Skip to main content

தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் அஜித் பவாருக்கு வாழ்த்து தெரிவித்த அமித்ஷா!

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

நேற்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 

amitsha

 

 

இந்த கூட்டத்திற்குப் பிறகு சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ஏற்க வேண்டும், அதேபோல் கூட்டணியின் தலைவராக அவரே இருக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே இதுகுறித்து தனது கருத்து என்ன என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் மும்பையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இந்த தகவலை தெரிவித்திருந்தார்.

இன்று இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது திடீரென மஹாராஷ்டிரா ஆளுநர் முன்பு மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டனர். 

இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில், முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ், துணை முதலமைச்சர் அஜித் பவார், இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இந்த கூட்டணியானது மஹாராஷ்டிரா மக்களின் நலனையும், மாநிலத்தில் வளர்ச்சியையும் கருத்தில் நிலையாக பணிபுரியும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்