Skip to main content

பெண்ணின் அழகில் ‘கணிதம்’ உண்டு!-கண்ணில் மின்னும் பொன் விகிதம்!

Published on 24/11/2019 | Edited on 24/11/2019

நண்பர் ஒருவரின் குடும்பம், தங்கள் மகனுக்கு வரக்கூடிய மனைவி வெகு அழகானவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பெண் தேடியபடியே இருக்கிறது.  ‘அது என்ன அழகு?’ என்று கேட்டோம். “பார்க்கிறதுக்கு மூக்கும் முழியுமா செதுக்கி வச்ச சிலை மாதிரி இருக்கணும்..” என்றார்கள். அவர்களிடம் நாலடியாரைக் கொஞ்சம் எடுத்துவிட்டோம்.

‘குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு’

முழுமையாக அர்த்தம் புரிந்ததோ இல்லையோ, சிரித்துவிட்டு “நாங்கள் தேடுவதும் படித்த அழகான பெண்தான்.” என்று அழகு குறித்த அவர்களின் கொள்கையில் உறுதியாக இருந்தனர்.

பெண்ணின் அழகு குறித்து ஓவியர் ஒருவர் இப்படிச் சொல்கிறார் -

 

There is mathematical beauty in the beauty of a woman!


“ஒரு பெண் எப்படி இருக்க வேண்டுமென்று முன்னோர்கள் வகுத்தே வைத்திருக்கின்றனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயவங்களும் அமைந்துவிடுவதில்லை. உச்சி முதல் பாதம் வரை ஒரு இளம் பெண் எப்படியிருக்க வேண்டுமென்று முன்னோர்கள் வகுத்தே வைத்துவிட்டனர். அதுதான் சாமுத்திரிகா லட்சணம். பெண்களின் கண்கள் எப்படியிருக்க வேண்டுமென்று சாமுத்திரிகா லட்சணம் சொல்கிறது தெரியுமா? ‘சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று மாவடுபோல் இருக்க வேண்டும். பாலில் விழுந்த வண்டுபோல் கண்கள் துள்ள வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். புருவம் வில்லைப்போன்று வளைந்திருக்க வேண்டும்.’ என, கண்கள் குறித்து மட்டுமல்ல.. மூக்கு, நெற்றி, காது, கழுத்து, இடை, தொடை என காலின் கட்டை விரல் வரைக்கும் விலாவாரியாக விவரித்துள்ளது.’ என்றார்.

 

There is mathematical beauty in the beauty of a woman!


கணிதத்திலும்கூட ‘பொன் விகிதம்’ உண்டு. இது, கவின்கலை, ஓவியம், கட்டிடக்கலை, புத்தக வடிவமைப்பு, இயற்கை, இசை, நிதிச்சந்தை என பல்வேறு துறைகளிலும் பரந்து காணப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டிலிருந்து, ஓவியர்கள், கட்டிடக் கலைஞர்கள் பலரும் தமது படைப்புகளில் பொன் விகிதத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். பொன் விகிதமானது அழகியல் அடிப்படையில் மனதுக்கு உகந்தது என நம்பப்படுகிறது.  

உலகப் பிரசித்திபெற்ற மோனாலிசா ஓவியம் தங்க விகிதத்தின்படியே (1:0.618) லியொனார்டோ டா வின்சி-யால் வரையப்பட்டுள்ளது. இத்தங்க விகிதமானது மனித உடல் முழுவதும் காணப்படுகிறது. ஒரு தங்க செவ்வகம் என்பது தங்க விகிதத்தைப் பிரதிபலிக்கும் பரிமாணங்களைக் கொண்ட ஒரு செவ்வகமாகும். மோனாலிசா ஓவியம் முழுவதுமே பல தங்க செவ்வகங்களைக் கொண்டுள்ளது. த லாஸ்ட் சப்பர், ஓல்ட் மேன் மற்றும் தி விட்ருவியன் மேன் போன்ற ஓவியங்களின் சில பகுதிகளும் தங்க விகிதத்தின்படி டாவின்சியால் வரையப்பட்டவையே.  

 

There is mathematical beauty in the beauty of a woman!


அட, ‘நிரந்தர உலக அழகி’ என இன்றுவரையிலும் கொண்டாடப்படும் ஐஸ்வர்யா ஆர்.பச்சனும் இந்தப் பொன் விகிதக் கணக்கில்தான் வருகிறார். எப்படி தெரியுமா? ஒருவரின் முகத்திலுள்ள மூக்கின் நீளம், கண்களின் இருப்பிடம் மற்றும் தாடையின் நீளம் ஆகியவை தங்க விகித நியமனப்படி அமைந்தால் அவர் அழகாக இருப்பார். ஐஸ்வர்யா ஆர்.பச்சனின் முகமானது தங்க விகித அமைப்புகொண்ட முகமூடியுடன் கச்சிதமாகப் பொருந்துகிறது. அதனால், அவரது அழகும் கணிதத்தன்மை வாய்ந்ததே!  

அழகு ரசனைக்குரியதே! ஆனாலும்,  ‘புற அழகைக் காட்டிலும் அக அழகே உயர்ந்தது’ என பாடம் நடத்தினால்,  புரிதலுடன் நம்மில் எத்தனைபேர்  முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள்?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்; பெண்கள், மாணவிகள் 4 பேர் பலி

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
4 women who went to the temple drowned in the water and passed away

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா( 45) அவரது மகள் லலிதா (22). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை   உட்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் உள்ள தண்ணீரில் நான்கு பெண்களும் இறங்கி உள்ளனர் 

ஏரியில் உள்ள சுழலில் சிக்கி நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும் நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த அம்மா, மகள் மற்றும் சகோதரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.