Skip to main content

கொங்கு மண்டல தோல்வி! திமுக செய்ய வேண்டியது என்ன? 

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

ddd

 

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றி தமிழக முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின். இந்த பரபரப்பான சூழலில், கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற கருத்து தமிழக அரசியல் விமர்சகர்களிடமும் தேர்தல் வியூக வல்லுநர்களிடமும் எதிரொலிக்கச் செய்கிறது. 

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக ஆதரவு அரசியல் விமர்சகர்கள், "திமுக கூட்டணி 200 இடங்களைக் கடந்து வெற்றிபெறும் என திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எதிர்பார்த்திருந்தன. அதே எதிர்பார்ப்பு தேர்தல் வியூக வல்லுநர்களிடமும் இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. காரணம், கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான தோல்விதான். இந்த சரிவுக்கு காரணம் என்ன? 

 

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டையாக வைத்திருந்தனர். ஆட்சியிலும் கட்சியிலும் கொங்கு வேளாளர் சமூகத்தினருக்கு அதிகமான முக்கியத்துவம் தந்திருந்ததால் கொங்கு மண்டலம் அதிமுகவின் ஆதரவு மண்டலமாகவே இருந்து வந்தது. இதில், ஜெயலலிதா தனது ஆட்சியில் கொங்கு வேளாள சமூகத்தினரை வலிமையான துறைகளுக்கு அமைச்சர்களாக்கினார். அந்த வலிமையான துறைகள் மூலம் அந்த அமைச்சர்களால் கொங்கு மண்டலத்தில் அதிமுகவை வலிமையாக்க முடிந்தது. கொங்கு மண்டலத்தில் தொடர்ச்சியாக பலமுறை ஜெயித்து கொங்கு வேளாளர் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவர்களையே அமைச்சர்களாக்கியதால் அச்சமூகத்தின் ஆதரவு அதிமுகவுக்கு கிடைத்து வந்தது. அதனை திமுகவால் உடைக்க முடியவில்லை. 

 

இந்த நிலையில்தான், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற முயற்சி எடுத்தது திமுக தலைமை. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனால்தான், தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் கைகொடுக்கவில்லை. அந்த வகையில், சில திட்டமிடல்களில் திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகிறது. 

 

அதாவது, தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள திமுகவிடம் ஆட்சி அதிகாரம் 5 ஆண்டுகள் இருக்கப்போகிறது. இந்த 5 ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தை வலிமையாக்கும் திட்டமிடல் திமுகவுக்கு அவசியம். குறிப்பாக, கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ.க்களில், அச்சமூகத்தில் செல்வாக்கு பெற்றவர்களைக் கண்டறிந்து அவர்களை முக்கியத் துறைகளுக்கு அமைச்சர்களாக்க வேன்டும். இதுபோன்ற சில எம்.எல்.ஏ.க்களை அமைச்சர்களாக்கி அவர்களுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்படும்போதுதான் கொங்கு வேளாளர் சமூகம் திமுகவை திரும்பிப் பார்க்கும். 

 

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி போன்றவர்களை முக்கிய இலாகாக்களுக்கு அமைச்சர்களாக்கி ஜெயலலிதா அழகு பார்த்ததால்தான் கொங்கு வேளாளர் சமூகமும் அதிமுகவை தொடர்ந்து ஆதரித்தது. அது, இந்த தேர்தலிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோன்ற அணுகுமுறையை திமுக கையிலெடுத்தால்  மட்டுமே அடுத்த 5 ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற முடியும். அதனால்தான், கொங்கு மண்டல அரசியலில் வழக்கமான பாணியையே திமுக கடைபிடிக்காமல்  சில விசயங்களில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று சுட்டிக்காட்டுகிறார்கள்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.