Skip to main content

வடிவேல் பாணியில் திருடிய திருடர்கள்...

Published on 09/10/2018 | Edited on 09/10/2018

 

aaa

 

 

அகமதாபாத் அருகே காந்திநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் ஐந்து பேர்கொண்ட கும்பல் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அரவிந்த் பட்டேல் என்பவரின் வீட்டில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் மற்றும் கல்பனா சுக்லா என்பவரின் வீட்டில் இருந்து ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களையும் திருடிச்சென்றுள்ளனர். 

இதனைத்தொடர்ந்து கொள்ளையடித்த கும்பல் யார் என்று பார்க்க அங்குள்ள சி.சி.டிவி-ஐ போலீசார் சோதித்தபோது. அந்த ஐந்து பேரில் ஒருவன் அங்கு சி.சி.டிவி இருப்பது தெரிந்தும் அதன்முன் நடனமாடிவிட்டு சென்றிருக்கிறான் என்பது தெரியந்துள்ளது. தற்போது அந்த வீடியோ சமூகதளங்களில் வைரலாகிவருகிறது.

சார்ந்த செய்திகள்