Skip to main content

கண்ணீர் விட்ட சசிகலா..! தடுமாற்றத்தில் அ.ம.மு.க.!

Published on 07/12/2020 | Edited on 08/12/2020
ddd

 

மெல்ல மெல்ல தமிழகம் தேர்தல் மூடுக்கு மாறிக்கொண்டிருக்கும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தேர்தல் பணியில் வேகம்காட்ட ஆரம்பித்துள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குப்பின் தேர்தல் களத்தில் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை ஈட்டாத அ.ம.மு.க., தனது பலத்தை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதேநேரத்தில், தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை நிரூபிப்பதுதான் அ.ம.மு.க. தொடங்கப்பட்டதன் நோக்கமாகும். அதனால், சட்டமன்றத் தேர்தல் களத்தில் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் அலசப்படுகிறது.

 

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தஞ்சையிலும், டிசம்பர் 1 அன்று திருச்சியின் வடக்கு, தெற்கு மாவட்டங்களின் சார்பிலும் அ.ம.மு.க.வின் தேர்தல் பணி ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடைபெற்றன.

 

திருச்சியில் தெற்கு மாவட்டம் சார்பில் முசிறி பகுதியில் காலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர் ராஜசேகரன், கழகப் பொருளாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா திருச்சி மத்திய மண்டல பொறுப்பாளர்கள் திருச்சி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.மனோகரன், "இதய தெய்வம் அம்மா பேரவை' செயலாளரான எக்ஸ் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

ddd

 

"உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண் டும் என்றும், காலியாக உள்ள கட்சிப் பதவிகளை மாவட்ட வாரியாக நிரப்பி வருகின்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை நாம் பெறவேண்டும் என்பதே இக்கூட்டத்தின் நோக்கம்' என்று கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களிடமும் பேசினார்கள். மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், பகுதிவாரியாக மக்களிடம் கொண்டுசெல்லப்போகும் தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்புக் கூட்டமும் நடை பெற்றது.

 

அதேபோல் மாலை, திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.மனோகரன்பேசியபோது, “""அமைதிப்படை ஓ.பி.எஸ். யார் என்றும், தவழ்ந்து வந்த இ.பி.எஸ். யார் என்றும் நான் பார்த்திருக்கிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தில் அவர்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மாபெரும் அடிதடி சண்டை நடந்தது. அதை சிறையிலிருந்து பார்த்த சின்னம்மா, "அ.தி. மு.க.வின் நிலை இவ்வளவு மோசமாக மாறிவிட்டதே' என்று கண்ணீர் விட்டார். அ.தி.மு.க.வின் நிலை விரைவில் மாறும். இன்னும் ஓரிருநாளில் இல்லாவிட்டால்... இந்த மாதத்துக்குள் சின்னம்மா சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவார். புயல் வெளியே வரும்போது புயலில் சிக்கியவர்களின் நிலையைப் பார்க்கத்தான் போகிறோம்'' என்றும் கூறினார். மேலும் ""அ.தி.மு.க.வில் திருச்சியில் உள்ள நிர்வாகிகள் யாரும் தேர்தல் பொறுப்பாளர் களுக்குத் தகுதியில்லாதவர்கள் என்பதால்தான் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்களை இங்கே பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர். திருச்சியைச் சேர்ந்த ஒருவர்கூடவா பொறுப் பாளராக நியமிக்கத் தகுதியில்லாமல் போய் விட்டார்கள்'' என்று கேள்வியெழுப்பினார்.

 

dd

 

"அ.ம.மு.க.வின் திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை 1100 பேருக்கு கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நாம், டி.டி.வி. தினகரனை முதலமைச்சராக அமர்த்தப் பாடுபட வேண்டும்'’என முழங்கினார்.

 

கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிப் பொறுப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் பலர் தங்களுக்குள் பேசிக்கொள்கையில்... "அமித்ஷா தமிழகம் வந்ததன் நோக்கமே அ.தி.மு.க.வையும், அ.ம.மு.க.வையும் இணைக்க வேண்டும் என்பதுதான். இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றிவாய்ப்பை பெறமுடியும், இல்லையென்றால் வெற்றி வாய்ப்பு தி.மு.க.விற்கு செல்லும்' என்றும் தெரிவித்ததாக கிசுகிசுத்துக்கொண்டதைக் காணமுடிந்தது.

 

""சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் "முதல்கட்டமாக இரு கட்சிகளும் இணைந்து செயல்படும்' என்ற அறிவிப்பு வெளிவரும் என்று கட்சியில் பலரிடமும் எதிர்பார்ப்பிருக்கிறது. சசிகலாவின் நோக்கமும் அதுதான்'' என கட்சி நிர்வாகிகள் தங்களுடைய யூகத்தை வெளிப்படுத்தினர்.

 

"அ.தி.மு.க.வினருக்கு கடிவாளம்போட சின்னம்மாதான் சரியான ஆளுமை' என்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில்... கடந்த சில தினங்களாக தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அ.ம.மு.க. சார்பில் போடப்படும் கட்சிக் கூட்டங்களில் "தனித்துப் போட்டி' என்ற பேச்சே முன்வைக்கப்படுவதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 

"சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளப் போகிறோமா அல்லது தனித்துப் போட்டியா?' என்ற கேள்விதான் எல்லாருடைய மனதிலும்.

 

 

 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.