Skip to main content

"எனக்கும் தலைமை நீதிபதி சந்திரசூட்க்கும் உள்ள ஆச்சரிய ஒற்றுமை; என்னை ஆளுநராக மட்டும் ஏன் பார்க்க வேண்டும்..." - தமிழிசை பேச்சு

Published on 25/10/2022 | Edited on 27/10/2022

 

பரக

 

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அதுகுறித்த சிறப்பு மலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் ஊடகங்களில் பணியாற்றும் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நிறைவுரையாற்றிய தமிழிசை, தமிழக அரசியல் தொடர்பாகவும் தான் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார். 

 

இதுதொடர்பாக அவர் பேசும்போது, "  இன்றைக்கு மிக முக்கியமான நிகழ்ச்சியாக இதைக் கருதுகிறேன். மனதுக்கு நிறைவான விழாவாக இது என்றும் நினைவில் இருக்கும். அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் கூட அனைவரும் வித்தியாசமான கருத்துக்களைப் பேசுகிறார்கள், ஒருவர் பேசியதை மற்றொருவர் பேசவில்லை என்று தெரிவித்தார். அது உண்மையும் கூட. அனைவரும் மனதில் தோன்றியதைப் பேசுகிறார்கள். கார்த்திகைசெல்வன் கூட தம்பிகள் சிலரின் திருமணத்துக்குச் சென்றதை பற்றிப் பேசி இருந்தார்கள். அது பெரிய செய்தியாக நான் பார்க்கவில்லை. நமக்குத் தெரிந்தவர்கள் நம்மை அழைக்கிறார்கள், நம்மால் முடிந்தால் செல்லப் போகிறோம் என்ற அளவில் தான் இதை நான் பார்க்கிறேன். இன்னும் சில தம்பிகள் திருமணத்துக்கு என்னால் செல்ல இயலவில்லை. 

 

இவ்வளவு சொந்தங்களை நாம் இந்த இடத்தில் ஒன்று சேர்த்து சந்திப்பது என்பதே அவர்கள் என்மீது காட்டும் அன்புதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எந்த நேரமும் தமிழ்நாட்டிலே இருக்கிறீர்கள், உங்களைத் தெலுங்கானாவில் தேட மாட்டார்களா? என்றெல்லாம் ஒரு தம்பி அதுவும் எனக்குத் தெரிந்த தம்பி ஊடகத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். பாண்டிச்சேரிக்கு வந்தால் இங்கே ஏன் இருக்கிறீர்கள் உங்களுக்குத் தெலுங்கானாவில் வேலை இல்லையா என்று நாராயணசாமி கேட்கிறார்.

 

அது சரி என்று தமிழகம் வந்தால் நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இவர்களுக்கு நான் எங்கே சென்றாலும் பிரச்சனை தான் போல. நான் இப்போது தெளிவாகக் கூறுகிறேன். தெலுங்கானாவில் நான் முழுமையாக பணியாற்றுகிறேன், பாண்டிச்சேரியில் நிறைவாக பணியாற்றி வருகிறேன். தமிழ்நாட்டில் என் முழு அன்பைச் செலுத்துகிறேன்.  இதில் இருவேறு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

 

இன்றைக்கு இந்த கருத்து வேறுபாடுகளையும் கடந்து என்னை அக்காவாக, தங்கையாக அனைவருடன் இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறேன். எனவே அனைவரும் நம் உறவினர்கள் தான் என்ற கோட்பாட்டை நான் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். இந்த நேரத்தில் நான் மேலும் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்கள், அவருடைய தந்தை இருந்த இடத்தில் தற்போது மீண்டும் அமர்ந்துள்ளார்.

 

தனது தந்தை தலைமை நீதிபதியாக இருந்தபோது பிறப்பித்த சில உத்தரவைக் கூட திருத்தியுள்ளார். அதே போன்ற ஒரு ஒற்றுமை எனக்கும் எனது தந்தைக்கும் உண்டு. அவர் ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருந்துள்ளார். நான் மற்றொரு நேர் எதிர் தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்துள்ளேன். பெரிய பதவியில் அமர்ந்துள்ளீர்கள், கவர்னர் ஆகிட்டிங்க என்று சிலர் பேசுவதைக் கேட்கிறேன். அப்படியெல்லாம் எண்ணத் தேவையில்லை. நான் உங்களில் ஒருவராகவே இருக்கிறேன், இருப்பேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.