Skip to main content

“வாயை அடக்குங்கள்... இல்லை என்றால் அடக்கப்படுவீர்கள்...” -வேல்முருகன் ஆவேசம்

Published on 12/11/2020 | Edited on 12/11/2020
ghj

 

 

மனுநீதி தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், இதுதொடர்பாக பாஜகவினர் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இதனை எதிர்த்தும் மனுநீதியை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மத்திய அரசை கடுமைாக சாடி பேசினார். அவர் பேசியதாவது,

 

"இந்த பாசிச பாஜக ஆட்சி இந்தியாவில் என்றைக்கு வந்ததோ அன்றில் இருந்து ஜனநாயகம் இந்தியாவில் கிடையாது. என்சிஆர் போன்ற விஷயங்களுக்காக அதிக கூட்டங்களில் கலந்துகொண்டு என்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கிறேன், அது உங்களுக்கும் தெரிந்திருக்கும். அதனால் இந்த சங்கி நண்பர்களுக்கு இதற்கு மேல் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் எங்கள் அண்ணன் திருமாவை பற்றி பேசுகிறீர்கள். வாயை அடக்குங்கள், இல்லை என்றால் எந்த சங்கியாக இருந்தாலும் அடித்து, நொறுக்கி அடக்கப்படுவீர்கள் என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன். நான் விடுதலை சிறுத்தைகள் மீது கோபத்தில் இருக்கிறேன். பழைய சிறுத்தைகளாக நீங்கள் இல்லை. அப்படி இருந்திருந்தால் கண்டவன் எல்லாம் திருமாவை பற்றி பேச விட்டிருக்கமாட்டீர்கள். சினிமாக்காரி காயத்ரி ரகுராம் எல்லாம் அண்ணன் திருமா பற்றி பேசுகிறார், அவரின் அரசியல் என்ன, தொலைநோக்கு திட்டங்கள் என்ன என்பதை பற்றி எல்லாம் தெரியாத அவர் அண்ணனை அவதூறு செய்து வருகிறார்.

 

அண்ணனின் அரசியல் வரலாறு அந்த சங்கிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தாலும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எவ்வளவு துணிச்சல் இருந்தால் அனுமன் சேனா வானரப்படைகள் எல்லாம் எங்கள் அண்ணன் மீது கொலை மிரட்டல் தொணியில் பேசியிருப்பார்கள். அவர்களுக்கு யார் இந்த துணிச்சலை கொடுத்தது. காவல்துறை இன்றளவும் அதனை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அந்த அமைப்பை சேர்ந்த நபர் தற்போது பேசியதை யாராவது ஏற்றுக்கொள்ள முடியுமா? அசிங்கத்தின் உச்சமாக இருக்கிறது. திமுகதலைவர் ஸ்டாலின் அவர்களிடம் தொடங்கி என்னைவரை அந்த நபர் யாரையும் விட்டுவைக்கவில்லை. நாகரீகம் சிறிதும் இன்றி கடுஞ்சொல் பேசியிருக்கிறார். இதனை நாங்கள் ஒருபோதும் சும்மா விடப்போவதில்லை. நாங்கள் யார் என்று காட்டும் நேரம் வந்துவிட்டது. நானும் எங்கள் தோழர்களிடத்தில் சொல்லியிருக்கிறேன் அன்பான பாசமான கவனிப்பிற்கு! அதனை நிச்சயம் தொண்டர் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். 

 

நாங்கள் முதலமைச்சர், மோடி என்று அவர்களையே வாங்க, நேருக்கு நேர் சண்டைக்கு என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் என்வென்றால் எங்களிடமே பூச்சாண்டி காட்டுகிறீர்கள். இதற்கெல்லாம் எங்கள் இயக்கங்களில் இருக்கின்ற அடிமட்ட தொண்டர்கள்கூட பயப்பட மாட்டார்கள். எங்களிடம் இன்றைக்கு இல்லை, எப்போதும் உங்களின் பருப்பு வேகாது. நாங்கள் அரசியலை அனைத்து விதமாகவும் அறிந்தவர்கள். எந்த படமும் எங்களிடம் ஓட்ட முடியாது. யாத்திரைக்கு தடை விதித்திக்கப்பட்டுள்ளது என்ற கூறுகிறார்கள். ஆனால் தினமும் யாத்திரை நடைபெற்று வருகிறது, யாரும் எதுவும் செய்யவில்லை. கைது என்ற பேரில் நாடகமாடுகிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கான மக்களை இந்த இக்கட்டனான நேரத்தில் கூட்டுகிறார்கள். உங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் வேண்டுமானால் பயப்படலாம். நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் திருப்பி அடிக்கின்ற கூட்டம், நினைவில் வைத்துக்கொள்வது உங்களுக்கு நல்லது" என்றார்.

 

 

Next Story

சீமான் கேட்ட சின்னம் மதிமுகவிற்கு; கிட்டத்தட்ட க்ரீன் சிக்னலில் விசிக

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Seeman asked for the symbol for Mdmk; Almost at the green signal for vck

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தி இருக்கும் இந்த நிலையில், விசிகவிற்கு பானை சின்னம் கொடுக்க வேண்டும் என கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. முன்னதாக மதிமுகவும் பம்பரம் சின்னம் வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. ஆனால், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக தேர்தல் ஆணையம் மறுத்திருந்த நிலையில் தற்போது அண்மை செய்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அவர்கள் கேட்ட பானை சின்னம் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக 38 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலின் போதே துரை வைகோ மூன்று சின்னங்களை வலியுறுத்தி இருந்தார். அதில் முதல் சின்னமாக பம்பரம் சின்னத்தையும், இரண்டாவதாக தீப்பெட்டி சின்னம், மூன்றாவதாக கேஸ் சிலிண்டர் சின்னத்தை கேட்டிருந்தார். ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், மாற்று சின்னத்தை பெற மதிமுக முயன்று வருகிறது.

துரை வைகோ மாற்றாக கேட்டிருக்கும் தீப்பெட்டி சின்னத்தையும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கேட்டுள்ளார். மதிமுக அங்கீகாரம் இல்லாத கட்சியாக இருந்தாலும் பதிவுபெற்ற அரசியல் கட்சியாக இருப்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் தீப்பெட்டி சின்னம் கிடைக்கும் என மதிமுக வட்டாரம் எதிர்பார்த்து காத்துள்ளது.

அதேபோல சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருக்கும் விசிக இரண்டு தொகுதியில் போட்டியிடும் நிலையில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனைத் தவிர சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் பானை சின்னம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் பானை சின்னம் கேட்டவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் திருமாவளவனுக்கு பானை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. அதேபோல் விழுப்புரத்தில் போட்டியிடும் விசிகவின் வேட்பாளர் ரவிக்குமாரை தவிர வேறு யாரும் பானை சின்னம் கேட்காததால் விழுப்புரம் தொகுதிக்கும் பானை சின்னம் கிடைக்க வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

மதிமுகவுக்கு தற்போது கிடைக்கப் போவதாக இருக்கும் தீப்பெட்டி சின்னத்தை இதற்கு முன்பே நாம் தமிழர் கட்சி கேட்டிருந்ததாகவும், கிடைக்காமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

'நீதிமன்றத்தின் உத்தரவை மக்கள் மன்றம் புறக்கணிக்கும்' - திருமா கருத்து

Published on 12/12/2023 | Edited on 12/12/2023

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும், எதிர்ப்பும் கிளம்பியது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.  வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

 

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து என்ற தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்தேன். காஷ்மீருக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மன்றம் புறக்கணிக்கும் என்பது உறுதி' என தெரிவித்துள்ளார்.