Skip to main content

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பெண் மருத்துவர் உட்படப் பல பெண்களிடம் பழகி வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞா்!

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


பொள்ளாச்சி பாணியில் வசதி வாய்ந்த பெண்களிடம் நெருங்கிப் பழகி அதை வீடியோவாக எடுத்து கடைசியில் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த நாகா்கோவில் கணேசபுரத்தைச் சோ்ந்த சுஜி என்ற காசி குறித்து சென்னையைச் சோ்ந்த பெண் டாக்டா் ஒருவா் கன்னியாகுமரி எஸ்பி ஸ்ரீநாத்-க்கு இ-மெயிலில் புகார் அனுப்பியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் கோட்டார் போலீசார் சுஜியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

nagercoil - young man


சுஜியின் தந்தை தங்கபாண்டியன் நாகா்கோவிலில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். பள்ளியில் படிக்கும்போதே பெண்களுக்கு காதல்வலை வீசி பழகிபோன சுஜி, நாளடைவில் அதைத் தொழிலாக வைத்து கொண்டு பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தான். இதற்காக ஆயுதமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கைத் தொடங்கி பயன்படுத்தினான்.
 

சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சுஜி பல்வேறு பெயா்களில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்கை வைத்து கொண்டு அதில் தொடா்பை ஏற்படுத்தும் வசதியான பெண்களை செலக்ட் செய்து அவா்களிடம் தன்னுடைய அன்பான பேச்சால் அவா்களுடைய இதயங்களில் இடம் பிடித்து நெருங்கிப் பழகி, கடைசியில் தன்னுடைய நெருக்கத்தை ஓட்டல் அறைகளில் முடித்து அதை வீடியோவாகவும் எடுத்து விடுவார். 
 

http://onelink.to/nknapp

 

இப்படித் தான் பெண் மருத்துவா் ஒருவா் சுஜியின் இன்ஸ்டாகிராமில் விழுந்து அவனுடன் நெருங்கிப் பழகியுள்ளார். தன்னை ஒரு பெரும் தொழிலதிபா் எனக் காட்டி கொண்ட சுஜி, அந்தப் பெண் மருத்துவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அவருடன் தன்னுடைய தேவைகளை எல்லாம் முடித்து கொண்டு பல லட்சங்களையும் பல தருணங்களில் வாங்கியுள்ளான்.
 

இந்த நிலையில் ஒரு நாள் அந்தப் பெண் மருத்தவா் சுஜியின் செல்போனை பார்த்துள்ளார். அதில் உள்ள போட்டோக்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். செல்போனில் தன்னுடன் நெருங்கிப் பழகியதை போல் 50-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பழகிய புகைப்படங்களும் அவா்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களும் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் மருத்துவா் சுஜியுடன் தகராறு செய்து பேச்சை நிறுத்திக்கொண்டார். 
 

இதையடுத்து சுஜி, அந்தப் பெண் மருத்துவரை தொடர்பு கொண்டு தன்னுடன் இருந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளான். இதனால் அந்தப் பெண் மருத்துவா் தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இதையடுத்து தான் 24-ம் தேதி அந்தப் பெண் மருத்துவா் வழக்கறிஞா் புருஷோத்தமன் மூலம் கன்னியாகுமரி எஸ்.பி.க்கு இ-மெயில் மூலம் அனுப்பிய புகாரின் பேரில் போலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனா். இது குறித்து கோட்டார் போலீசார் கூறும்போது, சுஜி என்ற காசி மீது ஐபிசி 354, 354 சி, 354டி, 385, 420, 66 ஏ, 66இ, 67 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவன் ஏராளமான வசதியான பெண்களை ஏமாற்றி லட்சக் கணக்கில் பணம் பறித்து வீடியோவும் எடுத்துள்ளான். இதை இவன் தனியாக மட்டும் செய்ய வில்லை. நண்பா்கள் சிலா் இதில் தொடா்பு இருப்பதாகத் தெரிகிறது. அவனுடைய செல்போன் மூலம் தொடா்பில் இருப்பவா்களைக் கண்டுபிடிக்க முடியும் என்றார். இந்த விவகாரம் பெள்ளாச்சி பாலியல் போல் தொடரும் என்கின்றனா்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.