Skip to main content

'34 ஆண்டுகளாக அட்டகாசம்; 44 உயிரிழப்புகள்' - மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய அரசிக் கொம்பன்

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

 '34 years ; 44 live loss'-Arisikomban who started the game

 

தமிழக கேரளா எல்லைப் பகுதியான மூணாற்றில் கடந்த 34 ஆண்டுகளாக அட்டகாசம் செய்து வரும் ஒற்றைக் காட்டு யானை அரிசிக் கொம்பன். இந்த காட்டு யானையின் தாக்குதலில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். அரிசிக் கொம்பன் யானையைப் பிடிக்க ஏற்பட்ட பல்வேறு தடைகளுக்குப் பிறகு மீண்டும் அரிசிக் கொம்பனைப் பிடிக்க வேண்டும் என்ற போராட்டம் மூணாற்றில் வலுத்து வருகிறது.

 

மீண்டும் பல வருடங்களுக்குப் பின்பு அரிசிக் கொம்பன் தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது என அந்தப் பகுதி விவசாயத் தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

இதற்கு முன்பே அரிசிக் கொம்பன் அட்டகாசத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊருக்குள் புகுந்து வீடுகளைத் தாக்குவதோடு ரேஷன் கடைகளை குறிவைத்து தாக்கி அதில் இருக்கும் அரிசிகளை சாப்பிடுவதால் அரிசிக் கொம்பன் என்ற அடைமொழியுடன் இந்த காட்டு யானை அழைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு அரிசிக் கொம்பன் யானையைப் பிடிக்க கேரள உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல அமைப்பு தடை வாங்கிய நிலையில் அதன் அட்டகாசம் தொடர்ந்து அதிர வைத்தது.

 

சில ஆண்டுகளாக அரிதிலும் அரிதாக மட்டுமே காட்டுப் பகுதியிலிருந்து வெளியே வரும் அரிசிக் கொம்பன் தற்பொழுது அடிக்கடி ஊருக்குள் புகும் செயல் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அண்மையில் வனத்துறை ஊழியர் ஒருவர் அரிசிக் கொம்பனின் தாக்குதலில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து அரிசிக் கொம்பனை படிக்க பல்வேறு வலியுறுத்தல்கள் எழுந்த நிலையில், இதற்காக சின்னக்கல் பகுதிக்கு நான்கு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. அதேநேரம் யானையைப் பிடிக்கக் கூடாது என மீண்டும் விலங்குகள் நல அமைப்பு கேரளஉயர்நீதிமன்றத்தினை நாடியுள்ளது. இதனால் அதிர்ச்சியில் இருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.