Skip to main content

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்த பாஜக!

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருந்த நிலையில் கடந்த தேர்தல் முதல் சரிய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த 17- வது மக்களவை தேர்தலுடன், நான்கு மாநில சட்ட மன்ற தேர்தல்களும் நடைபெற்றது. இதில் ஆந்திர மாநிலத்தில் மொத்தம் உள்ள 170 சட்டமன்ற தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்.கட்சி 151 இடங்களை கைப்பற்றி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.அதனைத் ஹதொடர்ந்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி விரைவில் ஆந்திரா மாநில முதல்வராக பதவி ஏற்கிறார். அதே போல் ஒடிஷா மாநிலத்தில் மொத்தம் உள்ள 146 சட்டமன்ற தொகுதிகளில் பிஜு ஜனதா தள கட்சி 112 இடங்களை கைப்பற்றி தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராக பதவி ஏற்கிறார் பிஜு ஜனதா தள கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக்.

 

 

naveen patnaik

 

 

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக தனித்து 38 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக அம்மாநில முதல்வர் பெமா கந்தூ பதவி ஏற்கிறார்.இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 2 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிக்கிம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில் அம்மாநிலத்தின் முக்கிய கட்சியான சிக்கிம் மோர்ச்சா கட்சி 17 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.