Skip to main content

பாம்பாட்டிகளின் முன்னேற்றத்துக்கு மோடி செய்தது என்ன?

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

இந்திரா குடும்பத்தினருக்கு துணிச்சல் புதிதல்ல. இந்திராவையே ஜவஹர்லால் நேரு துணிச்சலாகத்தான் வளர்த்தார். தாயில்லாத இந்திராவை விட்டுவிட்டு நேரு சிறையில் வாடியிருக்கிறார்.
 

priyanka gandhi


இந்திராவும்கூட சிறுவயதிலேயே தன் வயது பிள்ளைகளை சேர்த்துக்கொண்டு விடுதலைப்போராட்டத்தில் பிரச்சாரம் செய்திருக்கிறார். வானர சேனை என்ற பெயரில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு உதவி செய்திருக்கிறார்.
 

தந்தையின் செயலாளராக உலகைச் சுற்றி வந்திருக்கிறார். அமைச்சராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு மூத்த தலைவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்திருக்கிறார். பிரதமரான சமயத்தில் மூத்த தலைவர்களின் பிற்போக்குத்தனத்தை எதிர்த்து நாட்டின் முன்னேற்றத்துக்காக வங்கிகளை நாட்டுடைமை ஆக்கி, பசுமைப்புரட்சித் திட்டங்களையும், தொழிற்சாலைகளையும் செயல்படுத்தி இருக்கிறார். இதற்காக சோவியத் யூனியனை துணைக்கு வைத்து வறுமை ஒழிப்புத் திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறார்.
 

இந்தியாவுக்கு மேற்கிலும் கிழக்கிலுமாக இருந்த இரண்டு பாகிஸ்தான்களால் ஏற்பட்ட தலைவலியை போக்க, கிழக்கு பாகிஸ்தானை பிரித்து வங்கதேசம் என்ற தனி நாட்டை உருவாக்கிக் கொடுத்து உலகையே வியக்க வைத்திருக்கிறார். பிற்போக்குவாத தலைவர்களும் வலதுசாரி மதவாத தலைவர்களும் தனக்கு எதிராக திரண்டபோது, நெருக்கடி நிலையை கொண்டுவந்து சில நல்ல முயற்சிகளை நடைமுறைப்படுத்தினார். ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றபோதும், சில நிர்வாக ஒழுங்குகள் இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு மக்களுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
 

இந்திராவின் இரண்டு மகன்களில் இளைய மகன் சஞ்சய் காந்தி அரசியலில் சில அதிரடிகளை நடத்தி வளர்ந்து வந்த நேரத்தில் விமானப் பயிற்சியில் சாகசம் செய்யும் போது பலியானார். விமான ஓட்டியாக இருந்த ராஜிவ் காந்தியும் அரசியலுக்கு வந்தபோது துணிச்சலாக நவீன இந்தியா என்ற முழக்கத்தோடு புதிய பொருளாதார கொள்கையை  அறிமுகப்படுத்தி இன்றைய இந்தியாவின் அனைத்து வளர்ச்சி்க்கும் காரணமாக இருந்தார். அவர் கொல்லப்பட்ட பிறகு பாதுகாப்பு என்ற பெயரில் அவருடைய இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும், மனைவியும் அனுபவித்த தொல்லைகள் சாமானியர்களான நமக்கு புரியாது. இயல்பாக வாழமுடியாத நிலையில் வாழ்ந்த அந்தக் குழந்தைகளின் மனிதேநேயத்தை பார்க்கும்போதெல்லாம் மனம் கலங்கத்தான் செய்கிறது.

 

priyanka gandhi


மக்களுடன் நெருங்கிப் பழகும் அவர்களுடைய விருப்பத்தில் எந்த ஒளிவுமறைவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் கேலியும் கிண்டலும் செய்யும் அளவுக்கு பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் தரம் தாழ்ந்துபோயுள்ளனர்.
 

சாதாரண மனிதனாக இருந்து முன்னேறியதாக கூறிக்கொள்ளும் பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் சாமான்ய மக்களுடன் நெருங்கிக் கலந்த நிகழ்வுகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் பார்க்கவே முடியவில்லை. அம்பானி, அதானி, வேதாந்தா, மல்லையா, நிரவ்மோடி என்று பெரிய முதலாளிகளுடனும், பிரபலமான நடிகைகள், நடிகர்களுடன் மட்டுமே காட்சியளித்தவர் மோடி. போராடிய விவசாயிகளையோ, புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாமான்ய மக்களையோ சந்தித்து ஆறுதல் தெரிவிக்கக்கூட மறுத்த பிரதமர் மோடிக்கு மக்களோடு கலந்து பழகும் பிரியங்காவையும், ராகுல் காந்தியையும் பார்த்து எரிச்சல் வரத்தானே செய்யும்?
 

அதிலும் பிரியங்காவின் எதார்த்தமான நெருக்கம் பாஜகவினரை மிக மோசமாக பாதித்திருக்கிறது. அதிலும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் பாம்பு பிடிக்கும் மக்களுடன் அவர் எதார்த்தமாக பேசி, பாம்புகளை கையில் லாவகமாக பிடித்து விளையாடிய காட்சி பாஜகவினரை ரொம்பவே பாதித்து இருக்கிறது. பிரியங்காவின் பயமற்ற அந்த தன்மை, அடித்தட்டு மக்களுடன் அவர் நெருக்கமாக அமர்ந்து பேசும் அந்த பாங்கு பாஜகவின் அடிவயிற்றை கலக்கியிருக்கிறது. அதனால்தான், நேரு குடும்பத்தினர் இந்தியாவின் வறுமையை காட்டியே அரசியல் செய்வதாக பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

 

priyanka gandhi



இதற்காக அவர்கள் பிரதமர் நேரு 1962 ஆம் ஆண்டு தன்னை சந்திக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி கென்னடியின் மனைவி ஜாக்குலினுக்கு பாம்பாட்டி ஒருவரின் சாகசத்தை வேடிக்கை காட்டும் படத்தை வெளியிட்டுள்ளனர். பாம்பைப் பார்த்து பயப்படும் மக்கள் வாழும் உலகில் பாம்புகளை எவ்வித அச்சமும் இல்லாமல் கொடிய விஷப்பாம்புகளைக் கூட கைகளில் பிடித்து விளையாடும் மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பது நமக்கு ஒருவகையில் பெருமைதான் என்பதை பாஜகவினர் மறைக்கப் பார்க்கிறார்கள். இத்தனைக்கும் ஜாக்குலின் கென்னடி விருப்பத்தின் பேரிலேயே பாம்பாட்டியை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார் நேரு. அதையே கேலி செய்யும் பாஜகவினர் சோனியாவும் ராஜிவும்கூட பாம்பு ஒன்றை தொட்டுப்பார்த்து ரசிக்கும் படத்தையும் வெளியிட்டு சந்தோஷப்பட்டிருக்கலாம். 
 

இன்னொரு விஷயமும் இருக்கிறது. 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனது தாய் சோனியாவுக்கு ஆதரவாக ரேபரேலி தொகுதியில் பிரியங்கா பிரச்சாரம் செய்தபோதே படமெடுக்கும் பாம்பை அசால்டாக பிடித்து போஸ் கொடுத்தார். அப்போதே அந்தப் படம் பயங்கர வைரலாகியிருந்தது.
 

எனவே, பாம்பாட்டிகளுடன் பிரியங்கா நெருங்கிப் பழகியதில் உள்ள கள்ளம் கபடமற்ற மனிதநேயத்தை திசை திருப்புவதற்காக பாஜக எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும் அது பலிக்காது என்பதே நிஜம்.
 

பாஜகவின் கேவலமான இந்த பிரச்சாரத்தைத் தாண்டி அவர்களுக்கு நாம் ஒரு கேள்வியை முன்வைப்போம்…
 

60 மாதங்கள் இந்தியாவை என்னிடம் கொடுங்கள்… இந்தியாவை உலகின் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றிக் காட்டுகிறேன் என்று பிரதமர் பொறுப்புக்கு வந்த மோடி, இந்த பாம்பாட்டிகளின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு ஏதேனும் செய்திருந்தால் அதைச் சொல்லி பிரச்சாரம் செய்யலாமே…?

 

 

 

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.