Skip to main content

சென்னையில் ரூ.110, வெளியூரில் ரூ.80..! ‘கிர்’ரென விலை உயர்ந்த போதை வஸ்து..!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

tamilnadu shops police pan masala sales peoples


விமல், சாந்தி, சைனி கைனி, மாணிக் சந்த், கார்கில்... இதெல்லாம் வடநாட்டு பெயர்கள் மாதிரி இருக்கிறது ஆனால் எங்கோ எப்போதோ கேட்ட பெயர்களாக இருக்கிறதே? என நீங்கள் யோசிக்கலாம்.
 


ஆம்.! போதைவஸ்து பிரியர்களுக்கு பரிச்சயமான பெயர்கள் இவை.! இந்தப் பெயரில் இப்போது குட்கா, பான்மசாலாக்கள் இல்லை. ஆனால், இவற்றின் லேட்டஸ்ட் வெர்சன் ‘ஹான்ஸ்,’ ‘கூல் லிப்’ போன்றவை இப்போது தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கின்றன.

புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா, பான்மசாலா போன்ற மெல்லும் புகையிலை பொருட்களைத் தமிழ்நாட்டில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு 2013- ஆம் ஆண்டு தடை கொண்டு வந்தது. இருந்தாலும், இன்னமும் இந்தப் பொருட்கள் ஆங்காங்கே புழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு மார்க்கெட்டில் எப்போதுமே கிராக்கி அதிகமாக இருக்கும். தாராளமாக இந்தப் பொட்டலங்கள் சந்தையில் விற்கபட்டபோது ரூ.5 லிருந்து அதிகபட்சம் ரூ.15 வரை விற்கப்பட்டது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் கிடுகிடுவென உயர்ந்து இப்போது ரூ.100 முதல் ரூ.140 வரைக்கு விற்கப்படுகிறது.

அதுவும் லாக்டவுன் பீரியடில் மதுக்கடைகளையும் மூடியாச்சு, பெட்டிக் கடைகளையும் மூடியதால், புகையிலை கிடைக்காமல் நிறைய பேர் தவித்து போனார்கள். இப்போது ஒரளவு நிலைமை சீரடைந்து, பெட்டிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், விலையை 2 மடங்கு உயர்த்தி விட்டனர். முன்பு சென்னையில் ரூ.40 விற்கப்பட்ட ஹான்ஸ் இப்போது ரூ.120, ரூ.60-க்கு விற்கப்பட்ட கூல் லிப் இப்போது ரூ.150. அதுவும் பழைய கஸ்டமர்கள் மட்டுமே பர்ச்சேஸ் பண்ணமுடியும். புது நபர்களுக்கு இந்தப் பொருள் கிடையாது.
 

tamilnadu shops police pan masala sales peoples


சென்னையைப் பொறுத்தவரை இந்தப் போதை வஸ்துகளை யார் யார் விற்கிறார்கள் என்பது, லோக்கல் போலீஸாருக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு மாதமும் கட்டிங் கரெக்டாக வந்து சேரும். 2 மாதத்திற்கு ஒருமுறை ஒரு கேஸ். அவ்வளவுதான் போலீஸார் கண்டு கொள்வதில்லை. ஆனால், பத்திரிகைகளில் அவ்வப்போது பான்மசாலா பிடித்ததாகப் புகைப்படங்களோடு செய்தி வரும். தனிப்படை போலீஸார், உள்ளூர் போலீஸாருக்கே தெரியாமல் பிடிக்கும் போது எடுக்கும் படங்கள் தான் அவை.
 


தமிழகத்தில் இப்போது நேரக் கட்டுப்பாட்டோடு கடைகள் திறக்கப்பட்டாலும், சென்னையில் மட்டும் இன்னும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், இதுபோன்ற வஸ்துகள் தான் போதைப் பிரியர்களுக்கு ஒரே ஆறுதல். “ஒரு பொட்டலம் வாங்கினா 4 தடவை தான் வாயில் வைத்து அதக்கிக் கொள்ள முடியுது. இதைப் போட்டாத் தான் சுறுசுறுப்பாக வேலை ஓடுது. முதல்ல ரூ.40- க்கு வித்தாங்க... இப்ப ரூ.110-ங்கிறான். இதுக்கு கூட ரூ.10 போட்டா ஒரு குவாட்டர் வாங்கி அடிச்சிடலாம். அதுக்கும் வழியில்லாம போச்சே” என்றார் சென்னையில் கட்டிட வேலை பார்க்கும் தொழிலாளி. 

சென்னையைப் பொறுத்தவரை பான்மசாலா கடைகளைக் கண்காணிக்க வேண்டியது செக்டார் பார்ட்டிகள் தான். ஆனால், ஒவ்வொரு காவல் நிலைய எல்கையிலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட ஏரியாக்களை கவர் செய்வதே அவர்களுக்கு பெரும்பாடாகி விடுகிறது. இதனால், போலீசுக்கு மாமுல் கொடுப்பதாகக் கூறி, பெட்டிக் கடைக்காரர்கள் கஸ்டமர்களிடம் புகுந்து விளையாடுகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வரத்து தடைபட்டதால், குட்கா மாபியாக்கள், கைவசம் வைத்திருக்கும் சரக்குகளைக் கூடுதல் விலைக்கு கடைக்காரர்களிடம் தள்ளிவிடுகின்றனர்.

இந்தப் புகையிலை விற்கும் கடைக்காரர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம். “தலைவரே... கடையிலை இந்த சோப்பு, சீப்பு, எண்ணைய், பிஸ்கட் விற்கிறதுல... பெருசா ஒன்னும் லாபம் கிடைக்காது. ஆனா இந்தப் பொட்டலத்தில் ஒரே நாளில் குறைஞ்சது ரூ.3,000 லாபம் எடுத்திடலாம். இந்தப் பக்கம் இந்திக்கார பசங்க... நிறைய வேலை பார்க்கிறாங்க. அவங்க தான் நம்ம ரெகுலர் கஸ்டமர். போலீசு விற்கக் கூடாதுன்னு சொன்னாலும், கஸ்டமர் ‘இதத்தான்’ ரெகுலராகக் கேட்டு வருகிறார்கள். அதனால போலீசை ‘கரெக்ட்’ பண்ணி வச்சிகிட்டு பிழைப்பை ஓட்டிகிட்டு இருக்கேன்” எனத் தன்னிலை விளக்கம் கொடுத்தார்.
 

http://onelink.to/nknapp


நாம் விசாரித்த வகையில் இந்த போதைவஸ்துகள் கோவில்பட்டி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை வட்டாரத்தில் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. இனி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். காத்திருப்போம்..!



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.