Skip to main content

உட்கட்சி மோதல்! அணி நிர்வாகியை நீக்க, கழக நிர்வாகிகள் தீர்மானம்! சலசலப்பில் திமுக!

Published on 28/07/2020 | Edited on 28/07/2020

 

ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது தற்போதைய திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகரான திருப்பத்தூர் நகரம் திமுகவின் கோட்டையாக இருந்தது. அப்படிப்பட்ட கோட்டை தற்போது உட்கட்சி மோதலால் பலமிழந்து வருகிறது. கட்சி நிர்வாகிகளின் மோதல் வெளிப்படையாக நடக்கத் துவங்கியுள்ளது. திருப்பத்தூர் நகர கழகத்தின் சார்பில் கட்சியின், மாவட்ட மாணவரணிச் செயலாளர் மீது தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெளிப்படையாக தீர்மானம் இயற்றியிருப்பது மாவட்ட திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த ஜூன் மாதம் திருப்பத்தூர் நகர திமுக அவைத்தலைவர் இளங்கோவன் தலைமையில் கூடிய நகர கழக நிர்வாகிகள், வேலூர் மேற்கு (திருப்பத்தூர் மாவட்டம்) மாவட்ட மாணவரணி மாவட்ட அமைப்பாளர் டி.கே.மோகன் என்கிற ஜிம்மோகன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து தீர்மானம் இயற்றியுள்ளனர். இந்தத் தீர்மான நகலைக் கட்சித் தலைமைக்கு அனுப்பிவைக்க, இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தீர்மானம் குறித்து திருப்பத்தூர் ந.செ ராஜேந்திரனிடம் நாம் கேட்டபோது, நகர கமிட்டி கூடி தீர்மானம் இயற்றி தலைமைக்கு அனுப்பியுள்ளோம். இது உட்கட்சி பிரச்சனை என்பதோடு முடித்துக்கொண்டார். 

 

DMK - Chandrasekar

                                                                  சந்திரசேகர்

மாவட்ட பிரநிதிகளான பத்மநாபன், சந்திரசேகர் இருவரும் நம்மிடம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மோகன், தொடர்ச்சியாக கட்சி விரோதபோக்கிலேயே செயல்படுகிறார். கட்சி எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் அதில் வந்து கலந்து கொள்வதில்லை. கட்சியினர் கலந்து கொள்ள வந்தாலும் அவர்களைத் தடுப்பது, கட்சி கூட்டத்துக்கு போகக்கூடாது என சரக்கும், செலவுக்கு பணமும் தரும் ஒரே கட்சி நிர்வாகி அவர் தான். நகரத்தில் கந்துவட்டிக்கு பணம் தந்துவிட்டு வீடுகளை மிரட்டி எழுதி வாங்குவது, கடைகளைக் காலி செய்ய வைப்பது எனச் செயல்படுகிறார். அவர் மீது மட்டும் நகர காவல்நிலையத்தில் அரசியல் புகாராக இல்லாமல் கந்து வட்டிப் புகார், கட்டப் பஞ்சாயத்துப் புகார் எனப் பல புகார்கள் உள்ளன. 

 

நகரின் பிரபலமான வசதியான குடும்பத்தார், அவசரத்துக்கு வெறும் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கினார்கள் மோகனிடம். கடனுக்கான வட்டி, வட்டிக்கு வட்டி, வட்டிக்கு மீட்டர் வட்டி எனப்போட்டு 1.5 கோடி ரூபாய் கல்யாண மண்டபத்தை மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டார்.

 

dmk bathmanaban

                                                                மா.பி பத்மநாபன்

மற்றொரு நகைக்கடைக்காரர் குடும்பமும் ஊரைவிட்டே போனது. போலி பத்திரம் உருவாக்கி புனிதன் என்கிற தீவிர கட்சி விசுவாசியின் வீட்டை அபகரிக்க முயல அவர் கட்சி தலைவருக்கு புகார் அனுப்பிவிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார். அதேபோல் நீதிமன்றம் உத்தரவிட்டும் கட்சி நிர்வாகி அன்பழகன் (அமைச்சர் வீரமணியின் அக்கா கணவர்) வீட்டை காலி செய்யாமல் ரவுடிஸம் செய்கிறார் மோகன். அப்படிப்பட்டவர் நகரச் செயலாளர் மீது பொய்யாக புகார்களை தலைமைக்கு அனுப்புகிறார், தலைமையும் விசாரிக்கிறது. 

 

நகர கமிட்டியில் இருப்பவர்கள் பாரம்பரிய கட்சியினர். ந.செ. 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பதவியில் உள்ளார். முழு நேர கட்சி ஊழியராக இருந்து கட்சிக்காக பலப்பல வழக்குகளை வாங்கியர். இன்றும் இங்கு கட்சி பலமாக இருக்கிறது, கடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் திருப்பத்தூரில் உள்ள 6 சங்கங்களின் தலைவர் பதவியில் 4 பதவிகளை ஆளும்கட்சியான அதிமுக பிரமுகர்களிடம் சண்டைப்போட்டு திமுகவுக்காக பெற்று தலைவராக்கினார். 

 

திருப்பத்தூர் தொகுதி தேர்தல் வரலாறு, நகராட்சி தேர்தல் வரலாறுகளைப் புரட்டிப்பார்த்தால் நிர்வாகிகளின் உழைப்பு தெரியும். அப்படிப்பட்ட நிர்வாகிகள் மீது பொய்யாக புகார்களைச் சொல்வது எந்த விதத்தில் சரியானது அதனால் தான் நடவடிக்கை எடுக்கச் சொல்கிறோம் என்றார்கள்.

 

mohan dmk

                                                                          மோகன் 

குற்றச்சாட்டு குறித்து மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மோகனிடம் நாம் கேட்டபோது, என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச்சொல்லி தீர்மானம் இயற்றி புகார் அனுப்பியிருப்பது நீங்கள் சொல்லிதான் எனக்குத் தெரியும். நான் வட்டிக்கு விடுகிறேன் எனச் சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டு. நான் காண்ட்ரக்ட் எடுத்து வேலைகளைச் செய்து வருகிறேன். கரோனா காலத்தில் என் சொந்த பணத்தில் மக்களுக்கு அவ்வளவு உதவிகள் செய்துள்ளேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அப்படிப்பட்ட உதவிகளை எங்கள் கட்சியிலோ, மாற்று கட்சியிலோ யாரும் செய்ததில்லை. என் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் என்னைப்பற்றி தப்பும் தவறுமாக பேசுகிறார்கள். உட்கட்சி தேர்தலில் ந.செ பதவிக்கு போட்டியிடவுள்ளேன். அதனால் இப்போதே என்மீது பிரச்சனையைக் கிளப்புகிறார்கள் என்றார்.

 

DMK - Rajendiran

                                                                 ராஜேந்திரன்

 

தீவிரமான கட்சி நிர்வாகிகள் நம்மிடம், தற்போது ந.செவாக உள்ள ராஜேந்திரன் ஒருகாலத்தில் அதிரடி அரசியல் செய்தவர். கட்சிக்காரன் எந்தப் பிரச்சனையில் சிக்கினாலும் காப்பாற்றுவார். இதனால் உட்கட்சியில் பல எதிரிகள் அவருக்கு உள்ளனர். எம்.எல்.ஏ. தேர்தலில் சீட் தரப்பட்டு அவர் மீதான அந்தப் பிம்பமே அவரது தோல்விக்கு காரணமானது. தோல்விகளுக்குப் பின் அந்தப் பிம்பத்தை மாற்றிக்கொண்டு கட்சிப் பணி செய்கிறார்.

 

திருப்பத்தூரின் பெரிய பைனான்சியரான பள்ளி ஆசிரியர் ரவியின் மகளுக்கும் மருத்துவர் தினேஷ்குமாருக்கும் கல்யாணமாகிடுச்சி. மருத்துவரோட மனைவியும் டாக்டர், மேல்படிப்பு சென்னையில் படிச்சிக்கிட்டு இருகாங்க, தினேஷ்குமார் இங்கயே இருக்கார். தன்கிட்ட சிகிச்சைக்காக வந்த ஒரு இஸ்லாமியரின் திருமணமாகாத இளம் பெண்ணிடம் நெருக்கமாகப் பழக, அது குடும்பப் பிரச்சனையானது. கடந்த மாதம் டாக்டரின் மாமனார் ஆட்களோடு சென்று கிளினிக்கிலேயே தனது மருமகனையும், அந்த இஸ்லாமிய பெண்ணையும் அடித்து உதைக்க அந்தத் தெருவே அங்கு கூடிவிட்டது.

 

போலிஸுக்கு தகவல் சொல்ல சம்பவயிடத்துக்கு அதிகாரிகள் வந்தனர். ரவி குடும்பத்துக்கு நெருங்கிய உறவினர் ந.செ ராஜேந்திரன், அதனால் பெண் வீட்டார் அவரை வரவைத்தனர். அவர் வந்து, இது குடும்பப் பிரச்சனை, போலிஸ்ல புகார் தந்தால் நல்லாயிருக்காது, பேசி தீர்த்துக்கறோம், இல்லன்னா பிறகு புகார் தர்றோம்னு சொல்ல போலிஸ் போய்விட்டது. அதன்பின்னர் பஞ்சாயத்து பேசப்பட்டு, மருத்துவர் எச்சரிக்கப்பட்டு, அந்த இஸ்லாமிய பெண்ணை மிரட்டி எழுதிவாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர். கணவன் – மனைவி இருவரும் ஒற்றுமையாக உள்ளார்கள்.

 

http://onelink.to/nknapp

 

அந்த இஸ்லாமிய பெண் தரப்பும் அமைதியாக ஒதுங்கிவிட்டது. பஞ்சாயத்து பேசி பிரச்சனையைத் தீர்த்து வைத்த ந.செ மீது, இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கிறார் என விவகாரத்தில் சம்மந்தப்படாத யாரோ ஒருவர் தலைமைக்கு புகார் அனுப்பியிருக்கிறார்.

 

சிறுபான்மை இனத்துக்கு எதிராக எப்படி நடந்து கொள்ளலாம் என ந.செவிடம் தலைமை நடத்திய விசாரணைக்கு அவர் பதில் சொல்லிவிட்டு வந்துள்ளார். இப்படியொரு புகாரை தலைமைக்கு அனுப்பியது மோகன் டீம் தான் என்பதைத் தெரிந்துகொண்டு அதில் அதிருப்தியான ந.செ, மோகனால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளைத் தொகுத்து தலைமைக்கு புகார் அனுப்பியதோடு, தீர்மானம் போட்டும் தலைமைக்கு அனுப்பியிருக்காங்க. தலைமை விசாரித்துவிட்டு, தீர்ப்பு எழுதும் பொறுப்பை கழக பொருளாளரான துரைமுருகனிடம் ஒப்படைத்துள்ளது. அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது தெரியவில்லை என்றார்கள். 

 

உட்கட்சி பிரமுகர்கள் மோதலில் கட்சி பலவீனமாக்கிக்கொண்டு இருக்கிறது. தலைமை முடிவை சரியாக எடுக்கவில்லையென்றால் இழப்பு கழகத்துக்கு தான் என முணுமுணுக்கிறார்கள் உடன்பிறப்புகள். 

 

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.