Skip to main content

தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்கும் அளவுக்கு தெம்போ, திராணியோ யாருக்கும் கிடையாது - திருமாவளவன் தடாலடி பேச்சு!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

jkl

 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர்கள் தொடர்ந்து வெளியிட்டுவருகிறார்கள். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பெரியார் பிறந்த தினம் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்புக்குப் பலர் மகிழ்ச்சி தெரிவித்த நிலையில், பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பெரியார் மட்டும்தான் கொண்டாடப்பட வேண்டியவரா? அவரையும் தாண்டி கொண்டாட தகுதியான நபர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் என்று கருத்து தெரிவித்திருந்தனர். 

 

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்த சம்பவம் தொடர்பாகவும், தமிழ்நாட்டில் ஆளுநர் மாற்றம் தொடர்பாகவும் தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "பெரியார் சமூகநீதிக்காக இறுதி காலம்வரை பாடுபட்டவர். சமூகநீதி விவகாரத்தில் அவர் இறக்கும்வரையில் பின்வாங்காதவர். வருகின்ற 17ஆம் தேதி பெரியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளோம். அப்போது சமூகநீதி தொடர்பாக பேரவையில் தெரிவித்த கருத்துகளை அவர் சிலை முன் முழக்கமிட உள்ளோம். பெரியாரை யாரும் புறக்கணித்துவிட முடியாது. தற்போது தமிழகத்தில் ஆளுநர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களைக் காங்கிரஸ் கட்சி எழுப்பியுள்ளது. அவர்களின் ஐயங்கள் புறந்தள்ள கூடியதாக இல்லை. 

 

அவர் நாகலாந்தில் என்ன செய்தார் என்று நாம் தற்போது சமூகவலைதளங்களில் வரும் கருத்துகளைப் பார்த்தால் தெரிந்துகொள்ள முடியும். உளவுப்பிரிவு அதிகாரியாக இருந்துள்ளார். மேலும், மொழி உணர்வு போன்ற எண்ணங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற எண்ணம் உடையவராக அவர் இருப்பதாக தகவல் வெளிவருகிறது. எனவே திட்டமிட்டு அவரை நாகலாந்தில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு மாற்றியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகளும் மத்திய அரசு ஏதோ உள்நோக்கத்தோடு இந்த ஆளுநர் நியமனத்தை செய்துள்ளதாகவே பார்க்கிறோம். எனவே மத்திய அரசு, புதிய ஆளுநர் நியமனத்தை ரத்து செய்துவிட்டு, ஜனநாயகப்பூர்வமாக செயல்படுபவரை ஆளுநராக நியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். யாரை ஆளுநராக நியமித்தாலும் தமிழ்நாட்டில் அவர்களால் எதுவும் செய்துவிட முடியாது. ஆட்சியைக் கலைக்கின்ற அளவுக்கு அவர்களுக்குத் தெம்போ, திராணியோ கிடையாது" என்றார்.

 

 

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய மேற்கு வங்க ஆளுநர் வலியுறுத்தல்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
West Bengal Governor insists on dismissing the minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்ட்டி மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டார். அப்போது தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜியும் அக்கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் மேற்கு வங்க அரசை வலியுறுத்தியுள்ளார். அதே சமயம் ஆளுநர் ஆனந்த் போஸ் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக அமைச்சர் பிரத்யா பாசு பதிலடி கொடுத்துள்ளார்.