உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 11,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

jkl

Advertisment

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1076 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் பலியாகி உள்ளனர். 11,439 பேர் மொத்தமாக இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9756 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். 1306 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்ககள். 377 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளார்கள்.