Skip to main content

காதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை!!!

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

உத்திரபிரதேசம், பித்தாரி செயின்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜேஷ் மிஸ்ரா. அவரது மகள் சாக்‌ஷி மிஸ்ரா அஜிதேஷ் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அஜிதேஷ் குமார் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது திருமணத்தை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த திருமணம் நடந்தால்... என கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். 
 

sakshi mishra



இதனால் சாக்‌ஷி மிஸ்ரா சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “என்னுடைய திருமணத்திற்கு என் தந்தை ஒத்துக்கொள்ளவில்லை. சில ரவுடிகளை ஏவிவிட்டு எங்களை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளார். எனவே எங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கூறிய அவர், எனது உயிருக்கோ, எனது கணவரின் உயிருக்கோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு என் தந்தைதான் காரணம். அப்படி ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால், அவரை நான் சட்டத்திற்கு முன்னால் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தருவேன்.”

இதைத்தொடர்ந்து அலகாபாத் நீதிமன்றத்தில் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டு, ஒரு பொதுநல மனுவை சாக்‌ஷி மற்றும் அவர் கணவர் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவிருந்தது. சாக்‌ஷியும், அவரது கணவரும் காலை வந்திருந்தனர். 8.30 மணியளவில் நீதிமன்ற வளாகத்தினுள் இருந்த அவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய சிலர், அஜிதேஷை காரில் கடத்தி சென்றனர். நீதிமன்ற வளாக சிசிடிவி காட்சிகளைக்கொண்டு கடத்திய காரின் நம்பரை கண்டறிந்துள்ளனர். இந்த கார் ஆக்ராவைச் சேர்ந்தது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.