Skip to main content

இது டிரைலர்தான்... நகர்புற உள்ளாட்சி தேர்தல் தான் திமுகவுக்கு கிளைமேக்ஸ் வெற்றி!! - ராம. சுப்ரமணியன் பேட்டி

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

jkl

 

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகப்படியான இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெற்றது. அடுத்து வர இருக்கின்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் இதே மாதிரியான வெற்றியைத் திமுக பெற வாயப்பு இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நாம் அரசியல் விமர்சகர் ராம. சுப்ரமணியனிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடிவருகிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு நீக்கும்வரை தங்களின் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக உ.பி.யில் நடைபெற்ற விவசாயிகளின் கருப்புகொடி போராட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த நபர்களின் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறார்கள்? 

 

இந்த விவகாரம் கடும் கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். விவசாயிகள் மீது வாகனம் மோதியபோது அமைச்சர் மகன் அங்கே இருந்ததாக ஒரு கருத்து கூறப்படுகிறது. அப்படி அவர் அந்த வாகனத்தில் இருந்திருந்தால் அது மிகப்பெரிய தவறு. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைக் கூட காவல்துறையினர் தொடர்ந்து தேடிவந்த நிலையில், விவசாய சங்கங்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்தனர். இது எதுவுமே எனக்கு நல்லதாக படவில்லை. 

 

விவசாயிகள் மரணம் தொடர்பாக வருத்தம் தெரிவித்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல முயன்றபோது தடுக்கப்பட்டனர். குறிப்பாக பிரியங்கா காந்தி சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். இதற்குப் பல்வேறு அரசியல் கட்சியனர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

 

இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெறும்போது பெரும்பாலும் அரசியல் கட்சியினரை அங்கே செல்ல அனுமதிப்பதில்லை. சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என்ற நோக்கில் அவ்வாறு காவல்துறையினர் தடுப்பார்கள். மேலும், பிரச்சனைகளை உண்டாக்காமல் இருக்கவே அவர்கள் இவ்வாறு செய்திருப்பார்கள் என்று நான் கருதுகிறேன். இவர்கள் இந்தப் பிரச்சனையை மூடி மறைக்க நினைத்தார்கள், அதை ஒருவர் வீடியோ எடுத்து வெளியே தெரியும்படி காட்டிவிட்டார். வீடியோ எடுத்தவரும் தற்போது மர்மமான முறையில் இறந்துவிட்டார். இதைத்தான் பெரிய துயரமாக பார்க்க வேண்டியுள்ளது. இதைப்பற்றி நாம் பேசினால் எங்கள் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் என்றால் அனைவரும் பேசுகிறார்கள், வேறு மாநிலத்தில் நடைபெறும் சம்பவம் என்றால் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று அம்மாநில பாஜகவினர் பேசுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. 

 

நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றது. குறிப்பாக அதிமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஏற்கனவே இந்த தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள், இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

நான் ஏற்கனவே கூறியது போலவே திமுக அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 75 சதவீதம் வெற்றிபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அனைத்து இடங்களிலும் தற்போது வெற்றிபெற்றுள்ளது. ஒரு நல்ல ஆட்சியை தமிழகத்திற்கு ஸ்டாலின் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு மக்கள் இந்த வெற்றியைக் கொடுத்துள்ளார்கள். அவர் வெளிப்படையான ஆட்சியைத் தமிழகத்திற்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார். அடுத்து வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக இதைப் போன்றொரு பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் இருக்கிறது.

 

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.