Skip to main content

30 லட்சம் ரூபாய் கார்... டெலிவரி எடுத்த சில வினாடிகளில் நேர்ந்த அதிர்ச்சி!

Published on 25/06/2020 | Edited on 25/06/2020

 

hj

 

அனைவருக்கும் காரில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும். அதுவும் சொந்த கார் வாங்கி அதில் செல்வது என்றால் அனைவருக்கும் அலாதியான சந்தோஷம் இருக்கும். 

 

இந்நிலையில் வடமாநிலத்தைச் சேர்ந்த வினித் என்பவர் நீண்ட நாட்களாக விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். நீண்ட முயற்சிக்குப் பிறகு சில நாட்களுக்கு முன்பு கியா கார்னிவர் காரை ஷோரூமில் இருந்து விலை கொடுத்து வாங்கியுள்ளார். காரை பார்த்த அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார். என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த அவரிடம், விற்பனை பிரதிநிதி "சார், நீங்க காரை ஓட்டிபார்க்கிறீர்களா" என்று கேட்டுள்ளார். சரி, என்று அந்த இடத்திலேயே அவரும் காரை ஓட்ட முயற்சித்துள்ளார். பதட்டத்தில் இருந்த அவர் அங்கிருந்த சுவர் ஒன்றின் மீது காரை மோதியுள்ளார். இதில் கார் பலத்த சேதமடைந்தது. இந்தச் சம்பவத்தின் புகைப்படம் தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 
 

 

சார்ந்த செய்திகள்