ஹரியானா மாநிலம் குருகிராமில் 15 ஆவது மாடியில் இருந்து குதித்து 94 வயது மூதாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த 94 வயது மூதாட்டி ஒருவர் 15 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதுமை பிரச்சனை ஒருபுறம் அவரை வாட்டி வதைத்த நிலையில், தன்னை யாரும் சரியாக பார்த்துக்கொள்ளாததால் மனமுடைந்த அவர் இன்று மாலை குடியிருந்த வீட்டின் மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் அவர் சம்பவம் இடத்திலேயே பலியானார். காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.