Skip to main content

பசுமை சாலைக்காக முடக்கப்பட்டதா புதிய இரயில்வே பாதை ?. - வெளிவரும் புதிய தகவல்கள்

Published on 20/06/2018 | Edited on 20/06/2018

விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை திண்டிவனம் டூ ஜோலார்பேட்டைக்கு புதியதாக இரயில் பாதை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை. நீண்டகால கோரிக்கை கடந்த 2008ல் செயல்பாட்டுக்கு வந்தது. அந்த திட்டம் 4 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. அந்த திட்டம் நிறுத்தப்பட காரணம்மே சேலம் – சென்னை இடையிலான பசுமை வழி விரைவுச்சாலை திட்டம் தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 


திண்டிவனத்தில் இருந்து பெங்களுரூ செல்ல வேண்டும் என்றால் செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர் என 270 கி.மீ சாலை வழியாக பயணம் செய்து பெங்களுரூ செல்ல வேண்டும். திண்டிவனம் டூ கிருஷ்ணகிரி வரை இருவழிப்பாதை, அதுவும் கண்டும் குழியுமான சாலை. திண்டிவனத்தில் இருந்து பெங்களுரூ போய்சேர போய்ச்சேர 10 மணி நேரமாகிவிடும். இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்துகளில், கார்களில் பயணம் செல்கின்றனர். திண்டிவனத்தை விட செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, சிங்காரப்பேட்டை மக்கள் ஆயிரக்கணக்கில் பெங்களுருவில் உள்ளனர். அவர்கள் அனைவரும்மே பேருந்தையே பயன்படுத்துகின்றனர். இந்த மார்கத்தில் இரயில்பாதை அமைத்து இரயில் சேவை தொடங்கினால் மக்களின் பிரச்சனை தீரும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. இதனை பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்திவந்தது.
 


2004ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்துக்கொண்டு இருந்தபோது, அந்த அமைச்சரவையில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கு வகித்துக்கொண்டு இருந்தது. அப்போது மக்களின் நீண்ட கால கோரிக்கையான திண்டிவனம் டூ ஜோலார்பேட்டை, திண்டிவனம் டூ நகரி இடையே இரயில் பாதை அமைக்கும் திட்டத்தினை கொண்டு வந்தார் இரயில்வே இணை அமைச்சராக இருந்த வேலு. அதற்கான ஆய்வுக்கும் நிதி ஒதுக்கினார். திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு இரயில் சேவை கிடையாது. அதேபோல் திருவண்ணாமலையில் இருந்து பெங்களுரூக்கும் இரயில் சேவை கிடையாது. சென்னைக்கு இரயில் இயக்க வேண்டும்மென்றால் வேலூர், காட்பாடி வழியாகத்தான் இயக்கவேண்டும். அதேபோல் விழுப்புரத்தில் இருந்து பெங்களுரூக்கு ரயில் இயக்க வேண்டும் என்றாலும் திருவண்ணாமலை, வேலூர் காட்பாடி வழியாகத்தான் செல்ல வேண்டும். இது தலையை சுத்திக்கொண்டு மூக்கை தொடும் வேலை. இதுவே, திண்டிவனம் டூ ஜோலார்பேட்டைக்கு திருவண்ணாமலை வழியாக இரயில் பாதை அமைத்தால் வேலூர், காட்பாடி செல்லாமல் பெங்களுரூவுக்கும், சென்னைக்கும் திருவண்ணாமலையில் இருந்து செல்லலாம், நேரம் குறைவு, எரிபொருள் மிச்சம், வாரியத்துக்கும் நல்ல வருமானம் கிடைக்கும், இந்த ஒரு பாதையால் என இரயில்வே துறை அதிகாரிகள் கணக்கிட்டனர்.

 

Was the new railway path frozen for the green road? - new information coming out


 


திண்டிவனத்தில் இருந்து செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், சிங்காரப்பேட்டை, திருப்பத்தூர் வழியாக ஜோலார்பேட்டைக்கு 160 கி.மீ தூரம் இரயில்பாதை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக திண்டிவனம் டூ திருவண்ணாமலை இடையே முதலில் இரயில் பாதை அமைக்க 2008 செப்டம்பர் மாதம் செஞ்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. திண்டிவனம் டூ திருவண்ணாமலை இடையே 71 கி.மீ மின்பாதை 227 கோடி திட்டமதிப்பில் அமைப்பது என மத்தியரசு அறிவித்தது. இந்த பாதையில் 8 பெரிய பாலங்கள், 68 சிறிய பாலங்கள், திண்டிவனம் டூ திருவண்ணாமலை இடையே 8 இடங்களில் இரயில் நிலையங்கள் அமைப்பது எனவும், திருவண்ணாமலையை ஜங்ஷனாக மாற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக முதல்கட்டமாக 2008ல் 10 கோடி, 2009ல் 20 கோடி, 2010ல் 40 கோடி, 2011ல் 20 கோடி என மத்திய இரயில்வே துறை ஒதுக்கியது. சங்கராபரணி, வராகநிதி, துரிஞ்சலாறு கடக்கும் பகுதியில் மட்டும் இரயில்வே பாலங்கள் அமைக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலங்கள் கையகப்படுத்தி தரப்படும் வேலைகள் அடுத்து வந்த ஜெ ஆட்சிக்காலத்தில் நொண்டியடித்தன. இதனால் ஒதுக்கப்பட்ட பணம் திரும்ப சென்றதால் 2012க்கு பின் நிதி ஒதுக்குவதை மத்திய இரயில்வே வாரியம் நிறுத்திவிட்டது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
 


அதற்கான காரணம் இப்போதுதான் வெளிவந்துள்ளது.  திருவண்ணாமலையை அடுத்த கவுத்திமலையில் இரும்புதாது வெட்டியெடுக்க ஜிண்டால் முயன்றது. அந்த நிறுவனத்துக்கு சேலத்திலும் நிறுவனம் உள்ளது. இங்கு வெட்டியெடுக்கப்படும் கனிம வளத்தை சேலத்துக்கு அனுப்பி அங்கு அதை பிரித்துயெடுத்து மீண்டும் சென்னை துறைமுகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுயிருந்தது. இதற்கு சாலை மார்க்கத்தை விட இரயில் மார்க்கம் சரியாக இருக்கும் என திட்டமிடப்பட்டுயிருந்தது. திண்டிவனம் – ஜோலார்பேட்டை பாதை அமைத்தால் ஜிண்டாலுக்கும் சாதகமாக இருக்கும் என கணக்கிடப்பட்டது. திருவண்ணாமலைக்குள் ஜிண்டால் வரவிடாமல் தடுத்து விரட்டியது மக்கள் போராட்டம். அந்த நிறுவனம்மே இந்த திட்டத்தை முடக்க காரணமாகிவிட்டது என்கிறார்கள் சிலர்.
 

நிதி ஒதுக்கப்படாமல் நிறுத்தப்பட்ட இந்த திட்டத்தினை மோடி பிரதமராக வந்தபின் சேலம் – சென்னை இடையே பசுமை விரைவுச்சாலை அமைக்கப்படும்போது, வர்த்தக ரீதியாக திருவண்ணாமலை டூ திண்டிவனம் ரயில்பாதை திட்டம் நட்டத்தில் இயங்கும், நட்டத்தில் இயங்குவதற்கு எதற்கு புதிய மின்பாதை அமைக்க வேண்டும் என முடிவு எடுத்து இந்த திட்டத்தினை நிறுத்திவைத்துள்ளார்கள் என்கிறார்கள் பசுமைவழி சாலை எதிர்ப்பு போராட்டக்குழுவில் உள்ள சிலர். இந்த திட்டத்தை செயல்படுத்துங்கள் என எம்.பியாகி 4 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை திருவண்ணாமலை எம்.பி வனரோஜா, ஆரணி எம்.பி செஞ்சி.ஏழுமலை என இரண்டு அதிமுக எம்.பிக்களும் குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
 

இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, இந்த திட்டம் முடங்கியிருக்க பசுமை வழிச்சாலையும் ஒருக்காரணம் என்கிறார்கள். அரசாங்கம் என்பது மக்களுக்கானது என்கிற கருத்து மெல்ல மெல்ல அழிந்து கார்ப்பரேட்களுக்கு என்பது வெட்ட வெளிச்சமாகிவருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.