Skip to main content

இரண்டு ஆண்டுகளில் உதயமான ஆறு மாவட்டங்கள்... தமிழ்நாடு மாவட்டங்களின் வரலாறு!

Published on 28/12/2020 | Edited on 28/12/2020

 

mayiladuthurai

 

 

நம்முடைய சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அலுவலகத்தில் சந்திக்கும்போதோ அல்லது வேறு எங்காவது எதர்ச்சையாக சந்திக்கும்போதோ நம்மையே அறியாத ஒரு நல்ல உணர்வு கிடைக்கும். குறிப்பாக ஊரைவிட்டு வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு அந்த தருணம் அவர்களின் சொந்த ஊருக்கே அழைத்து சென்றுவிடும். சுதந்திரத்திற்கு பின்னான அப்போதைய தமிழகம் முதலில் 13 மாவட்டங்களை கொண்ட மாநிலமாக இருந்தது. அதன்பின் மக்களின் தேவை, காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து புதுப் புது மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மதராஸ் மாகாணம் எப்படி மதராஸ் மாநிலமாக மாறி 1969ஆம் ஆண்டில் தமிழ்நாடு என மாறியதற்கு காரணம் இருந்ததைப்போல, மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கு காரணம் இருந்ததைப்போல மாவட்டங்கள் பிரிப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது, மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுதும் நிர்வாகம் செய்வதும் எளிதாகும். அந்த வகையில் தற்போது நாகப்பட்டினத்திலிருந்து மயிலாடுதுறை 38வது மாவட்டமாக உதயமாவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே மயிலாடுதுறையை மாவட்டமாக பிரிக்க இருப்பதாகவும், அதற்காக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமித்திருந்த நிலையில் நேற்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக மாவட்டமானது மயிலாடுதுறை. 

 

ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைத்தபோது மதராஸ் மாநிலத்திலிருந்த மாவட்டங்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 13 மாவட்டங்கள்தான். மெட்ராஸ், செங்கல்பட்டு, நார்த் ஆர்காடு, சவுத் ஆர்காடு, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாநிலங்கள்தான் அவை. இதனைதொடர்ந்துதான் 13 மாவட்டங்களாக இருந்தது, ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரிக்கப்பட்டு தற்போது 38 மாவட்டங்களாக மாறியிருக்கிறது. 

 

இந்த 13 மாவட்டங்களை அடுத்து முதன் முதலாக பிரிந்த மாவட்டம் என்றால் சேலம் மாவட்டம்தான். 1966ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து சேலம் மாவட்டம் தனியாக பிரிந்தது.

 

தற்போது திருச்சியிலிருந்து மூன்று மாவட்டங்கள் பிரிந்துள்ளது. இதில் முதன் முதலாக பிரிந்த மாவட்டம் புதுக்கோட்டை. இது 1974 தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

 

1979ஆம் ஆண்டு கோயம்பத்தூரிலிருந்து பிரிக்கப்பட்டது ஈரோடு.

 

1985ஆம் ஆண்டு  மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. இதே ஆண்டில் மதுரையிலிருந்து திண்டுக்கல் பிரிக்கப்பட்டுள்ளது.

 

1986ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி பிரிக்கப்பட்டது.

 

1989ஆம் ஆண்டில் வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை, வெல்லூர் என்று இரு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.

 

1991ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் பிரிக்கப்பட்டது. பின்னர் 1996ஆம் ஆண்டில் நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது.

 

1993ஆம் ஆண்டில்தான் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் என்று இரண்டு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.

 

1995ஆம் ஆண்டில் திருச்சியிலிருந்து கரூர் மற்றும் பெரம்பலூர் என மேலும் இரண்டு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.

 

1996ஆம் ஆண்டில் மதுரையிலிருந்து தேனி பிரிக்கப்பட்டது.

 

1997ல் சேலத்திலிருந்து நாமக்கல் பிரிக்கப்பட்டது.

 

2004ல் தர்மபுரியிலிருந்து கிருஷ்ணகிரி பிரிக்கப்பட்டது.

 

2007ல் பெரம்பலூரிலிருந்து அரியலூர் பிரிக்கப்பட்டது.

 

2009ல் கோயம்புத்தூர் மற்றும் ஈரோட்டிலிருந்து திருப்பூர் என்ற மாவட்டம் உருவாக்கப்பட்டது.

 

2019ஆம் ஆண்டு தொடக்கத்தில் விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. ஆண்டின் இறுதியில் மேலும் நான்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. திருநெல்வேலியிலிருந்து தென்காசி, காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு, வேலூரிலிருந்து ராணிப்பேட்டை மற்றும் திருபத்தூர் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. 

 

நேற்று தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக நாகப்பட்டினத்திலிருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. இது மயிலாடுதுறை மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையாகும். 

 

 

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

ஊர் ஊராய் 'வி லாக்' காட்டும் சிறுத்தை; திணறும் வனத்துறை

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A leopard showing 'vlog' from place to place; A forest department that is stifling

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் தோகர் கூறுகையில், 'கண்காணிப்பு பதிவை மட்டும் வைத்து அரியலூரில் காணப்பட்டது மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த அதே சிறுத்தையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதனுடைய தெளிவான புகைப்படம் கிடைக்க வேண்டும். இரண்டு சிறுத்தைகளின் புகைப்படம் மற்றும் வேறு சில தடையங்களை ஒப்பிட்டுப் பார்த்துதான் இரண்டும் ஒரே சிறுத்தையா என்பதை உறுதி செய்ய முடியும்'  என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வரை மயிலாடுதுறையில் நான்கு கூண்டுகள் 20க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் அரியலூரில் இரண்டு கூண்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.