Skip to main content

வேண்டுகோள் விடுத்த அனுராக் தாகூர்; திருப்புமுனை கொடுக்குமா டெல்லி போலீஸ்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

nn

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டி டெல்லி சந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இருப்பினும் அரசு சார்பில் யாரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் விரக்தியிலிருந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அவர்களது பதக்கங்களை ஆற்றில் வீச நேற்று மாலை 6 மணிக்கு கங்கை நதிக்கரையில் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு கூடிய விவசாய சங்கத்தினர் மல்யுத்த வீரர் வீராங்கனைகளை தடுத்ததோடு ஐந்து நாட்களில் நடவடிக்கை எடுக்க விட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

 

 Anurag Tagore who appealed; The investigation report of the Delhi Police is turning point

 

இந்தநிலையில் பாலியல் குற்றச்சாட்டில் விசாரணை முடியும் வரை காத்திருங்கள் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். 'டெல்லி காவல்துறை விசாரணையை முடிக்கும் வரை காத்திருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்,  'மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. உரிய நடவடிக்கை வீரர்களுக்கு ஆதரவாக எடுக்கப்படும் என்ற உத்தரவாதமும் கொடுக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.

 

குற்றச்சாட்டில் சிக்கிய பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங்  இன்று செய்தியாளர்கள் சந்தித்துப் பேசுகையில், 'என் மீது எந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தாலும் அதை எதிர்கொள்ள தயார். காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் வழங்கும் எந்த ஒரு தண்டனையும் தான் ஏற்கத் தயாராக இருக்கிறேன்' என தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில் டெல்லி போலீசாரின் விசாரணை அறிக்கை தான் இந்த விவகாரத்தில் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் இந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என டெல்லி காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஐந்து நாட்கள் மட்டுமே விவசாய சங்கத்தினர் மத்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் காலக்கெடு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.