத்வாஜ் (66) கடந்த ஆகஸ்டு மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ராஜ்கோட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். கரோனா காரணமாக நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், அவருக்கு அக்டோபர் 9 ஆம் தேதி நிமோனியா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

 

அதிநவீன உயிர்காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், உடல் உறுப்புகள் செயலிழந்து நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனத் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இவரது இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "குஜராத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி., அபய் பரத்வாஜ் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தார், மேலும் சமூகத்திற்கு சேவை செய்வதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். நாட்டின் வளர்ச்சியில் ஆர்வமுள்ள, பிரகாசமான மற்றும் நுண்ணறிவு மிக்க நபரை நாம் இழந்திருப்பது வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் ஓம் சாந்தி" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்