Skip to main content

குஜராத்தில் இந்தியின் நிலை என்ன?

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்தி பேசுவதாக கூறுவதை தொடர்ந்து பாஜக தலைவர்கள் கூறிவருகிறார்கள். ஆனால், இந்தி பேசும் அவர்கள் கூடுதலாக ஏதேனும் மொழியை கற்றிருக்கிறார்களா என்பதை சொல்லவே மாட்டார்கள்.

இந்தி பேசும் மாநிலங்களில் நடக்கும் தேர்வுகளில் இந்தித் தேர்வுகளில்கூட பெரும்பான்மை மாணவர்கள் தோல்வி அடைந்த செய்திகளை அப்படியே மூடி மறைத்து விடுவார்கள்.

 

 What is the status of Hindi in Gujarat?


2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மொழிவாரி கணக்கெடுப்பு 2018ல் வெளியிடப்பட்டது. அதில் இந்திய மக்கள் தொகையில் 43.63 சதவீதம்தான் இந்தியை தாய்மொழியாக கூறியிருக்கிறார்கள்.

இந்த கணக்கெடுப்பின்படி, இந்திய மாநிலங்களில் மத்திய மற்றும் வட இந்தியாவில் உள்ள சில மாநிலங்களைத் தவிர, பெரும்பாலானவை இந்தி பேசாத மாநிலங்களாக இருக்கின்றன. ஆனால், அவற்றில் சில இந்தியை இரண்டாவது மொழியாக தேர்வு செய்திருக்கின்றன.

பெரும்பாலான தென் மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தி பேச்சு மொழியாக இல்லை. அத்துடன் அவர்கள் இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை தேர்வு செய்திருக்கின்றனர்.

வட இந்தியாவில் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே இந்தியை முதல் மொழியாக வைத்திருக்கின்றன. இவற்றில் மொத்த ஜனத்தொகையில் 96 சதவீதத்திற்கு மேல் இந்தி பேசுகிறவர்களாக இருக்கிறார்கள்.

இந்தியாவின் முதல்மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும் என்று அமித் ஷா கூறியிருந்தார். ஆனால், அவருடைய மாநிலத்திலேயே இந்தி பேசும் மக்கள் 30 சதவீதத்திற்கும் கீழாகவே இருக்கிறார்கள்.

தென் மாநிலங்களும், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் தவிர்த்து மற்ற வடகிழக்கு மாநிலங்களும் மிகக்குறைந்த அளவே இந்தி பேசுகிறார்கள்.

மொத்தமுள்ள 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 23 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இந்தியை முதல் விருப்பமாக கொள்ளவில்லை. இந்த 23 மாநிலங்களிலும் 16 மாநிலங்களில் இந்தியை இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பமாக மிகமிகக் குறைந்த சதவீதம் பேர்தான் தேர்வு செய்கிறார்கள்.

குஜராத், மேற்கு வங்காளத்தில் மிகக்குறைந்த மக்களே இந்தி பேசுகிறார்கள். இந்தியாவிலேயே மிகக் குறைந்த அளவு இந்தி பேசுகிறவர்கள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள். மகாராஸ்டிரா, பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் குறைந்த அளவே இந்தி பேசும் மக்களைக் கொண்டிருக்கின்றன.

பெரும்பான்மை இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலம் பேசுகிறவர்கள் மிகமிக குறைவாக இருக்கிறார்கள். ஆனால், குறைவாக இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலம் பேசுவோர் சதவீதம் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 20.15 சதவீதமும், கேரளாவில் 18.49 சதவீதமும் ஆங்கிலம் பேசுகிறார்கள்.

இந்நிலையில்தான் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வகுத்திருக்கிறது. இந்த கொள்கையை இந்தி பேசாத மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. குறிப்பாக தமிழகம் கடுமையாக எதிர்க்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.