Skip to main content

'ஆம்புலன்ஸ்' ட்ரீட்மெண்டை மிஞ்சிய திருப்பத்தூர் போலிசாரின் கிரிக்கெட் கிரவுண்ட் ட்ரீட்மெண்ட்!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

jkl


உலகம் முழுவதும் கரோனா ஆட்டி படைத்து வருகின்றது. வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை அதன் பிடியில் இருந்து யாரும் தப்பவில்லை. உலக நாடுகள் எல்லாம் அதன் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இதற்கிடையே சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் இந்த நோயின் தாக்குதலுக்கு ஆளாகிப் பலியாகிறார்கள். ஆனால் இளைஞர்கள் சிலர் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிவது தொடர்கதையாகி வருகின்றது. காவலர்கள் அன்பாகச் சொல்லிப்பார்த்தார்கள், அடித்தும் பார்த்தார்கள். ஆனால் இளைஞர்கள் கேட்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட போலிசார் ட்ரோன் மூலம் கூட்டத்தைக் கலைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் போலிசார் சாலையில் சுற்றியவர்களைக் கரோனா வந்தவருடன் சேர்ந்து ஆம்புலன்ஸில் அமர வைப்பது மாதிரி செட்டப் காட்சிகளை அரங்கேற்றினார். ஆம்புலன்ஸ் உள்ளே சென்ற இளைஞர்கள், அங்கு தொற்று வந்தவர் போல படுத்திருந்தவரைப் பார்த்து கண்ணீருடன் கதறினார்கள். வண்டியின் ஜன்னல் பகுதியில் இருந்து ஒருவர் மாற்றி ஒருவர் குதித்துள்ளனர் அய்யா, நாங்கள் இனிமேல் ஊர் சுற்ற மாட்டோம் என்று கதறிய நிலையில், காவல் துறையினர் அவர்களை வீட்டிற்கு அனுப்பினர். இந்தச் சம்பவம் நடைபெற்று சில தினங்கள் ஆன நிலையில், திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் நேற்று ட்ரோன் மூலம் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணித்தனர். அப்போது காட்டுப்பகுதிக்கு நடுவில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தவர்களை ட்ரோன் படம்பிடித்தது. ட்ரோனைப் பார்த்த இளைஞர்களை துண்டைக் காணும் துணியைக் காணும் ரேஞ்சில் தெறித்து ஓடினார்கள். இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இளைஞர்கள் தெறித்து ஓடும் வீடியோ இதோ...

 

Next Story

ட்ரோன்களை பறக்கவிட்ட காவல்துறை; பட்டங்கள் மூலம் பதிலடி கொடுத்த விவசாயிகள்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Police Flying Drones Farmers reaction with kite

மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கடந்த 12 ஆம் தேதி (12.02.2024) மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் திட்டமிட்டபடி, பஞ்சாப்பில் இருந்து தங்கள் டிராக்டர்கள் மூலம் ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை நேற்று முன்தினம் (13.02.2024) பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து தொடங்கி, சம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி பேரணியைத் தொடங்கினர்.

அதே சமயம் டெல்லி எல்லைகளில் விவசாயிகளைத் தடுப்பதற்காகத் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 ஆம் தேதி வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் டெல்லி - பஞ்சாப் எல்லையில் பேரணி சென்ற விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் டெல்லி எல்லையே புகை மண்டலமாக மாறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விவசாயிகள் பட்டங்களை பறக்கவிட்டு டிரோன்களை தடுத்து நிறுத்தினர். ஹரியானா காவல்துறையினர் டிரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கு பஞ்சாப் மாநில அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர். பஞ்சாப் பகுதிக்குள் டிரோன்களை அனுப்ப வேண்டாம் என பாட்டியாலா காவல் துறை ஆணையர் சவுகத் அகமது அம்பாலா காவல்துறை துணை ஆணையருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து பஞ்சாப்பில் விவசாயிகள் இன்று (15.02.2024) ரயில் மறியல் போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்த ரயில் மறியல் போராட்டம் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை  நடைபெற உள்ளதா விவசாயிகள் தெரிவித்துள்ளனர். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் நேற்று (14.02.2024) இரவு 7 மணிக்கு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவிருந்தது. இருப்பினும் நேற்றிரவு நடைபெற இருந்த பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“‘டிரோன் ஷோ’ மனதில் என்றும் நிலைத்திருக்கும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
“The 'Drone Show' will remain in the mind forever” - Minister Udayinidhi Stalin

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நாளை (ஜன. 21) நடக்கிறது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரம்மாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு கடந்த 2007ம் ஆண்டு நெல்லையில் நடந்தது. இதன் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (ஜன. 21) நடக்கிறது. திமுகவின் எழுச்சிப் படையாகக் கருதப்படும் இளைஞரணிக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு என்பதாலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் மாநாடு என்பதாலும், இந்த மாநாடு ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையொட்டி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ள மாநாட்டு திடலில் 1,500 டிரோன்களின் கண்ணைக் கவரும் காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த டிரோன் காட்சியில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் வானில் ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக கலைஞரின் கையெழுத்துடன் கூடிய ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் உடன் இருந்தனர்.

இது குறித்து இது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “திமுக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நாளை கூடவுள்ள நிலையில், மாநாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாநாட்டுத்திடலில் இன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கியமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், திராவிட இயக்க கொள்கைப் பயணத்தை 1500 ட்ரோன்களைக் கொண்டு வான்வெளியில் ஒளி வீசச்செய்த ‘டிரோன் ஷோ’(Drone Show) நட்சத்திரங்களுக்குப் போட்டியாக அமைந்தது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என தலைவர்களின் உருவங்கள், தலைவர்கள் கட்டிக்காத்த தமிழ்நாட்டின் வரைபடம், உதயசூரியன் சின்னம், திமுக இளைஞரணியின் இலட்சினை போன்றவற்றை வானில் ஜொலிக்கச் செய்த ‘டிரோன் ஷோ’ நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.