Skip to main content

குஜராத் தேர்தலில் காங்கிரசை பின்னுக்குத் தள்ளி முன்னேறும் ஆம் ஆத்மி

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 
- தெ.சு.கவுதமன்

 

BJP

 

குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில்  நடைபெற உள்ளதால், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் உள்ளன. இம்முறை அங்கே பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

காங்கிரஸ் தரப்பில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும், ராகுல் காந்தி இங்கு பிரச்சாரம் செய்வதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் நடைப் பயணத்தில் மட்டுமே தீவிர கவனத்தில் இருப்பது காங்கிரஸ் தொண்டர்களின் உற்சாகத்தைக் குறைத்துள்ளது. ஆம் ஆத்மி தரப்பில் கெஜ்ரிவால் தீவிரப் பிரச்சாரத்தில் உள்ளார்.

 

BJP

 

குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் இருக்கும் பா.ஜ.க.வுக்கு இந்தத் தேர்தல் சவாலானதாக இருக்குமா என்று பார்த்தால், அதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. கடந்த சில தேர்தல்களில் பா.ஜ.க.வா? காங்கிரஸா? என்றிருந்த களத்தில் இம்முறை ஆம் ஆத்மி பெரும் நம்பிக்கையோடு களமிறங்கியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் 77 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. பா.ஜ.க. 49% வாக்குகளையும், காங்கிரஸ் 41% வாக்குகளையும் பெற்றிருந்தது.

 

கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடைந்திருக்கிறது. அதேவேளை ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் காங்கிரஸை வாஸ் அவுட் செய்து ஆட்சியைப் பிடித்துள்ளது. எனவே ஆம் ஆத்மி கட்சி மீதான நம்பிக்கை, தற்போது குஜராத் வாக்காளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பா.ஜ.க.வுக்கு மாற்று காங்கிரஸ் என்ற நிலை மாறி, தற்போது பா.ஜ.க.வுக்கு மாற்றுக் கட்சியாக ஆம் ஆத்மி வளர்ச்சியடைந்து வருகிறது. இது காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியைத்தான் பெருமளவு பாதிக்கிறது.

 

BJP

 

கொள்கை ரீதியாகப் பார்க்கும்போதும், பா.ஜ.க. தன்னை இந்துத்துவா கட்சியாகக் காட்டிக்கொள்வதுபோல் ஆம் ஆத்மியும் தன்னை இந்துத்துவா கட்சியாகத்தான் முன்னிறுத்துகிறது. அதேவேளை, பண மதிப்பிழப்பு, பொருளாதாரச்சரிவு, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது போன்றவற்றால் பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரும்பும் வாக்காளர்களை மொத்தமாக ஆம் ஆத்மி அறுவடை செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் புதிதாக வாக்களிக்கும் இளைஞர்களின் நம்பிக்கையையும் ஆம் ஆத்மி பெற்று வருகிறது.

 

குஜராத்தில் பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்கள் தொகை 20% என்ற அளவில் உள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 40% ஆக உள்ளது. இவர்களைக் குறிவைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளார். பா.ஜ.க.வின் ஜி.எஸ்.டி. கொள்கைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை கெஜ்ரிவால் வைத்து வருகிறார். கடந்த 27 ஆண்டுகளாக இம்மாநிலத்தை பா.ஜ.க. ஆட்சி செய்தும், இன்னும் மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காத கிராமங்கள் அதிகமிருப்பதாகக் குற்றம்சாட்டி வருகிறார். டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக 800 கோடி ரூபாய்க்கு விலை பேசியதையும் சுட்டிக்காட்டிப் பேசி வருகிறார். அவரது பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

BJP

 

பா.ஜ.க.வோ தனது பிரச்சாரத்தில் ஆம் ஆத்மியைவிட காங்கிரசைத்தான் வழக்கம்போல் டார்கெட் செய்து வருகிறது. இப்படியான சூழலில், பா.ஜ.க.வுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியில் 20% அளவுக்கு ஆம் ஆத்மி பாதிப்பை ஏற்படுத்துமென்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பா.ஜ.க.வுக்கே அதிக சாதகமாக இருக்கும் என்பதால் இரு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், முதல் கட்டத்தில் பா.ஜ.க.வை எதிர்க்கும் ஆம் ஆத்மி, இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியிலும் சேதத்தை அதிகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இன்றைய சூழலில் ஆம் ஆத்மி எந்த அளவுக்கு வாக்குகளைப் பிரிக்கப்போகிறது. எந்தெந்த கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே குஜராத் தேர்தல் முடிவுகள் இருக்குமென்று தெரிகிறது. குஜராத் தேர்தல் முடிவில் காங்கிரசை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆம் ஆத்மி இரண்டாமிடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. ஆக, ஆம் ஆத்மியால் காங்கிரசுக்குத்தான் பெரிய ஆப்பு என்பது உறுதியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.