Skip to main content

வழிவிடலனா மேல ஏத்துவேன்.. போலீஸை மிரட்டிய இளம் பெண்!

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

26 years woman threatened to police in madhya pradesh

 

இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாத கடல் இணைப்பு பாலத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த பெண் ஒருவர், காவல்துறையினரோடு வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

மத்திய பிரதேச மாநிலம் மும்பையில் பாந்தா- வொர்லி கடல் இணைப்பு பாலம் ஒன்று இருக்கிறது. இந்த பாலத்தில் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 26 வயது பெண் ஒருவர் இந்த பாலத்தில் இருசக்கர வாகனம் மூலம் வந்துள்ளார். அப்போது, கடல் இணைப்பில் இருசக்கர வாகனத்தில் பயணித்து தெற்கு மும்பை நோக்கி ஒரு பெண் செல்வது குறித்து பாதுகாப்பு ஊழியர்கள் மும்பை காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், கடல் இணைப்பு பாலத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர்கள், அந்த பெண்ணிடம் இந்த பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு அனுமதியில்லை என்று கூறியுள்ளனர். அப்போது அந்த பெண், காவல்துறையினரோடு மிரட்டும் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

 

அந்த வீடியோவில், “காவல்துறையினர் அந்த பெண்ணிடம் சாலையில் ஒரு ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி இறங்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர். அதற்கு அந்த பெண், ‘என்னை தடுக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?. இந்த சாலை என் தந்தைக்கு சொந்தமானது. நான் வரி செலுத்துகிறேன். அதனால் இந்த சாலையில் விரும்பியதை நான் செய்வேன். என்னை விடவில்லையென்றால், என் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்று உங்கள் மேல் ஏத்திவிடுவேன்”  என்று மிரட்டல் விடுத்து பேசுகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், ஜபல்பூரைச் சேர்ந்த நுபுல் படேல் என்பது தெரியவந்தது. மேலும், அவர் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கட்டிட கலைஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் புனேவில் உள்ள தனது சகோதரரை பார்க்க கடந்த 15ஆம் தேதி புனேவிற்கு வந்திருந்தார். மேலும், அவர் மும்பையில் உள்ள பாந்தரா-வொர்லி கடல் இணைப்பை பார்ப்பதற்காக தனது சகோதரரின் இரு சக்கர வாகனத்தின் மூலம் புனேவில் இருந்து வந்து கொண்டிருந்த போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்தது. 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த குடுமி பிடி சண்டை; காவல் நிலையம் முன்பு  பரபரப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரைச் சேர்ந்தவர் வாலிபர் ஒருவர். இவர் நகரின் மையப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் வாலிபருக்கும் அவரது நண்பனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் முறையற்ற தொடர்பாக மாறியதால் வாலிபர் வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் வாலிபரின் தந்தை திடீரென உயிரிழந்து விட்டார். தந்தையின் இறுதிச்சடங்குகள் செய்ய வாலிபர் தனது வீட்டிற்கு சென்றார். இறுதி சடங்குகள் முடிந்ததும் வாலிபரின் மனைவி, கணவரை முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் செல்லவிடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

கடந்த ஒரு வார காலமாக வாலிபருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண் அவரை பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை,  அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பெண் வாலிபரை பல இடங்களில் தேடினார். அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற அப்பெண் வாலிபர் வசித்து வரும் வாடகை வீட்டின் கண்ணாடிகளை கல் வீசி தாக்கியதோடு அங்கேயே கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் கடை வாலிபர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு வாலிபர் புகார் அளிக்க வந்திருப்பது குறித்து தெரிந்தது, உடனே அவர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அப்போது அங்கு வந்து இருந்த  வாலிபரை பிடித்த அந்தப்பெண் 'என்னுடன் வாழு வா' என சட்டையை பிடித்து இழுத்தார். அவர் வர மறுத்ததால் அவரை தாக்கினார்.

 

இதை பார்த்து கோபமான வாலிபரின் மனைவி, 'என் கணவரையா அடிக்கற' என கணவரின் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணை தாக்கினார். இது நகர காவல் நிலையம் முன்பாக  நடைபெற்றது. இரண்டு  பெண்களும் காவல் நிலையம் முன்பாக கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியான போலீசார், அவர்களை சமாதானம் செய்ய வந்து அடித்துக்கொண்ட இருவரையும் விலக்கி விட்டனர். அவர்கள்  போலீசாரையும் தள்ளிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

 

இதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரும், அங்கேயே உள்ள அனைத்து மகளிர் பெண் போலீசாரும் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

தொடங்கியது நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

 Counting of votes for four state assembly elections has begun

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது.

 

தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்குவதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மட்டும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை அங்கு தேவாலயங்களில் வழிபாடு நடக்கும் என்பதால் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற கோரிக்கைகள் எழுந்தது. அதனைத்தொடர்ந்து மிசோரமில் மட்டும் வாக்கு எண்ணிக்கையானது நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.  இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்