Skip to main content

இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது! 

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

There is no mega vaccination camp this week!

 

இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்துவந்தது. அதனைத் தொடர்ந்து மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்தன. அதேபோல், தமிழ்நாட்டிலும் கரோனாவின் இரண்டாம் அலை வேகமெடுக்க துவங்கியது. ஆனால், தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தியது. இதில் முக்கிய பங்காக கரோனா தடுப்பூசி பார்க்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவதில் மக்களுக்கு முதலில் சிறிய தயக்கம் இருந்தது. ஆனால், அரசின் தொடர் விழிப்புணர்வால் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. அதேபோல், தமிழ்நாடு அரசு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்திவந்தது. அதன்பிறகு அதனை சனிக்கிழமைக்கு மாற்றி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுவந்தது. 

 

இந்நிலையில், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற வேண்டிய மெகா தடுப்பூசி முகாம் வரும் 14ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் நாளை (06.11.2021) நடைபெறவிருந்த 8வது மெகா தடுப்பூசி முகாம் வரும் 14ஆம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) மாற்றப்பட்டுள்ளது. தீபாவளி தொடர்விடுமுறை காரணமாக இந்த வார தடுப்பூசி முகாம் அடுத்த வாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேபோல், தொழிற்சாலை ஊழியர்களுக்கான தடுப்பூசி முகாம் அடுத்த வாரம் சனிக்கிழமைக்குப் பதில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் - பூஸ்டர் டோஸ் செலுத்துக்கொள்ள அறிவுறுத்தல்

Published on 07/08/2022 | Edited on 07/08/2022

 

corona Vaccination Camp in Tamil Nadu today

 

தமிழகத்தில் இன்று கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது.

 

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என ஒரு வார்டுக்கு 10 வீதம் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

 

இந்த முகாமில், ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸும் செலுத்தப்படுகிறது.பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளும்படி தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

 

Next Story

தமிழகத்தில் 31- வது கரோனா தடுப்பூசி முகாம் துவங்கியது!

Published on 10/07/2022 | Edited on 10/07/2022

 

The 31st corona vaccination camp has started in Tamil Nadu!

 

தமிழகம் முழுவதும் இன்று (10/07/2022) ஒரு லட்சம் இடங்களில் 31-வது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 

 

கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிப் போடும் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்த மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 11 கோடியே 45 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் இரண்டாவது தவணை செலுத்தாதவர்கள், ஆறு மாத கால இடைவெளியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என மாநிலத்தில் 1 கோடியே 45 லட்சம் பேர் உள்ளனர். 

 

அவர்கள் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 78 லட்சத்து 78 ஆயிரம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.