Skip to main content

‘ஆண்களின் மனப்போக்கு அவமானத்திற்குள் தள்ளுகிறது’ - ஒரு பெண் எழுத்தாளரை புலம்பவைத்த பதிப்பாளர்

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

Woman Writer complaint on publisher Sendhuram Jagadeshan

 

ஒரு எழுத்தாளரால், எழுத்து மூலம் தன்னையும் தன் வலியையும் மற்றவர்களுக்கு எளிதாகக் கடத்திவிடமுடியும். அப்படி ஒரு வலியைத்தான் பொதுவெளியில் கடத்தியிருக்கிறார் ஒரு பெண் எழுத்தாளர். அவருடைய மனக்குமுறல், அவரது வரிகளிலேயே.. ‘என்னுடைய புத்தகத்தை பப்ளிஷ் பண்ணணும்னு ஒருவரை சந்திக்கச் சென்றிருந்தேன். சில மோசமான நிகழ்வில் இருந்து தப்பித்து வந்ததில் இருந்து எவரையும் தனித்து சந்திக்க விருப்பம் இருந்தது இல்லை. எனக்கு ஆண்கள் மூலம் வரக்கூடிய எந்த வித offerகளையும் தவிர்த்தே வந்தேன். என்னுடைய யூட்யூப் சேனலிற்கு promote செய்து தருகிறேன் என்று கூறியவர்களையும் கூட மறுத்துவிட்டேன்.

 

நீண்ட காலமாக உடலரசியல் புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆசையின் பொருட்டு எழுதலாம் என்று இருந்தேன்.  எப்போதும் தானாக வரும் opportunityயைக்கூட அலசி ஆராய்ந்தே ஏற்றுக் கொள்ளும் பழக்கம் உண்டு எனக்கு. ஒரு இரு மாதத்திற்கு முன்பு ஒரு பப்ளிகேஷன் முதலாளி, அவர் பப்ளிகேஷனில் எழுத முடியுமா என்று கேட்டிருந்தார். சரி என்று அதைப் பற்றி பேச ஒரு மாலில் காபி சாப்பிட்டுக் கொண்டு பேசலாம் என்று சம்மதித்திருந்தேன். அவ்வப்போது அது தள்ளிச் செல்ல,  இன்று கண்டிப்பாக சந்திப்பதாக உறுதி அளித்திருந்ததால் சென்றேன்.

 

என்னை விட ஒரு இருபது வருடங்கள் மூத்தவராக இருக்கக்கூடும். முதன் முதலில் சந்திக்கிறேன். எந்தவித முகநூல் தொடர்புமே கிடையாது. இருந்தும் சுற்றிச் சுற்றி வளைத்து அவர் சொன்னது இதுதான். அவரின் உடல் தேவைக்கு நான் மனது வைக்க வேண்டும் என்று. இங்கு நான் உடலரசியல் எழுதுகிறேன். உடல் தேவையைப் பற்றி பேசுகிறேன் என்றால் என்னையே கூப்பிட்டுவிடுவார்களா? என்று மனதுக்குள் பற்றி எரிந்தாலும்,  அமைதியாக மிகத் தெளிவாக பொறுமையாக அவரிடம் எடுத்துச் சொன்னேன்.

 

Woman Writer complaint on publisher Sendhuram Jagadeshan

 

“நான் குடும்பத்தில் இருக்கிறேன். கணவரோடும் குழந்தையோடும் மிக மிக சந்தோஷமாக இருக்கின்றேன். எனக்கும் ஆண் நண்பர்கள் உண்டு. அவர்கள் எப்போதும் வெறும் நண்பர்கள் மட்டும் தான். எப்போது எல்லைகள் மீறுகிறார்களோ, அப்போது அந்த உறவு அத்தோடு துண்டிக்கப்பட்டுவிடும். Strictly I am not that kind of girl..” என்று பொறுமையாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

 

போன வாரம் அவர் என்னை முகநூலில் காணாமல்,  சனிக்கிழமை போகும் கோவிலுக்கு தேடி வந்ததாகவும், அங்கேயே எனக்காக குறிப்பிட்ட நேரத்தில் காத்திருந்ததாகவும்,  அங்கு யானை பக்கத்தில் நின்று எடுத்த புகைப்படத்தையும் காண்பித்தார். பொதுவெளியில் இங்கு போகிறேன், அங்கு போகிறேன் என்று, புகைப்படம் அங்கு சென்று வந்து போடுவது கூட எவ்வளவு தவறு என்று அப்போதுதான் புரிந்தது. 

 

புதிதாக மரியாதைக்குரிய பெரியவரை சந்திக்கச் செல்கின்றேன் என்று நல்ல நீட்டான சல்வாரில் துப்பட்டாவை எல்லாம் மடித்துப் போட்டுக்கொண்டு, மறைக்க வேண்டியதை எல்லாம் மறைத்துக்கொண்டு சென்றும்,  அவருடைய  பார்வை அவ்வப்போது உடலை அளவெடுத்துக் கொண்டிருந்தது எரிச்சலாக இருந்தது. யாரையும் நான் பசியோடு அனுப்பி வைத்ததில்லை. வாங்க சாப்பிடலாம் என்று பூடமாக அவர் சொன்னதை உணர்ந்து,  எனக்கு காபியின் கசப்பே இன்னும் நாக்கில் ஒட்டிக் கொண்டிருந்ததால், உணவு செரிக்காது வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். திடமாக,  திமிராகப் பேசிவிட்டு வந்துவிட்டாலும்,  உள்ளுக்குள் அத்தனை அழுத்தமாக, அவமானமாக இருந்தது.  பலவந்தப்படுத்தவில்லைதான். ஆனாலும், இதுபோன்ற ஆண்களின் மனப்போக்கு அவமானத்திற்குள் தள்ளுகிறது.

 

அப்படியென்றால், என் எழுத்துகளில் நிஜமாகவே அரங்கேற்றம் கொள்ளும் அளவுக்கு ஏதுமில்லையா?  என்னை நெருங்கும் ஆண்களிடம் why should I? என் முகத்தைப் பார்த்தா, இவளை ஈஸியா ஏமாத்திடலாம்னு தெரியுதா? Am I a sex doll? எனக்கென்று உணர்ச்சிகள் எதுவும் இல்லையானு நாலு அறைவிட்டு கேட்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் எத்தனை கனவுகளோடு ஒரு opportunityயை நோக்கிப் போய்,  இதுபோல் எதாவது நடந்து தொலைந்து,  ஒரு மூளையில் போய் முடங்கிக் கொண்டு அழ வைத்துவிடுகிறது.

 

எதன் பொருட்டு வருகிறார்கள்? எதன் பொருட்டு அன்பு செலுத்துகிறார்கள்? பின்பு எது கிடைக்கவில்லை என்று விட்டுவிட்டு செல்கிறார்கள்? என்பதே பல சமயம் புரியாத குழப்பத்தோடு இருக்கும்போது,  நானெல்லாம் எதுக்கு எழுதறேன்? எனக்கெல்லாம் என்ன வெங்காயம் தெரியும்? என்று உள்மனம் செருப்பால் அடிக்குது.’ என்று கொட்டித் தீர்த்திருக்கிறார். 

 

அந்தப் பெண் எழுத்தாளருக்கு  ‘மனக்காயத்தை’ ஏற்படுத்தியவர் யார்? 

 

தனியார் சேனல் ஒன்றில் புதையல் என்ற பெயரில் எழுத்தாளர்கள் வாழ்க்கை குறித்த ஆவணப்படங்களையும், சிற்றிதழ்களின் வரலாற்றையும்,  22 வாரங்களுக்கு அரைமணி நேர நிகழ்ச்சியாக வழங்கியவர் செந்தூரம் ஜெகதீஷ். இவர், அந்தப் பெண் எழுத்தாளருடனான வலைத்தள அரட்டையில், ‘உன்னை நான் கைப்பிடிச்சு இழுத்தேனா? உனக்கு சம்மதம்னா இணங்கு,  புத்தகம் பிரசுரிக்கிறேனுதானே சொன்னேன். என்கிட்ட எந்தப் பொண்ணு வந்தாலும் இணங்கிப் போய்தான் புக்கு போடுவா. பெரிய சீதாப்பிராட்டினு நெனப்பா உனக்கு? சும்மா செய்வாங்களா உதவி உனக்கு? என்கிட்ட ஏற்கனவே புக்கு போட்ட பொண்ணு நீ என்னை பத்தி போஸ்ட் போட்டத எடுத்துட்டு வந்து தந்தா. பப்ளிக்கா போஸ்ட் போடவேண்டியதுதான? அவதான் என்கிட்ட சொன்னா, நீ பலபேருகிட்ட போகக்கூடிய பொம்பளைனு. என்னை கிழவன்னு எழுதிருக்கியாம். கிழவன்னா கசக்குமா உனக்கு? உடலளவில் நான் கிழவன் இல்லை.’ என்று பிதற்றியிருக்கிறார். 


ஒருகட்டத்தில் செந்தூரம் ஜெகதீஷ்  ‘ஒரு சிறிய பிரியத்தைத்தான் கேட்டேன். எதுவும் வேண்டாம். என்னிடம் உனக்கு விருப்பம் இல்லை என்று பலமுறை நீயும் சொல்லிவிட்டாய். உன்னை நீ மூடிக்கொள். உனக்கு பிடித்தவர்களுடன் பேசு. எனக்கு எதுவும் வேண்டாம். என்னைவிட்டு தூரமாகவே விலகியிரு. நானும் என்றாவது உன்னைவிட்டு விலகிவிடுவேன். உன் அழைப்பு கேட்க முடியாத தூரத்தில் போய்விடுவேன். இன்னொரு அழகான தேவதை, மாமா என்று என்னை அழைக்கும்போது, வாழ்க்கை விரட்டிவிடுபவர்களை விடவும், அழைப்பவர்களை நோக்கித்தான் ஓடுகிறது.’ என்று உருகியிருக்கிறார்.

 

அந்தப் பெண் எழுத்தாளரோ, ‘புள்ளைப்பூச்சினு நினைச்சேன். அப்படி இல்லை போல. ஒரு பெண் அவனை (செந்தூரம் ஜெகதீஷ்) பத்தி அனுப்பிய ஸ்க்ரீன்ஷாட்டுகள், நூறுக்கும் கிட்ட. பொண்ணுங்க No-னு சொன்னா No-னு புரியாம திரும்பத் திரும்ப டார்ச்சர் பண்றதுக்கு பேரு அறிவீனம். அவனுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் இருக்கு’ என்று குமுறலை வெளிப்படுத்தியதோடு, ‘என் கணவருக்கு இந்த விவகாரம் தெரிந்துவிட்டதால், என்னால் இதை எளிதாகக் கையாள முடிகிறது. நாளையோ, நாளை மறுநாளோ என்னை என் கணவரோடு சந்திக்கத் தயாராக இருங்கள். தவறு செய்திருக்கும் பட்சத்தில் உகந்த தண்டனை கிடைக்கப்பெறும்’ என்று செந்தூரம் ஜெகதீஷை எச்சரித்திருக்கிறார். 


தனக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு பெண் எழுத்தாளர்கள் சிலரிடம் ஆதாரங்கள் இருப்பதாக நம்புவதாலோ என்னவோ, தன்னுடைய முகநூல் பக்கத்தில் தன்னைப் பற்றிய சுயவிபரங்களை புதியவர்கள் யாரும் தெரிந்துகொள்ளக்கூடாதென்று, தற்போது ‘lock’ செய்திருக்கிறார். செந்தூரம் ஜெகதீஷை அவருடைய கைபேசி எண் 98******37-ல் தொடர்புகொண்டு விளக்கம்பெற முயற்சித்தபோது, தொடர்ந்து ‘switch-off’ நிலையிலேயே இருந்தது. வாட்ஸ்-ஆப்பில் குறுந்தகவல் அனுப்பினோம். அவருடைய ஜி-மெயிலுக்கும் கடிதம் அனுப்பினோம். அவரிடமிருந்து பதில் இல்லை. அவர் தன்னுடைய கருத்துகளையோ, விளக்கத்தையோ நம்மிடம் பகிரும் பட்சத்தில் அதனை வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.  

 

பாட்ஷா திரைப்படத்தில், மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவியை கெஸ்ட் ஹவுசுக்கு வரச் சொல்வார் அந்தக் கல்லூரி நிர்வாகி. ஒரு பெண் எழுத்தாளரின் புத்தகத்தை பப்ளிஷ் பண்ணுவதற்காக, அதே ரீதியில் பேசியிருக்கிறார் செந்தூரம் ஜெகதீஷ்.

 

இந்த ஆபாச அழைப்பு குறித்து இன்னொரு பெண் எழுத்தாளர், “கிண்டில், பிரதிலிபி, பிஞ்ச், புஸ்தகா போன்ற தளங்களும், ஸ்டோரிடெல், குக்கூ எப்.எம்., பிரதிலிபி எப்.எம். போன்ற ஆடியோ நாவல் செயலிகளும், இன்னும் எத்தனையோ வலைத்தளங்களும் உள்ளன. புத்தகமாக அச்சிட்டுத்தான் ஆகவேண்டுமென்றால், நோஷன்பிரஸ் போன்ற நிறுவனங்கள் இருக்கின்றன. இல்லை, புக்பேர்ல புக் வைக்கிற பதிப்பகம்தான் வேண்டுமென்றால், pod முறையில் பதிப்பித்து விற்றுத் தரவும், பல பதிப்பகங்கள் தயாராக இருக்கின்றன. புத்தகத்தின் கருவை/கொள்கையை அடிப்படையாக வைத்து இயங்கும் பதிப்பகங்கள் பல உள்ளன. எனினும், முற்காலம் போல, புத்தக பதிப்பிப்பிற்காக, என்னென்னவோ நடப்பதெல்லாம் / நடக்க வேண்டுமென எதிர்பார்ப்பதெல்லாம் கேட்கவே விசித்திரமாக உள்ளது. எந்த நூற்றாண்டில் வாழ்கிறார்கள் இவர்களெல்லாம்?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

 

 

Next Story

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.  

Next Story

ஏ.வி. ராஜு மீது கருணாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Complaint against AV Raju in Karunas Police Commissioner's office

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்திருந்தார். அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு த்ரிஷாவுக்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான், விஷால் உள்ளிட்டவர்கள் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே ஏ.வி. ராஜு, “என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என வீடியோ வெளியிட்டிருந்தார். 

கூவத்தூர் விவகாரத்தில் த்ரிஷாவை சம்பந்தப்படுத்தி பேசியபோது கருணாஸ் குறித்தும் பேசியிருந்தார். இந்த நிலையில், ஏ.வி. ராஜு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். மேலும் அவரது பேட்டியை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.