Skip to main content

அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

Tamil Nadu government case against enforcement department; High Court action order

 

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக  மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 10 அதிகாரிகளுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், “குவாரிகளில் மணல் எடுக்கும் விவகாரம் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் வராது. தனது அதிகார வரம்பை மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதனையடுத்து அமலாக்கத்துறைக்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (27.11.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானர். அவர் வாதிடுகையில், “மாநில அரசின் வழக்குகளில் மத்திய அரசு தலையிடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை எதிர்த்து வழக்குகளை தாக்கல் செய்ய அதிகாரம் உள்ளது. மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அதிகாரம் இல்லை. அமலாக்கத்துறையின் நடவடிக்கை இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கூட்டாட்சி மீதான தாக்குதலாகும். சட்ட விரோத மணல் குவாரிகள் நடத்துவது தொடர்பாகவும், கனிம வள வழக்குகளை மாநில அரசு விசாரணை நடத்தலாம் என்பது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரம் ஆகும்.

 

அமலாக்கத்துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. குறிப்பாக குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் எந்த நடவடிக்கையும் இல்லை. பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சம்மன் அனுப்புவதன் மூலம் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சங்கடத்தை ஏற்படுத்துகிறது. யாருக்கு வேண்டுமானாலும் சம்மன் அனுப்பும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை. சம்மன் அனுப்ப முடியாது. மாறாக உதவி செய்ய வருமாறு கோரிக்கை அல்லது அழைப்பை அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை விடுக்கலாம். மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்தும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு கிடையாது. இந்த வழக்கின் மூலம் மத்திய அரசின் அதிகார எல்லை தொடர்பான தீவிரமான கேள்வி எழுகிறது” வாதத்தை முன் வைத்திருந்தார்.

 

Tamil Nadu government case against enforcement department; High Court action order

 

அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி வாதிட்டார்.  அப்போது அவர், “ஆரம்ப கட்டத்திலேயே மாவட்ட ஆட்சியாளர்களின் மனுவை எதிர்த்தோம். 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. எனவே அதனை விசாரிக்க அதிகாரம் உள்ளது” என தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “குற்றத்தை கண்டுபிடித்துவிட்டீர்களா. மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, “மோசடி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தான் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்றைய தினம் (28.11.2023) உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

Tamil Nadu government case against enforcement department; High Court action order

 

இந்நிலையில் 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இது குறித்து 3 வாரத்திற்குள் மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சமீபத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர். 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.