Skip to main content

‘ராஜேந்திர பாலாஜியை விடவே மாட்டோம்!’ - தேர்தல் ஜுரத்தில் விருதுநகர் மாவட்ட தி.மு.க. - அ.தி.மு.க.!

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

Virudhunagar constituency dmk admk

விருதுநகர் மாவட்டத்தில்,  சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில், ஆரம்பத்திலேயே அ.தி.மு.க பாய்ச்சல் காட்டுகிறது. வாக்குச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், கவரில் வைத்து அ.தி.மு.க தருவது ரூ.2,000 என்றால், தி.மு.க கொடுப்பது ரூ.500 மட்டுமே. நிதானமாகவே தி.மு.க காய் நகர்த்துகிறது. கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கும், தங்கம் தென்னரசுவுக்கும் தரப்பட்டுள்ள முக்கிய அஜென்டா ‘கே.டி.ராஜேந்திரபாலாஜி எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவரைத் தோற்கடித்தே ஆகவேண்டும்’ என்பதுதான். 


‘கே.டி.ராஜேந்திரபாலாஜி தொகுதி மாறுவாரா?’ என்பதை ‘ஸ்மெல்’ செய்தபடியே இருக்கும் தி.மு.க தரப்பிடமிருந்தும், அ.தி.மு.க வட்டாரத்திலிருந்தும், மாவட்ட அளவில் சில தகவல்களைப் பெற முடிந்தது.

 
அ.தி.மு.க. உள்ளடி கிலி!

 
சிவகாசி தொகுதி, 1957 முதல் 2016 வரையிலும் 14 முறை சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது. 1971-ல் கா.காளிமுத்து, 1989-ல் பெ.சீனிவாசன் என, இரண்டு முறை மட்டுமே தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அ.தி.மு.க.வோ, 5 முறை வெற்றி பெற்றுள்ளது. அதனால், இத்தொகுதியில் நேரடியாகப் போட்டியிடுவதைத் தவிர்த்து, கூட்டணிக் கட்சிகளுக்குத் தள்ளிவிடுவதே, தி.மு.க.வுக்கு வாடிக்கையானது. 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களின் மூலம், இத்தொகுதி தொடர்ந்து இரண்டு முறை, ராஜேந்திரபாலாஜியை சட்டமன்றத்துக்கு அனுப்பியுள்ளது. இதற்குமுன், சிவகாசி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்களில் யாரும் தமிழக அமைச்சரவையில் இடம்பெறாத நிலையில், தொடர்ந்து இரண்டு முறை, ராஜேந்திரபாலாஜி அமைச்சராக இருந்து வருகிறார்.

  

Virudhunagar constituency dmk admk


ராஜேந்திரபாலாஜி கூறுவதுபோல், ஒட்டுமொத்த விருதுநகர் மாவட்டமும், குறிப்பாக சிவகாசி தொகுதியும், அ.தி.மு.க ஆட்சி காலத்தில் திட்டங்களின் மூலம் அடைந்த பலன்களின் பட்டியல் நீள்கிறது. இத்தொகுதியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாக்கு வங்கியில்லாத விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த ராஜேந்திரபாலாஜி, அரசியல் மேடையிலும் ஆன்மிகவாதியாகவே தன்னை வெளிப்படுத்தி வருகிறார். அதனால், சகல ஜாதியினரையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த இந்துக்களின் வாக்குகளைக் கவர்ந்துவிட முடியும் என்று திடமாக நம்புகிறார். அதே நேரத்தில், தேவாலயங்ளுக்கும்,  மசூதிகளுக்கும் அவ்வப்போது சென்று, கிறிஸ்தவ, இஸ்லாமியர்களிடமும் நல்லுறவைப் பேணி வருகிறார். தனிப்பட்ட முறையில், கட்சிப் பாகுபாடின்றி பொதுமக்களுக்கு வாரி வழங்குவதால், வள்ளலாகவும் பார்க்கப்படுகிறார். ஆக, சகலவிதத்திலும் பாதுகாப்பான தொகுதியாக சிவகாசி இருந்தாலும், முன்னாள் அ.தி.மு.க எம்.பி ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் சாதி ரீதியிலான உள்ளடி, கிலி ஏற்படுத்துவதாகவே உள்ளது. இந்த உள்ளடி, கடந்த உள்ளாட்சி தேர்தலின்போதே அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தி, ஒன்றியத்தை தி.மு.க.வுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது.


மகனுக்காக ‘ரிஸ்க்’ எடுக்கிறாரா வைகோ?

 

Virudhunagar constituency dmk admk
                                                                 வைகோ   

 

சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தபோது, மூன்று முறை ம.தி.மு.க வெற்றி பெற்றது. இரண்டு முறை, எம்.பி ஆனார் வைகோ. தனக்கு மிகவும் பரிச்சயமான சட்டமன்றத் தொகுதி சிவகாசி என்பதால், தன் மகன் துரை வையாபுரி, தி.மு.க கூட்டணி வேட்பாளராக, இத்தொகுதியில் போட்டியிட வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டுவதாக, தி.மு.க தரப்பு சொல்கிறது. அதே நேரத்தில், சாத்தூர் தொகுதியும், அவரது விருப்பப் பட்டியலில் உள்ளதாம். ஏனென்றால், 2016 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிட்ட ம.தி.மு.க வேட்பாளர் ரகுராமனால், 25,000-க்கும் மேற்பட்ட வாக்குகளைக் கவர்ந்து, மூன்றாவது இடத்துக்கு வரமுடிந்தது. அதனால், துரை வையாபுரிக்கு பாதுகாப்பான தொகுதியாக சாத்தூரை நினைக்கிறாராம். 

 

Virudhunagar constituency dmk admk
                                                     துரை வையாபுரி

 

சாத்தூரில் 2016-ல் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட சீனிவாசன், 4,427 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 2019-ல் சாத்தூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், அதே சீனிவாசன் 1,101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். மூன்றாவது முறையும், தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டால், வெற்றி நிச்சயம் என்பது சீனிவாசனின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், பணபலம் உள்ளவர் என்பதால், சாத்தூரில் தனக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில், விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளுக்குத் தேர்தல் செலவு செய்வதற்கும், அவர் தயாராகவே இருக்கிறார். அதனால், சாத்தூர் தொகுதியை, தி.மு.க ஒருபோதும் ம.தி.மு.க.வுக்கு விட்டுக்கொடுக்காது என்று பேசப்படுகிறது.

 

cnc


அப்படியென்றால், நாயுடு வாக்குகள் கணிசமாக உள்ள சிவகாசியில், துரை வையாபுரியை கே.டி.ராஜேந்திர பாலாஜியோடு மோதவிடுவதுதானே? தி.மு.க தரப்போ ‘இரட்டை இலை வாக்கு வங்கி அதிகமாக உள்ள தொகுதி இது. கே.டி.ராஜேந்திரபாலாஜியும் பணத்தை இறைத்து வாக்குகளைக் கவர்ந்துவிடுவார். முதன் முதலில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் துரை வையாபுரி எதற்காக இத்தனை ரிஸ்க் எடுக்க வேண்டும்? விளாத்திகுளத்திலோ, கோவில்பட்டியிலோ போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும்.’ என்று வைகோ தரப்பை ‘கன்வின்ஸ்’ செய்தபடியே இருக்கிறதாம்.


தொகுதி மாறுகிறாரா ராஜேந்திரபாலாஜி?

 

Virudhunagar constituency dmk admk
                                                  கோகுலம் தங்கராஜ்


‘சிவகாசியில் தன்னுடன் யாரை மோதவிட்டு என்ன நடத்தப் போகிறார்களோ?’ என்னும் தவிப்பில் உள்ளாராம் ராஜேந்திரபாலாஜி, விருதுநகரிலோ, ராஜபாளையத்திலோ, தொகுதி மாறி போட்டியிடுவதில் உள்ள சாதக, பாதகங்களை அலசி வருகிறார். எப்படியும் தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக விருதுநகரில் போட்டியிடுவது, காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராஜா சொக்கராகத்தான் இருக்கும். அவரென்றால், கடந்த முறை போல, ‘ஏப்பம் விட்டுவிடலாம்’ என்று நினைக்கவும் செய்கிறார், ராஜேந்திரபாலாஜி. விருதுநகரில் ‘இலவு காத்த கிளி’ போல, கரோனா காலத்தில் தொகுதி மக்களை வெகுவாகக் கவனித்த கோகுலம் தங்கராஜ், ‘அ.தி.மு.க. சீட் எனக்கே’ என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். ராஜேந்திரபாலாஜி அவரிடம், ‘உங்கள் மனைவிக்குத்தான் விருதுநகர் முனிசிபாலிட்டி சேர்மன் சீட்’  என்று உத்தரவாதம் தந்து ‘கூல்’ செய்திருக்கிறார். பொது நிகழ்ச்சிகளில் அமைச்சருடனே காணப்படும் எஸ்.எஸ்.கதிரவன், ‘பழம் நழுவிப் பாலில் விழாதா?’ என்ற எதிர்பார்ப்புடன், ‘விருதுநகருக்கு நானே எம்.எல்.ஏ.’ என்ற கனவில் மிதக்கிறார். 


எனக்கு ஒண்ணு;  மகனுக்கு ஒண்ணு! – அண்ணாச்சி அப்படித்தான்!

 

Virudhunagar constituency dmk admk
                                                   கே.கே.எஸ்.எஸ்.ஆர்


விருதுநகர் தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தேர்தலில் தன்னுடைய வாரிசு ரமேஷை. அருப்புக்கோட்டை வேட்பாளராகக் களமிறக்கினால் என்னவென்று சிந்தித்து வருவதாகப் பேச்சு கிளம்ப, அந்தத் தொகுதி தி.மு.க.வினர் ‘அண்ணாச்சி லெவல் தெரியாம யாரோ கிளப்பிவிடறாங்க. எனக்கு ஒண்ணு; என் மகனுக்கு ஒண்ணுன்னு சீட் வாங்க நினைப்பாரே தவிர, அவராவது போட்டியிடாமல் ஒதுங்கிப் போவதாவது. அதுவும் ரமேஷ் அ.தி.மு.க.வுக்கு தாவிவிட்டு வந்தவர். அவருக்கு எப்படி தி.மு.க. தலைமை சீட் கொடுக்கும்?’ எனக் கேட்கின்றனர்.

 

Virudhunagar constituency dmk admk
                                                             ரவிச்சந்திரன்


புதிதாக, அ.தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆகியிருக்கும் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி ரவிச்சந்திரனை, முக்குலத்தோர் வாக்குகள் அதிகமாக உள்ள திருச்சுழியில் போட்டியிட வைத்து, தங்கம் தென்னரசுவுக்கு ‘டஃப்’ கொடுக்கலாம்..’ என்னும் சிந்தனை அ.தி.மு.க தரப்பிடம் துளிர்த்துள்ளது. 
 

விருதுநகர் மாவட்டத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இப்போதே ‘தேர்தல் ஜுரம்’ வந்துவிட்டது! 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.