Skip to main content

நகைக் கொள்ளையன் முருகன் சரண்டரில் இருக்கும் மர்மம்...நடந்த பேரம்...அதிர்ச்சி தகவல்!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சுரேஷ், கடந்த 10-ம்தேதி திருவண்ணாமலை செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தான். இவனிடம் நடத்திய விசாரணையில், லலிதாவில் கொள்ளையடித்த 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் நருங்குழி நகர் பகுதியில் முருகன் தங்கியிருந்த வீட்டில் வைத்து பங்கு பிரித்துக்கொண்டது தெரிய வந்தது. அதே நேரம், இந்த கொள்ளை தொடர்பாக தேடப்பட்டு வந்த சுரேஷின் மாமன் முருகன், பெங்களூருவில் பதுங்கி யிருப்பதாக தகவல் வர, தனிப்படையினர் அங்கு விரைந்தனர். ஆனால், அடுத்த நாள் காலை பெங்களூரு சிட்டி சிவில் 11-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் குற்றவியல் நீதிமன்றத்தில் வேறொரு திருட்டு வழக்கில் முருகன் சரணடைந்தான்.

 

incident



பெங்களூரு பனஸ்வாடி பகுதியில் நடந்த கொள்ளை வழக்கில் சரணடைந்தவன், பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டான். சிறையிலடைக்கப்பட்ட முருகனை பெங்களூரு பொம்மனஹள்ளி போலீஸார், 9 கிலோ நகைக்கொள்ளை வழக்கில் 6 நாட்கள் விசாரணைக்கு எடுத்து இரவோடு இரவாக திருச்சி அழைத்து வந்தனர். லோக்கல் போலீஸாருக்கு எவ்வித தகவலும் கொடுக்காமல் வந்த பெங்களூரு போலீசார், முருகன் காட்டிய இடத்தில் 12 கிலோ தங்க நகைகளை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர்.

 

incident



இத்தகவல் அறிந்து பெரம்பலூர் போலீஸார் அலர்ட் செய்யப்பட்டார்கள். வேப்பந்தட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் அரும்பாவூர் காவல் ஆய்வாளர் கலா தலைமையிலான போலீஸார் விரட்டிச் சென்று காரை மடக்கினர். இனோவா காரின் டிக்கியில், கொள்ளையன் முருகனும், 12 கிலோ தங்க நகையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அடுத்து அவர்களைப் பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து வந்த போலீஸார், பெரம்பலூர் எஸ்.பி. நிஷா பார்த்திபன், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன், பெரம்பலூர் டி.எஸ்.பி. கோபால்ராஜ் ஆகியோர் தலைமையில் விசாரணை நடத்தினர்.


விசாரணையில், "திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்ததும் நாங்கள் தான்'' என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறான். மேலும், "பஞ்சாப் வங்கியில் 6 பேர் சேர்ந்து கொள்ளையடித்தோம். வங்கியில் நாங்கள் எதிர்பார்த்த நகை கிடைக்கவில்லை என்பதால் லலிதா ஜுவல்லரியை குறிவைத்தோம். லலிதா கொள்ளையில் நானும் கணேஷ் என்பவனும்தான் உள்ளே சென்றோம். அந்த வகையில் எனக்கு 12 கிலோ தங்கம், ஒரு கிலோ வைர நகைகளை எடுத்துக்கொண்டு, சுரேஷுக்கு ஆறு கிலோ தங்க நகை கொடுத்தேன். மீதம் இருந்த நகைகளை உடன் வந்த மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த கணேஷ், சதீஷ்குமாருக்கு கொடுத்தேன்'' என்று சொல்லியிருக்கிறான். முருகன் கொடுத்த தகவலின்படி, மதுரை வாடிப்பட்டி, குருவித்துறை, அம்பலக்கார தெருவைச்சேர்ந்த கணேசனை கைது செய்த போலீசார், 6 கிலோ நகைகளை கைப்பற்றினர்.


தமிழக போலீஸ் தொடர்ச்சியாக முருகனை விரட்டிய நிலையில் பெங்களூவில் சரணடைந்த அன்றே 6 நாள் கஸ்டடி கொடுக்கப்பட்டு அன்றைக்கு இரவே யாருக்கும் தெரியாமல் "பிரஸ்' வண்டியில் கர்நாடக போலீஸார் ரகசியமாக மொத்த நகையையும் அள்ளிச் சென்றது ஏன்? திருடப்பட்ட நகைகள் திருச்சி நகைகள் என்று தெரிந்தும் கர்நாடக போலீஸ் அதை யாருக்கும் தெரியாமல் கொண்டு சென்றது ஏன் என்கிற கேள்வி பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் விசாரித்தபோது, "பெங்களூருவில் முருகன் மீது 83 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவ்வழக்குகளை விசாரிக்க ஹரிசங்கர் என்கிற அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவருக்கே முருகனை கஸ்டடி எடுத்து திருச்சிக்கு அழைத்து வந்த விசயம் எதுவும் தெரியவில்லை.

பெங்களூரு போலீசார் இதற்கு முன்பு, முருகனை 90 நாள் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தியபோது, ஒரு உயரதிகாரிக்கு 1 கிலோ நகை கொடுத்து சமாளித்துள்ளான். அதே போன்று தற்போது தமிழகத்தில் திருடிய நகைகளை கொண்டுபோய் பெங்களூரு போலீசுக்கு கொடுத்து தன்னை பாதுகாத்துக்கொள்ள நினைத்துதான் சரண்டர், கஸ்டடி நாடகமாடியுள்ளான் என்கிறார்கள். தமிழக போலீஸ் பெங்களூருவில் முருகனை கஸ்டடி கேட்டு பெட்டிசன் கொடுக்கவிருக்கிறது. தமிழக போலீசிடம் முருகன் ஒப்படைக்கப்பட் டால், "இதுநாள் வரை நடந்த அத்தனை திருட்டுகளின் கதைகளும் வெளியே வரும். கொள்ளையடித்த பணத்தில் சினிமா படங்கள் எடுத்தது முதல், பெரிய பெரிய அதிகாரிகளுக்கு பங்கு கொடுத்தது எல்லாம் அம்பலமானால் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. பலரும் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள என்ன வழி இருக்கிறது என்று விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தப்பிப்பதற்கான முயற்சியில், முருகன் உயிருக்கு ஆபத்து நேரலாம்'' என்று கூறுகிறார்கள்.

 

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.