Skip to main content

பணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்!

Published on 14/02/2020 | Edited on 03/03/2020

குழந்தை பராமரிப்பு வேலை, வீட்டு வேலை என்று ஏஜெண்டுகள் மூலமாக மலேசியா, சிங்கப்பூருக்கு செல்லும் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இப்போது சென்னை ஆவடியைச்சேர்ந்த ஜெயலட்சுமி, மலேசியாவில் ஒரு கும்பலிடம் சிக்கித்தவித்து நக்கீரன் எடுத்த அதிரடி முயற்சிகளால் அப்பெண் மீட்கப்பட்டுள்ளார்.

 

incident



ஆவடியைச்சேர்ந்த கால்டாக்சி டிரைவர் கோதண்டராமன் மனைவி ஜெயலட்சுமி. கணவர் வருமானம் குடும்பம் நடத்த போதவில்லை என்று ஓட்டல் வேலைக்கு சென்றுவந்தார். அப்போது அனுஷியா என்ற வெளிநாட்டு ஏஜெண்டு அவருக்கு அறிமுகம் ஆனார். குழந்தையை மட்டும் பார்த்துக்கொள்ளும் வேலை; 50 ஆயிரம் சம்பளம் என்றதும், ஜெயலட்சுமி மலேசியா செல்ல முடிவெடுத்தார். பிளஸ்டூ படிக்கும் மகளுக்கும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனுக்கும் ஸ்கூல் பீஸ் கட்ட வசதியாக இருக்கும் என்று ஜெயலட்சுமி சொன்னதால், கோதண்டராமனும் இதற்கு ஒத்துக்கொண்டார். மலேசியா செல்ல 50 ஆயிரம் ரூபாயை அனுஷியாவிடம் கொடுத்தார்கள். வேலூரைச் சேர்ந்த முகமது இம்ரான் மூலமாக கடந்த அக்டோபர் மாதம் மலேசியா சென்றார் ஜெயலட்சுமி.

சொன்னபடியே அங்கே குழந்தை பராமரிப்பு வேலை மட்டும் இல்லை. வீட்டு வேலைகள் அத்தனையையும் ஓய்வின்றி செய்யச் சொல்லி கொடுமைப்படுத்தினார்கள். தூங்கக்கூட முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளானார் ஜெயலட்சுமி. "தூங்கக்கூட முடியாத அளவுக்கு வேலை அதிகமாக இருக்கு. என்னால இதுக்குமேல இங்க இருக்கமுடியாது, ஊருக்கே அனுப்பி வச்சிடுங்க...' என்று, மலேசியா ஏஜெண்டுகள் வினோத், சரளாவிடம் அழுதார். "மூணு மாசம் கழித்து, வேறு வேலை வாங்கித் தருகிறோம். அதுவரை சமாளித்துக்கொண்டிரு' என்று ஆறுதல் சொல்லிவிட்டனர். ஆனால், மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அதே வீடுதான் அதே வேலைதான்.

 

incident



இதற்கிடையில் ஜெயலட்சுமியின் உடல்நிலையும் மிகவும் மோசமானது. இதற்கு மேலும் அங்கே இருந்தால் தனது பிணம்தான் ஊருக்கு செல்லும் என்று நினைத்த ஜெயலட்சுமி, அங்குள்ள ஒருவரின் மூலமாக கணவனை தொடர்புகொண்டு, அழுதிருக்கிறார்.

கோதண்டராமன் இது தொடர்பாக வினோத், சரளாவிடம் பேசியபின்னர், மூன்று மாதம் சம்பளம் என்று 76 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு கோதண்டராமன் பலமுறை முயன்றும் கூட ஜெயலட்சுமியிடம் பேசவே முடியவில்லை.

மனைவி கொடுமைப்படுத்தப்படுகிறாள் என்பதை உணர்ந்த கோதண்டராமன், "ஜெயலட்சுமியை ஊருக்கே அனுப்பி வைத்துவிடுங்கள்' என்று கெஞ்சினார். அதற்கு, "2 லட்சம் அனுப்பி வை. உன் பொண்டாட்டியை அனுப்பி வைக்கிறோம். இல்லேன்னா பொய் கேஸ் போட்டு ஜெயில்ல போட்டுவிடுவோம்'’என்று மிரட்டினார்கள்.


"மனைவியை மீட்டுத் தாருங்கள்' என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கோதண்டராமன் புகார் கொடுத்தார். அவர்கள், ஆவடி போலீஸ் ஸ்டேசனுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆவடி போலீஸ் ஸ்டேஷன்ல அனுஷியாவையும், இம்ரானையும் விசாரிச்ச எஸ்.ஐ., ‘அவுங்க சொல்ற மாதிரியே சுமுகமா முடிச்சிக்கோங்க'' என்று கை விட்டுவிட்டார்.

இந்த நிலையில், கோதண்டராமன் நக்கீரனை தொடர்புகொண்டு கண்ணீர் வடித்தார். உடனே, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் நேரடியாக புகார் மனு கொடுத்தோம். பின் கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, துணைக் கமிஷனர் உதவியுடன் வழக்குப் பதிவு செய்து, வெளிநாடு வாழ் தமிழக நல ஆணையர் தினேஷ்பொன்ராஜ் ஆலீவர் ஐ.ஏ.எஸ். மூலம் இந்திய தூதரகம் மற்றும் மலேசிய வெளியுறவுத் துறைக்கு புகார் அனுப்பப்பட்டது .


கலெக்டர் உதவியுடன், மலேசியாவில் செயல்படும் தன்னார்வலர் பாத்திமாவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. அந்த பாத்திமாவே ஒரு ஏஜெண்டு என்பதுடன், சரளாவுடன் சேர்ந்து கொண்டு அவரும் பணம் கேட்டு மிரட்டியது அதிர்ச்சியானது.

நடந்தவை அனைத்தையும் பின்னர் கலெக்டரிடம் கூறினோம். அதன் பின்னர் நடந்த முயற்சியினால், ஏழு நாட்கள் கழித்து ஜெயலட்சுமியை பேச வைத்தார்கள். ஆனாலும், ’பணம் தராவிட்டால் பொய்வழக்கில் ஜெயிலுக்கு அனுப்புவோம்’ என்றே மிரட்டி வந்தனர். இதையடுத்து, லண்டனில் உள்ள அப்துல் பாஷித் என்ற தன்னார்வலரான தமிழர் மூலம் மலேசியன் ஹைகமிஷனுக்கு அழுத்தம் தரப்பட்டது.

இந்த நிலையில், அப்துல் பாஷித் மற்றும் துணைக்கமிஷனர் நாகஜோதியின் அறிவுறுத்தலின்படி, 80 ஆயிரம் ரூபாய்க்கான தேதி குறிப்பிடாத காசோலைகள் கொடுக்கப்பட்டு ஜெய லட்சுமி மீட்கப்பட்டார்.

அடுத்தகட்ட நட வடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

மீட்கப்பட்ட ஜெய லட்சுமி நம்மிடம் பேசிய போது, "நக்கீரன் இல்லை என்றால் என் குழந்தைகள் இன்று என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது''’என்று சொல்லிவிட்டு அழுதார். அவர் மேலும், "உன் வீட்டுக்காரனால பணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட் டுப்போ'’’என்று சொல்லி அடித்து சித்ரவதை செய்தார்கள். நான் மீட்கப்பட்டுவிட்டேன். ஆனால், நான் இருந்த அறையில் இன்னொரு தமிழ்நாட்டுப் பொண்ணும், ஒரு வடமாநிலத்துப் பொண்ணும் சிக்கித் தவிக்கிறார்கள்''’என்று அதிரவைக்கிறார்.

 

 

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.