Skip to main content

நடிகை ஜோதிகா கூறியது நூறு சதவீதம் சரியான கருத்து - திருமா ஆதரவு!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020


நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் குறித்து பேசியது சர்ச்சையாக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசியதாவது, "கரோனா தொற்றுக்கு எதிராக உலகமே போராடிக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கோட்பாடு இன்றைக்கு உண்மையாகிக் கொண்டிருக்கும் வேளையில், ஒருவருக்கொருவர் கடந்த கால கசப்புணர்வுகளை எல்லாம் மறந்துவிட்டு சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. முற்போக்கான கருத்துகளுக்கு எதிராகப் பிற்போக்கான கருத்துகளை சில சக்திகள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
 

ப

 


தாக்குதல் நடத்துவது, விமர்சனம் என்ற பெயரால் அவதூறு பரப்புவது என்று தொடர்ந்து அந்த சக்திகள் இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களிடம் விரோதத்தை விதைக்க வேண்டும், அதன் மூலம் பிரிவினையைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் இழிமொழிகளில் வசை மொழிகளை அடுத்தவர் மீது வாரி இறைக்கிறார்கள். இது வன்மையான கண்டனத்துக்குரியது. இப்படிபட்ட விஷயங்களில் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள கூடாது, நம் கருத்துகளை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலையிலும், நாம் கரோனா போன்ற வைரஸிடம் இருந்து மனித சமூகத்தை தற்காத்துக்கொள்வதற்கான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த மாதிரியான விஷயங்களில் நம் கவனம் திரும்ப கூடாது என்ற நிலையை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
 

நமக்கு பாரதிய ஜனதாவோடு முரண்பாடுகள் இருக்கலாம், ஆளும் அதிமுகவோடு முரண்பாடுகள் இருந்துகொண்டு இருக்கலாம். ஆனால் இந்தக் கொள்ளை நோயை விரட்ட அவர்களோடு இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து செயல்படும் என்பதை நாம் தொடர்ந்து கூறிவருகிறோம். ஜாதி, மத பித்து பிடித்தவர்கள் அவர்களை மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்பதை அவர்களின் அருவருக்கதக்க இந்தகைய பேச்சுக்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.
 

http://onelink.to/nknapp



நடிகை ஜோதிகாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதல்ல நம்முடைய நோக்கம். அல்லது அவரை விமர்சிக்கும் ஜாதி மத பித்து பிடித்தவர்களை விமர்சிக்க வேண்டும் என்பதல்ல நம்முடைய நோக்கம். கல்விக் கூடங்களுக்கு, மருத்துவமனைகளுக்கு கொடை அளியுங்கள் என்று கூறியது எந்த வகையில் பிழையான கருத்தாக அமைந்துள்ளது. அதனை ஏன் விமர்சிக்க வேண்டும். அந்த வகையில் நடிகை ஜோதிகா கூறிய கருத்து என்பது அனைவராலும் வரவேற்கக்கூடிய ஒரு கருத்தாகவே நான் கருதுகிறேன். கோயிலே கட்ட வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. நம்முடைய பண்பு கூறுகளில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றது. அது மக்கள் நலன்களில் அக்கறை செலுத்தம் வகைகளில் அமைய வேண்டும் என்றுதான் நாம் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

 

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“திமுகதான் எதிர்க்கட்சி என்பதுபோல் மோடி பிரச்சாரம் செய்கிறார் - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Thirumavalavan alleges Modi is campaigning as if the DMK is the opposition

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செவ்வாய்க் கிழமை(16.4.2024) சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பு.முட்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கி 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்களிடம் திருமாவளவன் பேசுகையில், “இந்தத் தேர்தலில், நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த தளபதி மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனர். பாஜக விற்கு எதிரான வியூகம் அமைத்து, பல்வேறு கட்சிகளை  ஒருங்கிணைத்து  இன்று வலுவான தேர்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார். காங்கிரஸுக்கு பதிலாக திமுகதான் தனது எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். கேஸ் விலை உயர்வு மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல்  சாதிய மோதல்கள் அதிகரிக்கவும் மோடி தான் காரணம். மோடி  மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  ரேசன் கடை இருக்காது. 100-நாள் வேலைத்திட்டம் இருக்காது” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன்,  திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விஜய் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.