குஜராத்தில் மாநிலத்தில் 90 கோடி மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆம்புலன்ஸ் மூலம் போலி ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக, குஜராத் மாநில காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சூரத் மாவட்டத்திற்கு உட்பட்ட காம்ரேஜ் காவல்துறையினர், தீவிர வாகன தணிக்கையிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழித்தடத்தில் வந்த ஆம்புலன்ஸை மறித்து சோதனை செய்த காவல்துறையினர், அதில் 'REVERSE BANK OF INDIA' என அச்சிடப்பட்ட 25 கோடி ரூபாய் போலி நோட்டுகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, நடத்தப்பட்ட சோதனையில் ஒட்டுமொத்தமாக 90 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.