Skip to main content

சென்னையில் ரூ.110, வெளியூரில் ரூ.80..! ‘கிர்’ரென விலை உயர்ந்த போதை வஸ்து..!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

tamilnadu shops police pan masala sales peoples


விமல், சாந்தி, சைனி கைனி, மாணிக் சந்த், கார்கில்... இதெல்லாம் வடநாட்டு பெயர்கள் மாதிரி இருக்கிறது ஆனால் எங்கோ எப்போதோ கேட்ட பெயர்களாக இருக்கிறதே? என நீங்கள் யோசிக்கலாம்.
 


ஆம்.! போதைவஸ்து பிரியர்களுக்கு பரிச்சயமான பெயர்கள் இவை.! இந்தப் பெயரில் இப்போது குட்கா, பான்மசாலாக்கள் இல்லை. ஆனால், இவற்றின் லேட்டஸ்ட் வெர்சன் ‘ஹான்ஸ்,’ ‘கூல் லிப்’ போன்றவை இப்போது தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கின்றன.

புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா, பான்மசாலா போன்ற மெல்லும் புகையிலை பொருட்களைத் தமிழ்நாட்டில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு 2013- ஆம் ஆண்டு தடை கொண்டு வந்தது. இருந்தாலும், இன்னமும் இந்தப் பொருட்கள் ஆங்காங்கே புழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு மார்க்கெட்டில் எப்போதுமே கிராக்கி அதிகமாக இருக்கும். தாராளமாக இந்தப் பொட்டலங்கள் சந்தையில் விற்கபட்டபோது ரூ.5 லிருந்து அதிகபட்சம் ரூ.15 வரை விற்கப்பட்டது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் கிடுகிடுவென உயர்ந்து இப்போது ரூ.100 முதல் ரூ.140 வரைக்கு விற்கப்படுகிறது.

அதுவும் லாக்டவுன் பீரியடில் மதுக்கடைகளையும் மூடியாச்சு, பெட்டிக் கடைகளையும் மூடியதால், புகையிலை கிடைக்காமல் நிறைய பேர் தவித்து போனார்கள். இப்போது ஒரளவு நிலைமை சீரடைந்து, பெட்டிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், விலையை 2 மடங்கு உயர்த்தி விட்டனர். முன்பு சென்னையில் ரூ.40 விற்கப்பட்ட ஹான்ஸ் இப்போது ரூ.120, ரூ.60-க்கு விற்கப்பட்ட கூல் லிப் இப்போது ரூ.150. அதுவும் பழைய கஸ்டமர்கள் மட்டுமே பர்ச்சேஸ் பண்ணமுடியும். புது நபர்களுக்கு இந்தப் பொருள் கிடையாது.
 

tamilnadu shops police pan masala sales peoples


சென்னையைப் பொறுத்தவரை இந்தப் போதை வஸ்துகளை யார் யார் விற்கிறார்கள் என்பது, லோக்கல் போலீஸாருக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு மாதமும் கட்டிங் கரெக்டாக வந்து சேரும். 2 மாதத்திற்கு ஒருமுறை ஒரு கேஸ். அவ்வளவுதான் போலீஸார் கண்டு கொள்வதில்லை. ஆனால், பத்திரிகைகளில் அவ்வப்போது பான்மசாலா பிடித்ததாகப் புகைப்படங்களோடு செய்தி வரும். தனிப்படை போலீஸார், உள்ளூர் போலீஸாருக்கே தெரியாமல் பிடிக்கும் போது எடுக்கும் படங்கள் தான் அவை.
 


தமிழகத்தில் இப்போது நேரக் கட்டுப்பாட்டோடு கடைகள் திறக்கப்பட்டாலும், சென்னையில் மட்டும் இன்னும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், இதுபோன்ற வஸ்துகள் தான் போதைப் பிரியர்களுக்கு ஒரே ஆறுதல். “ஒரு பொட்டலம் வாங்கினா 4 தடவை தான் வாயில் வைத்து அதக்கிக் கொள்ள முடியுது. இதைப் போட்டாத் தான் சுறுசுறுப்பாக வேலை ஓடுது. முதல்ல ரூ.40- க்கு வித்தாங்க... இப்ப ரூ.110-ங்கிறான். இதுக்கு கூட ரூ.10 போட்டா ஒரு குவாட்டர் வாங்கி அடிச்சிடலாம். அதுக்கும் வழியில்லாம போச்சே” என்றார் சென்னையில் கட்டிட வேலை பார்க்கும் தொழிலாளி. 

சென்னையைப் பொறுத்தவரை பான்மசாலா கடைகளைக் கண்காணிக்க வேண்டியது செக்டார் பார்ட்டிகள் தான். ஆனால், ஒவ்வொரு காவல் நிலைய எல்கையிலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட ஏரியாக்களை கவர் செய்வதே அவர்களுக்கு பெரும்பாடாகி விடுகிறது. இதனால், போலீசுக்கு மாமுல் கொடுப்பதாகக் கூறி, பெட்டிக் கடைக்காரர்கள் கஸ்டமர்களிடம் புகுந்து விளையாடுகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வரத்து தடைபட்டதால், குட்கா மாபியாக்கள், கைவசம் வைத்திருக்கும் சரக்குகளைக் கூடுதல் விலைக்கு கடைக்காரர்களிடம் தள்ளிவிடுகின்றனர்.

இந்தப் புகையிலை விற்கும் கடைக்காரர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம். “தலைவரே... கடையிலை இந்த சோப்பு, சீப்பு, எண்ணைய், பிஸ்கட் விற்கிறதுல... பெருசா ஒன்னும் லாபம் கிடைக்காது. ஆனா இந்தப் பொட்டலத்தில் ஒரே நாளில் குறைஞ்சது ரூ.3,000 லாபம் எடுத்திடலாம். இந்தப் பக்கம் இந்திக்கார பசங்க... நிறைய வேலை பார்க்கிறாங்க. அவங்க தான் நம்ம ரெகுலர் கஸ்டமர். போலீசு விற்கக் கூடாதுன்னு சொன்னாலும், கஸ்டமர் ‘இதத்தான்’ ரெகுலராகக் கேட்டு வருகிறார்கள். அதனால போலீசை ‘கரெக்ட்’ பண்ணி வச்சிகிட்டு பிழைப்பை ஓட்டிகிட்டு இருக்கேன்” எனத் தன்னிலை விளக்கம் கொடுத்தார்.
 

http://onelink.to/nknapp


நாம் விசாரித்த வகையில் இந்த போதைவஸ்துகள் கோவில்பட்டி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை வட்டாரத்தில் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. இனி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். காத்திருப்போம்..!



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.