Skip to main content

தமிழிசை, பொன்னார் ராஜினாமா செய்ய தயாரா? தமிழக அரசுக்கு துணிவு கிடையாது: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

Published on 29/03/2018 | Edited on 29/03/2018


 

tamilisai soundararajan


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. 
 

இன்று காலை நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அவர், 
 

இந்த நிமிடம் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. அதனை முடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். பாஜக ஏமாற்றுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் போன்றோர் குழப்புகிறார்கள். நான் ராஜினாமா செய்தால்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றால் ராஜினாமா செய்ய தயார் என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். முதலில் இவர் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். தமிழர்கள் ஒன்றுபட தமிழக பாஜக முன்வர வேண்டும். அதைவிட்டுவிட்டு மத்திய அரசை காப்பாற்றுதற்காக தமிழத்திற்கு துரோகம் செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். 


 

Pon Radhakrishnan



தேதி இருக்கிறது ஏன் அவசரப்படுகிறீர்கள் என கேட்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். தமிழர்கள் மீது, தமிழக விவசாயிகள் மீது தமிழிசை சவுந்தரராஜனுக்கு அக்கறை இருக்குமேயானால் முதலில் அவர்கள் பாஜக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தயாரா இருக்கிறார்களா. இவர்களும் தமிழர்கள்தானே. இவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தயாரா. 
 

டெல்லியில் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மதியத்திற்கு மேல் பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டை மற்றுகையிடப்போகிறோம். காவிரி மேலாண்மை வாரியம்தான் தமிழக காவிரி விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு. தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அடுத்தக் கட்ட போராட்டங்கள் குறித்து முடிவு எடுக்க வேண்டும். 


 

p.r.pondiyan



இன்று அமைச்சர்களுடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையில் என்ன முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுத்து அவர்களால் சாதிக்க முடியாது. இன்றைய ஆலோசனையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு எடுக்க வேண்டும். இவர்கள் தனியாக போய் என்ன செய்வார்கள். இவர்களுக்கு எந்த துணிவும் கிடையாது. 


 

edappadi palanisamy

கோப்புப்படம்

 



மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்வோம் என்று மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் பேசியிருக்கிறாரே?
 

அவர் தற்கொலை செய்வேன் என்று கூறியதை நாங்கள் ஏற்கவில்லை. அவர் ஒரு தமிழன். தமிழன் என்றும் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டான். துணிவோடு போராட தயாராக இருக்க வேண்டும். முடிந்தால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யட்டும். இல்லையென்றால் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போம் என்று சொல்லலாம். அதிமுகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் என்று சொல்லலாம். அதைவிடுத்து தான் தற்கொலை செய்வேன் என்று சொல்வது கோழைத்தனமானது. 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்களை முற்றுகையிட வேண்டும். தமிழக அரசே இதனை முன்னின்று நடத்த வேண்டும். அதனை மறுக்கும் பட்சத்தில் விவசாய சங்கங்கள் ஒன்றுகூடி போராட வேண்டும். இவ்வாறு கூறினார். 

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.