Skip to main content

“கெஜ்ரிவாலின் பேச்சு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை” - ஆம் ஆத்மி எம்.பி விமர்சனம்

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Aam Aadmi swati maliwal MP criticizes arvind kejriwal

டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பியுமான ஸ்வாதி மாலிவால், போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி காலை ஸ்வாதி மாலிவால் போலீசாரை தொடர்புகொண்டு, டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் மீது கடந்த 16ஆம் தேதி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வந்தனர். 

இதனையடுத்து, டெல்லி போலீசார் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தாக்கப்பட்டதாக கூறும் ஸ்வாதி மாலிவால், பா.ஜ.க முகமாக இருக்கிறார் என்றும், பா.ஜ.கவின் சதி திட்டத்தின் அடிப்படையில்தான் அவர் பொய் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்றும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகிறது. 

Aam Aadmi swati maliwal MP criticizes arvind kejriwal

மேலும், இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (22-05-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கிறேன். நீதி வழங்கப்பட வேண்டும். நிகழ்வின் இரண்டு பதிப்புகள் உள்ளன. இரு தரப்பையும் போலீசார் நியாயமாக விசாரித்து நீதி வழங்க வேண்டும்” எனக் கூறினார்.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சு முரணாக உள்ளது என ஸ்வாதி மாலிவால் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் முழு இராணுவத்தையும் என் மீது கட்டவிழ்த்துவிட்டு, என்னை பாஜக ஏஜென்ட் என்று அழைத்த பிறகு, என் குணத்தை படுகொலை செய்த பிறகு, எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை கசியவிட்ட பிறகு, பாதிக்கப்பட்ட என்னை அவமானப்படுத்துவது, குற்றம் சாட்டப்பட்டவருடன் சுற்றித் திரிவது, குற்றம் நடந்த இடத்திற்கு அவரை மீண்டும் அனுமதிப்பது, சாட்சியங்களை சிதைப்பது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய முதல்வர், இறுதியாக அவர் இந்த விஷயத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை விரும்புவதாகக் கூறுகிறார். முரண்பாடு ஆயிரம் முறை மரணித்துவிட்டது. இந்தப் பேச்சு எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை” என்று பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கெஜ்ரிவாலின் உதவியாளர் தாக்கிய விவகாரம்; ராகுல்காந்திக்கு ஸ்வாதி மாலிவால் பரபரப்பு கடிதம்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 Swati Maliwal wrote letter to Rahul Gandhi for Kejriwal's aide case

டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பியுமான ஸ்வாதி மாலிவால், போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி காலை ஸ்வாதி மாலிவால் போலீசாரை தொடர்புகொண்டு, டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் மீது கடந்த 16ஆம் தேதி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

இதனையடுத்து, டெல்லி போலீசார் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தாக்கப்பட்டதாக கூறும் ஸ்வாதி மாலிவால், பா.ஜ.க முகமாக இருக்கிறார் என்றும், பா.ஜ.கவின் சதி திட்டத்தின் அடிப்படையில்தான் அவர் பொய் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்றும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகிறது. 

இந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களான ராகுல்காந்தி, உத்தவ் தாக்கரே, சரத் பவார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டவர்களுக்கு ஸ்வாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ‘கடந்த 18 வருடங்களாக களத்தில் பணியாற்றி, 9 ஆண்டுகளில் 1.7 லட்சம் வழக்குகளை மகளிர் ஆணையத்தில் விசாரித்துள்ளேன். யாருக்கும் பயப்படாமல், யாருக்கும் தலைவணங்காமல், மகளிர் ஆணையத்தை மிக உயரிய நிலையில் நிறுத்தியிருக்கிறேன். ஆனால், முதல்வர் வீட்டில் என்னை மோசமாகத் தாக்கியதும், பிறகு என் குணத்தை இழிவுபடுத்தியதும் மிகவும் வருத்தமாக உள்ளது.

முதல்வரின் உதவியாளர் தாக்கிய விவகாரத்தில் என்னுடைய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை. மேலும், அவர்கள் திட்டமிட்டு, என்னுடைய நடத்தை குறித்து விமர்சனம் செய்தனர். எனது குணாதிசயங்கள் மீதான இடைவிடாத தாக்குதல்களை நான் எதிர்கொண்டேன். கடந்த ஒரு மாதமாக, நீதிக்காகப் போராடும் போது எதிர்கொள்ளும் முதல் வலியை நான் சந்திக்கிறேன். இன்று இந்த விவகாரம் தொடர்பாக இந்தியக் கூட்டணியில் உள்ள அனைத்து பெரிய தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். நான் எல்லோருடனும் சந்திக்க விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

Next Story

“எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை” - ஆம் ஆத்மி அதிரடி முடிவு!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
No alliance with any party Aam Aadmi Action Decision

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அந்த வகையில் நாட்டின் தலைநகரான டெல்லியில் மொத்தம் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளையும் பாஜக தான் வென்றது. மேலும் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் டெல்லி சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்துக் கூறும்போது, ​​“மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது என்பது கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே தெளிவாகிறது. சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரையில் எந்த கூட்டணியும் அமைக்கப்படவில்லை. ஆம் ஆத்மி கட்சி தனது முழு பலத்துடன் தேர்தலில் போட்டியிடும்.

இந்தியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது என்பது ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக உள்ளது. நாங்கள் மக்களவை தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட்டோம், ஆனால் டெல்லி சட்டமன்ற தேர்தலில், நாட்டில் உள்ள எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. டெல்லி மக்களுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.