Skip to main content

“ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பிஜேபி பேரம் பேசுகிறது” - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு 

Published on 26/08/2022 | Edited on 26/08/2022

 

KEJRIVAL

 

ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்க பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 

 

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு, கலால்துறை ஆணையர் கோபிகிருஷ்ணாவின் அலுவலகம் உள்பட 21 இடங்களில் ஓரிரு தினங்களுக்கு முன்பு சோதனை நடந்தது. "14 மணிநேரங்களுக்குள் நான் கைது செய்யப்படலாம்" என மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் தெரிவித்தது அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.  

 

இந்நிலையில் டெல்லியில்  ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க 800 கோடி ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பாரதிய ஜனதா கொடுக்க முயலுவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.  சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் கட்சியைச் சேர்ந்த 62 எம்.எல்.ஏக்களில் 53 பேர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்திற்கு பிறகு  செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்  "சில நாட்களுக்கு முன்  மணீஷ் சிசோடியாவின் மீது பொய் வழக்கு பதிந்து  அவரை கைது செய்தது மேலும் அவரது இடங்களில் 12 மணிநேரங்கள்  சிபிஐ ஆய்வுசெய்தது. ஆனால் அவர்கள் எந்த ஒரு ஆவணங்களையும் கைப்பற்றவில்லை" எனக் கூறிய அவர்  மணீஷ் சிசோடியாவை கட்சியிலிருந்து விலகுமாறு பாரதிய ஜனதா வற்புறுத்தி வருவதாக  குற்றம் சாட்டினார்.

 

இது மட்டுமின்றி ஆம் ஆத்மி  ஆட்சியைக் கவிழ்க்க 40 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில் 40 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலா 20 கோடி வழங்க பாஜக தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட பாரதிய ஜனதா கட்சியின் பேரத்தை ஏற்காதது மகிழ்ச்சி தருவதாக கெஜ்ரிவால்   குறிப்பிட்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க பணம் எங்கிருந்து கிடைத்தது என பொதுமக்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என அவர் குற்றம் சாடியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.