Skip to main content

மத்திய அமைச்சர் கைது! 

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Arrested Union Minister!

 

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்திற்கு இந்த வருடத்தின் இறுதியில் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது. 

 

கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியே கடந்த இரண்டு முறையும் சட்டமன்றத் தேர்தலில் வென்று தொடர்ந்து ஆட்சியை நடத்தி வருகிறது. இந்நிலையில், 2023ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியே ஆட்சியை பிடிக்கும் என சொல்லப்படுகிறது. 

 

அதேசமயம், ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸும், பாஜகவும் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. பா.ஜ.க. சார்பில், அம்மாநில பா.ஜ.க. தலைவராக சமீபத்தில் மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் தற்போது தெலங்கானாவில் பா.ஜ.க. செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சியை கண்டித்து 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை பா.ஜ.க. தலைவரும், மத்திய அமைச்சருமான ஜி.கிஷன் ரெட்டி அறிவித்தார். அதன்படி நேற்று ஹைதராபாத் இந்திரா பார்க்கில் போராட்டம் நடைபெற்றது. ஆனால், போலீஸ் அனுமதித்த நேரத்தையும் கடந்த கிஷன் ரெட்டி போராட்டத்தை தொடர்ந்ததால், அங்கு அதிகளவிலான போலீஸார் குவிக்கப்பட்டனர். அதேபோல், அந்த இடத்தில் அதிகமான பா.ஜ.க.வினர் குவிந்தனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

Arrested Union Minister!

 

இந்நிலையில், தெலங்கானா போலீஸார் அனுமதித்த நேரத்தைக் கடந்து பா.ஜ.க. தலைவரும், மத்திய அமைச்சருமான ஜி.கிஷன் ரெட்டியிடம் போராட்டத்தை முடிக்கும்படி கூறியது. ஆனால், அவர் தொடர்ந்து ஹைதராபாத் இந்திரா பார்க்கில் போராட்டம் நடத்தியதால் அவரை தெலங்கானா போலீஸ் நேற்று இரவு கைது செய்தது. பிறகு அவரை விடுவித்தது. 

 

இந்தக் கைது குறித்து மத்திய அமைச்சரும், தெலங்கானா பா.ஜ.க. தலைவருமான ஜி.கிஷன் ரெட்டி தனது எக்ஸ் சமூகவலைத்தளப்பக்கத்தில், “எங்களின் கைது கே.சி.ஆர்.-ன் தோல்வி. தெலுங்கானா மக்களின் உரிமைக்காக போராட்டம் தொடரும். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான பா.ஜ.க.வின் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்கவும், வேலையற்ற இளைஞர்களின் கவலைகளை கவனிக்காமல் புறக்கணிக்கவும் கே.சி.ஆர். அரசால் முடியாது” என்று பதிவிட்டுள்ளார். 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தெலங்கானா டிஜிபி சஸ்பெண்ட்; தேர்தல் ஆணையம் அதிரடி

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Telangana DGP suspended; The Election Commission is in action

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதனையடுத்து மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரப்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 63 இடங்களையும், பிஆர்எஸ் 40 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், பிற கட்சியினர் 8 இடங்களையும் பிடித்துள்ளனர்.

 

இந்த சூழலில் தெலங்கானா மாநில போலீஸ் டிஜிபி அஞ்சனிகுமார், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான ரேவந்த் ரெட்டியை இன்று சந்தித்து வாழ்த்து கூறியிருந்தார். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி தேர்தல் முடிவுகள் முழுமையாக வருவதற்கு முன்பாகவே தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரான ரேவந்த் ரெட்டியை சந்தித்தாகக் கூறி தெலங்கானா போலீஸ் டிஜிபி அஞ்சனிகுமாரை சஸ்பெண்ட் செய்து இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

''அமலாக்கத்துறையை வைத்து தேர்தலுக்கு பணம் வசூலிக்கும் பாஜக''-முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி குற்றச்சாட்டு 

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

former MLA Balabharti accused of collecting money for elections using the enforcement department

 

திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவரிடம் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற புகாரில் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் மாவட்டச் செயலாளர் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

 

செய்தியாளர்களிடம் பேசுகையில், ''வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேவையான பணத்தை வசூலிப்பதற்காக பாஜக அமலாக்கத்துறையை தற்பொழுது பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை மத்திய அரசின் அடியாள் துறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதி அளிக்காமல் துணை ராணுவத்தை அலுவலகம் முன்பு கொண்டுவந்து நிறுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் சோதனை செய்ய அனுமதி அளிக்க முடியாது எனக் கூறுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. விசாரணை செய்ய காவல்துறையினர் வருகை தந்தால் அவர்களை அனுமதிப்பது தான் ஜனநாயக முறையாகும். ஆனால் அனுமதிக்க முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

இது அராஜக போக்காகும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய  அமலாக்கத்துறை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தான் நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவிடம் பேசியுள்ளார். உள்துறை அமைச்சகத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி எப்படி இவ்வாறு பேச முடியும். ஆகவே உள்துறை அமைச்சகத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளது. ஆகவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இது சாதாரண விஷயம் இதனை அரசியல் ஆக்காதீர்கள் லஞ்சம் வாங்குவது என்பது அனைத்து துறைகளிலும் உள்ளது என பொதுப்படையாகக் கூறி வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மத்திய அரசையும், அமலாக்கத்துறையும் காப்பாற்றும் விதமாக பேசி வருகிறார். மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேர்தல் செலவுக்காக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மேலும் மாநில அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது'' என்று கூறினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்