Skip to main content

75 வயதில் தொழிலதிபருக்கு இரண்டாவது திருமணம்

Published on 19/11/2022 | Edited on 21/11/2022

 

Tamil Nadu government has decided to give saree and vetti in a new design!

 

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள ஹுப்பள்ளி நகரைச் சேர்ந்தவர் தொழிலதிபரும், அரசியல் பிரமுகருமான சௌகான். இவரது நான்கு மகன்களுக்கும் திருமணம் முடிந்து மருமகள்கள், பேரக்குழந்தைகள், கொள்ளுப்பேரன்கள் என மொத்தம் 27 பேர் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், சௌகானின் மனைவி சாரதாபாய் மூன்று மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். மனைவியின் மறைவுக்கு பிறகு மன உளைச்சலில் இருந்த முதியவர் டி.கே.சவுகானுக்கு, மற்றொரு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, மூன்று மாதங்கள் கழித்து இறந்து போன சாரதாபாயின் மூத்த சகோதரி அனுஷ்யாவை டி.கே.சவுகானுக்கு மணமுடித்து வைத்தனர். 

 

குடும்பத்தினர்கள் ஒன்றிணைந்து தாத்தா, பாட்டியின் திருமணத்தை கோலாகலமாக நடத்தியுள்ளனர். திருமணத்தில் குடும்பத்தினர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். 

 

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சௌகான், "திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்றால், மனைவியை இழந்து தனிமையில் உள்ள நபர்களிடம் கேளுங்கள், அதன் வலி என்ன என்று. மனைவி இல்லாமல் வீடு என்பது கிடையாது. திருமணம் வெறும் காதலுக்காக மட்டுமல்ல. அனைத்து விதத்திலும் ஒருவரையொருவர் அரவணைத்துக் கொண்டு உதவியாக இருப்பது. அதன் அடிப்படையில் நான் திருமணம் செய்து கொண்டேன்" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.