![15 passed away including 4 children as boat sinks; What about the rest? Tension in Kerala](http://image.nakkheeran.in/cdn/farfuture/GYnteG9ZesoqVWv99ZhqgbtSaM-QdIeEmp76-7NAa7I/1683481392/sites/default/files/inline-images/11_226.jpg)
கேரள மாநிலம் மலப்புரத்தில் தனூர் பரப்பனங்காடி கடற்கரையில் படகு சவாரி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற படகு சவாரியில் 40 பேர் பயணம் செய்த சுற்றுலா படகு திடீரென நீரில் மூழ்கியது. இதில் 30 பேர் நீரில் மூழ்கினர்.
நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 16 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகளும் அடக்கம். படகின் அடியில் பலர் சிக்கி இருக்கலாம் என்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு இருந்தவர்கள் கூறுகின்றனர். படகைக் கரைக்குக் கொண்டு வரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் தனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தனூர் பகுதியில் உள்ள ஒருவரது இல்ல விழாவிற்குக் கலந்து கொள்ள வந்தவர்கள் படகு சவாரி செய்ததும் அப்போது படகு கவிழ்ந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் சுற்றுலாத்துறை அமைச்சர் ரியாஸ்கான் மற்றும் அப்துல் ரகுமான் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். 10 பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை விபத்திற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி, கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்ததில் 16 பேர் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.