Skip to main content

துரோகி கேரக்டரில் நடிப்பதா? எதிர்ப்புச் சுழலில் சிக்கிய விஜய்சேதுபதி! 

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

Muttiah Muralitharan


கிரிக்கெட் வீரர்களுக்கான பயோபிக் படங்களில் தோனி, சச்சின், அசாருதின், கபில்தேவ் என்று பயோபிக் படங்கள் நீண்டுகொண்டே இருக்கிறது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் வீழ்த்திய விக்கெட்டுகளைக் குறிக்கும் வகையில் '800' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.


 
முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு தமிழர் அமைப்புகள் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதுமட்டுமல்லாமல் ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

முத்தையா முரளிதரன் இலங்கைத் தமிழர்தான் என்றாலும், அவர் சிங்களக் கொடி பொறித்த சீருடையுடன் இலங்கை அணிக்காக விளையாடியவர். அந்த அணியில் ஒற்றைத் தமிழராக அவர் சாதித்திருக்கிறார் என்றாலும், ஈழத் தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டம் குறித்து அக்கறை செலுத்தியதில்லை. விளையாட்டு வீரராக மட்டும் இருந்திருந்தால், அவரது வரலாற்றுப் படத்திற்கு இத்தனை எதிர்ப்பு இருந்திருக்காது. போர் முடிந்த நிலையில், ராஜபக்சே சகோதரர்களுக்கு ஆதரவானவராக இருந்தார் என்பதுதான் தமிழர்கள் அவர் மீது காட்டும் எதிர்ப்புக்கு காரணம்.

 

சிங்களன் எதிரி என்றால், தமிழரான முத்தையா முரளிதரன் துரோகி என்பது அவர் களின் பார்வை.

 

இப்போதும் கூட, தமிழர்களைக் கொன்று குவித்த அன்றைய இலங்கை அதிபரும் இன்றைய இலங்கை பிரதமருமான மஹிந்த ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சே, முத்தையா முரளிதரனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி குறித்து முத்தையா முரளிதரன் அண்மையில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், "திரைக்கதை ரெடியானவுடன், நாங்கள் இதற்கு விஜய் சேதுபதியை நடிக்க வைக்கதான் யோசித்தோம். அவர் ஒரு திறமையான நடிகர் என்று நான் நினைக்கிறேன். அவர் முழுமையான நடிகர் என்று நம்புகிறேன். மேலும், அவர் கண்டிப்பாக படத்திற்கான அதிசயத்தை நிகழ்த்துவார்'' என்றார்.

 

ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் போஸ்டர்களில் முத்தையா முரளிதரனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது விஜய்சேதுபதியின் கெட்டப். தமிழில் எடுக்கப்படும் '800' படம், தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டப் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹிந்தி மற்றும் சிங்கள மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸாகும் என்றும் சொல்லப்படுகிறது.

 

Ad

 

படத்தைப் படமாகத்தான் பார்க்க வேண்டும். இதில் அரசியல் பார்வை வேண்டாம் என்கிறது முத்தையா முரளிதரனுக்கு ஆதரவான குரல்கள். ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறையுள்ளவர்களோ, ராஜபக்சேக்களை ஆதரித்து நின்றவரின் அரசியல் விளையாட்டை எப்படி அரசியல் கலக்காமல் பார்க்க முடியும் என்கின்றனர்.

 

அத்துடன், இலங்கை சிங்கள அரசு என்பது ஈழத் தமிழர்களுக்கு மட்டும் எதிரானதல்ல, தமிழகத்தில் உள்ள மீனவர்களையும் சுட்டுக் கொன்ற கொடூர அரசு. அந்த அரசாங்கத்தின் அடையாளமான சிங்கம் முத்திரை பொறித்த நீலநிற ஜெர்ஸியில் தமிழக நடிகரான விஜய்சேதுபதி நடிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? துரோகி கேரக்டரில் நடிப்பதும் துரோகம் தானே? என்கின்றனர்.

 

கோபத்துடனும் வேகத்துடனும் கோரிக்கையுடனும் இந்தப் படத்தில் நடிப்பதை கைவிடுமாறு விஜய்சேதுபதிக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சுழற்பந்து வீச்சாளர் பற்றிய படத்தில் ஹீரோவாகி எதிர்ப்புச் சுழலில் சிக்கியுள்ள விஜய்சேதுபதி எடுக்கும் முடிவு நல்லதாகவே இருக்கும் என நம்புகிறார்கள் அவரது ரசிகர்கள்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.