Skip to main content

பாஜக ஒரு நாள் அழைப்பது மறு நாள் புறக்கணிப்பது ஏன்? - வா.புகழேந்தி

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

 Va Pugazhenthi  interview

 

மணிப்பூர் விவகாரம் மற்றும் தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி நம்மிடையே எடுத்து வைக்கிறார்

 

பாஜகவை நம்பி நாங்கள் அரசியல் செய்யவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பிரதமருக்கு அருகில் பன்மொழிப் புலவர், வருங்காலப் பிரதமர் எடப்பாடி பழனிசாமி அமர வைக்கப்பட்டார். எங்களை அவர்கள் அழைக்கவில்லை. பாஜக சொன்னதையெல்லாம் ஓபிஎஸ் அவர்கள் கேட்டார். அவருடைய பயணத்திலிருந்து அவரை டைவர்ட் செய்து அவர்களுக்குத் தேவையான வகையில் செயல்பட வைத்தனர்.  தர்மயுத்தம் மட்டும் தொடர்ந்து நடந்திருந்தால் இன்று தமிழ்நாட்டை ஆளும் இடத்தில் ஓபிஎஸ் அண்ணன் இருந்திருப்பார்.

 

குடியரசு தினத்துக்கு அவர் வீட்டில் கொடியேற்றும்போது கூட பிரதமர் கொடியேற்றும் நேரத்துக்காக காத்திருந்தார் ஓபிஎஸ். பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு எடப்பாடியை அழைத்தனர். ஆனால் பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி என குறிப்பிட்டு அழைத்தார் பிரகலாத் ஜோஷி. தாய் பகை, குட்டி உறவு என்பதுபோல் உள்ளது இது. ஒரு நாள் அழைப்பது, ஒரு நாள் புறக்கணிப்பது என்று அவர்கள் மாறுபட்ட நிலையில் நடந்துகொள்கின்றனர். தெளிவான முடிவை அவர்கள் எடுக்க வேண்டும். 

 

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் என்று சொல்லி அவர்கள் கூட்டிய கூட்டத்தில் தலைவர்களே இல்லை. பழனிசாமியை வைத்துக்கொண்டு அந்தக் கூட்டணி நிச்சயம் வளராது. எங்களுடைய தொண்டர்களைப் பொறுத்தவரை இது மகிழ்ச்சியான விஷயம்தான். கோடநாடு வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். எங்களுடைய போராட்டத்துக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். எங்களுடைய போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக இருக்கும்.

 

மணிப்பூரில் அநியாயம் நடக்கிறது. காட்டு தர்பார் நடக்கிறது. அங்கு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கொல்லப்படும் காட்சியை நாம் பார்க்கிறோம். இடஒதுக்கீடு பிரச்சனையால் தான் அனைத்தும் நடக்கிறது. இடஒதுக்கீடு காரணமாக தமிழ்நாட்டில் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. ஏனெனில் இது பெரியார் மண். திராவிட மண். ஒடிசாவில் மிகப்பெரிய ரயில் விபத்து நடந்து பலர் உயிரிழந்தாலும் ரயில்வே அமைச்சர் தன்னுடைய பதவியில் தொடர்கிறார். மணிப்பூரில் இவ்வளவு பெரிய கலவரம் நடந்தாலும் அங்குள்ள முதலமைச்சர் தன்னுடைய பதவியில் தொடர்கிறார். 

 

சுதந்திர இந்தியாவில் மணிப்பூர் சம்பவம் போன்ற ஒன்று இதுவரை நடைபெற்றதில்லை. மணிப்பூர் எங்கே இருக்கிறது என்பது கூட எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது. தனக்கு மற்ற மாநிலங்கள் குறித்து தெரியாது என்று அவரே ஒருமுறை கூறினார். அவர் இந்த சம்பவங்களுக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. அவர் முதலமைச்சராக இருந்தபோது தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையே தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்துகொண்டவர் அவர். மணிப்பூர் குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை என்று கேள்வி கேட்பதை நான் வருத்தத்துடன் பார்க்கிறேன். மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும்.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி; டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Mikjam Storm Echo TNPSC Important Notification

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

 

அதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 4 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

 

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரும், செயலாளருமான (பொறுப்பு) அஜய் யாதவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வினை கடந்த 22.11.2023 முதல் நடத்தி வருகிறது. நேர்முகத் தேர்வுக்கான எஞ்சிய இரண்டு நாட்கள் (04.12.2023 மு.ப. & பி.ப. மற்றும் 06.12.2023 மு.ப.) உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு, மிக்ஜம் புயல் காரணமாக திங்கட்கிழமை (04.12.2023) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

 

இதனால் நேர்முகத்தேர்வு நாளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் திங்கட்கிழமை (04.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு புதன் கிழமைக்கும் (06.12.2023), புதன் கிழமை (06122023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு  வியாழக்கிழமை (07,12,2023) அன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே திங்கட்கிழமை (04122023) அன்று நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வரும் புதன் கிழமை (06.12.2023) அன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள நேர்முகத்தேர்விலும் புதன் கிழமை (06.12.2023) அன்று தடைபெறவுள்ள தேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வியாழக்கிழமை (07.12.2023) அன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ள நாளில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

''அமலாக்கத்துறையை வைத்து தேர்தலுக்கு பணம் வசூலிக்கும் பாஜக''-முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி குற்றச்சாட்டு 

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

former MLA Balabharti accused of collecting money for elections using the enforcement department

 

திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவரிடம் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற புகாரில் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் மாவட்டச் செயலாளர் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

 

செய்தியாளர்களிடம் பேசுகையில், ''வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேவையான பணத்தை வசூலிப்பதற்காக பாஜக அமலாக்கத்துறையை தற்பொழுது பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை மத்திய அரசின் அடியாள் துறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதி அளிக்காமல் துணை ராணுவத்தை அலுவலகம் முன்பு கொண்டுவந்து நிறுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் சோதனை செய்ய அனுமதி அளிக்க முடியாது எனக் கூறுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. விசாரணை செய்ய காவல்துறையினர் வருகை தந்தால் அவர்களை அனுமதிப்பது தான் ஜனநாயக முறையாகும். ஆனால் அனுமதிக்க முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

இது அராஜக போக்காகும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய  அமலாக்கத்துறை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தான் நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவிடம் பேசியுள்ளார். உள்துறை அமைச்சகத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி எப்படி இவ்வாறு பேச முடியும். ஆகவே உள்துறை அமைச்சகத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளது. ஆகவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இது சாதாரண விஷயம் இதனை அரசியல் ஆக்காதீர்கள் லஞ்சம் வாங்குவது என்பது அனைத்து துறைகளிலும் உள்ளது என பொதுப்படையாகக் கூறி வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மத்திய அரசையும், அமலாக்கத்துறையும் காப்பாற்றும் விதமாக பேசி வருகிறார். மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேர்தல் செலவுக்காக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மேலும் மாநில அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது'' என்று கூறினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்