Skip to main content

ஆகஸ்டு மாதம் கட்சி ஆரம்பித்து ஏப்ரலில் முதல்வராக வர பார்க்கிறார்கள் - பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேச்சு!

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பேராசிரியர் சுப.வீரபாண்டியன் இன்றைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது" திமுக என்ற கட்சி ஜாதி கட்டமைப்புக்காகவோ அல்லது மதத்திற்காகவோ உருவானது அல்ல. இன்னும் சொல்லப்போனால் ஆட்சி அமைப்பதற்காக கூட தொடங்கப்பட்டதல்ல. திமுக என்ற இயக்கம் 1949ம் ஆண்டு தொடங்கப்பட்டிருந்தாலும், 1957ம் ஆண்டு தேர்தலில் தான் அந்த கட்சி போட்டியிட்டது. ஆனால் இன்று சிலபேர் ஆகஸ்ட் மாதம் கட்சி தொடங்கி ஏப்ரல் மாதம் முதலமைச்சர் ஆகி விடலாமா என்று பார்க்கிறார்கள். அப்படி எல்லாம் தர்பார் செய்ய முடியாது.
 

hjk



திரைப்படத்தில் வேண்டுமானால் தர்பார் செய்யலாமே, தவிர அரசியலில் தர்பார் செய்துவிட முடியாது. இதை திமுக இளைஞர்கள் மக்களிடம் சென்று கூற வேண்டும். நூற்றாண்டு கண்ட இயக்கம் எங்களுடன் இருக்கிறது என்பதை உரக்க சொல்ல வேண்டும். கூடவே நான் சில செய்திகளை இங்கு சொல்ல வேண்டும். அம்மா உணவகம் என்ற ஒன்று சென்னை முழுவதும் இருக்கிறது. அது ஐந்தாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது. உண்மையை சொல்ல வேண்டுமானால் அப்போது கூட்டமாக இருக்கும். ஆனால் தற்போது எப்படி இருக்கின்றது. அம்மா உணவகத்தின் முன்பு கூட்டமில்லை. ஏனென்றால் அங்கு உணவில்லை. அம்மா உணவத்திற்கு தேவையான நிதி இல்லை. அதனால் அந்த உணவகம் பயனற்று இருக்கிறது. சென்னை மாநகராட்சி அதனை நடத்துகிறது. இதில் முக்கியமான செய்தி ஒன்று இருக்கின்றது, சில நாட்களுக்கு முன்பு வெளியான செய்தித்தாளில் அம்மா உணவகம் 400 கோடி ரூபாய் கடனில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. என்ன காரணம் என்றால் மத்திய அரசு தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, உள்ளாட்சிகளுக்கு தர வேண்டிய பல 16,000 ஆயிரம் கோடி ரூபாயை கடந்த மூன்றாண்டுகளாக தரவில்லை. இன்றைக்கு சிஏஏ என்ற சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை பற்றி இளைஞர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சட்டத்தை எதிர்த்து இன்றைக்கு இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட மூன்று அண்டை நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். இந்த எதேச்சதிகார தன்மையை எதிர்த்து இன்றைக்கு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. மோடி அரசின் இந்த ஆறு ஆண்டுகாலத்தில் இதுவரை சந்திக்காத அளவிற்கு போராட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றது. அண்மையில் வள்ளுவர் கோட்டத்தில் சிஏஏ சட்டத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். எதையாவது எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி நாம் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதை நாம் முதன் முதலாக கேள்விப்படுகிறோம். இன்றைக்கு ஈழ தமிழர்களுக்கு குடியுரிமை இல்லை என்பதற்கு முக்கியமான காரணம் அதிமுக தான். அவர்கள் அளித்த வாக்கின் காரணமாகவே இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்களை அந்நியர்களாக மாற்றுவதற்கு பாஜகவுக்கு உதவுகின்ற கட்சி அதிமுக தான் என்பதை இளைஞர்கள் நாட்டு மக்களுக்கு சொல்லுங்கள். திமுகவில் இஸ்லாமிய மக்கள் ரத்தமும் சதையுமாக இருப்பவர்கள். மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கின்ற இயக்கமாகவே திமுக உள்ளதையும் எடுத்துச் சொல்லுங்கள்" என்றார்


 

சார்ந்த செய்திகள்

Next Story

சனாதனம்.. தேர்தல் தோல்வி..! - சுப. வீரபாண்டியன்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Sanathanam.. election failure..! - Suba.  Veerapandian

அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில், பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றுவிட்டது என்றும், காங்கிரஸ் கட்சி மண்ணை கவ்வியது என்றும் சில ஊடகங்கள் எழுதுகின்றன. மக்களில் ஒரு பகுதியினரும் அதனை நம்புகின்றனர். ஐந்து மாநிலங்களில், மூன்றில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது என்பதை வைத்து இப்படி விமர்சனங்கள் வெளிப்படுகின்றன. அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சில உண்மைகளை வேறு சில கோணங்களில் பார்த்தால்தான், உண்மை நமக்கு புரியும் என்கிறார் திராவிடர் கழக மூத்த தலைவர் சுப.வீரபாண்டியன்.

மேலும் அவர், இந்தத் தேர்தல் முடிவுகளை விமர்சனம் செய்யும் வலதுசாரிகள், இது பா.ஜ.க.வின் வெற்றி என்றும், காங்கிரஸின் தோல்வி என்றும் சொல்வதோடு நிறுத்திவிடாமல், சனாதனம் பற்றி உதயநிதி பேசியதால்தான் காங்கிரஸ் இப்படி ஒரு தோல்வியைச் சந்தித்தது என்றும் சேர்த்துச் சொல்கிறார்கள். அங்குதான் இருக்கிறது ஒரு நுட்பமான பஞ்சகம். இந்தக் கூற்றுகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, தேர்தல்களில் கட்சிகள் பெற்ற இடங்களை மட்டும் பார்க்காமல், அவை பெற்ற வாக்குகளையும் நாம் கொஞ்சம் பார்க்கலாம்!

இதோ அந்தப் புள்ளி விவரம், வாக்குகளின் எண்ணிக்கையைச் சற்று கூர்ந்து கவனித்தால், சில உண்மைகள் நமக்குப் புரியும்!

தெலங்கானா, மிசோரம் இரண்டு மாநிலங்களையும் விட்டுவிட்டு பா.ஜ.க. வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் மட்டும் இரண்டு கட்சிகளும் (பா.ஜ.க., காங்கிரஸ்) பெற்றிருக்கும் வாக்குகள் 4.48 கோடியும், 3.98 கோடியும் ஆகும். அதாவது பா.ஜ.க. மூன்று மாநிலங்களிலுமாகச் சேர்த்து 50 லட்சம் வாக்குகள் மிகுதியாக பெற்றிருக்கிறது. இது பெரிய வெற்றிதான், நாம் மறுக்கவில்லை. ஆனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றுள்ள தெலங்கானா, மிசோரம் மாநிலங்களில் பெற்றுள்ள வாக்குகளையும் சேர்த்துத்தானே பார்க்க வேண்டும். மிசோரமிலாவது இரண்டு மாநிலக் கட்சிகளுக்கு இடையில்தான் கடும் போட்டி நிலவியது. ஆனால் தெலங்கானாவில் அப்படி இல்லை. எனவே தெலங்கானாவில் இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகளை மட்டுமாவது நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்.

அப்படிப் பார்க்கும்போது, தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி 92 லட்சம் வாக்குகளையும், பா.ஜ.க. வெறும் 32 லட்சம் வாக்குகளையும் பெற்றுள்ளன. இரண்டுக்கும் இடையில் 60 லட்சம் வாக்குகள் வித்தியாசம். இப்போது நான்கு மாநிலத் தேர்தல்களிலும், இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால், காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ 10 லட்சம் வாக்குகள் பா.ஜ.க.வைவிட கூடுதலாகப் பெற்றிருப்பது புலப்படும். மிசோரமில் இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகளைக் கூட்டினால், காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் மேலும் கூடுதலாக ஆகின்றன. உண்மை இவ்வாறிருக்க, பா.ஜ.க. வெற்றி பெற்றுவிட்டது, காங்கிரஸ் தோற்றுவிட்டது என்று சொல்வது எப்படி முழு உண்மை ஆகும்?

இவற்றைத் தாண்டி, இந்தத் தேர்தல் முடிவுகளுக்குள் எந்தத் தொடர்பும் இல்லாத உதயநிதியை உள்ளே இழுத்துக்கொண்டு வருவதன் நோக்கம் என்ன என்று நாம் பார்க்க வேண்டும். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசிய காரணத்தால்தான், காங்கிரஸ் கட்சி தோற்றுவிட்டது என்று, வெட்கமே இல்லாமல் ஒரு பொய்யைச் சொல்கின்றனர். அதாவது, சனாதனத்தின் மீது ஒரு சிறு விமர்சனத்தை முன்வைத்தால் கூட, மக்கள் எதிராகத் தீர்ப்பளித்துவிடுவார்கள் என்பது போன்ற ஓர் அச்சுறுத்தலை உருவாக்குவதுதான் அதன் உள்நோக்கம்.

சனாதனத்தை விமர்சித்ததால் தான் இப்படித் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன என்னும் முழுப் பொய்யை, உண்மை என்று வைத்துக் கொண்டால் கூட, சனாதனத்தை எதிர்த்த உதயநிதி ஆதரித்த காங்கிரஸ் கட்சி தானே 10 லட்சம் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அப்படியானால், சனாதனத்தை எதிர்ப்பதைத்தான் பெரும்பான்மையான மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று நாம் முடிவுக்கு வந்துவிடலாமா?

சனாதன ஆதரவோ, எதிர்ப்போ இந்தத் தேர்தல் முடிவுகளைக் கொண்டு வரவில்லை என்பதுதான் உண்மை. பிறகு ஏன் அவர்கள் இப்படி ஒரு காரணத்தைக் கற்பிக்கின்றனர்? அங்குதான் அவர்களின் உள்நோக்கமும், மத அடிப்படையிலான பாசிசமும் தொக்கி நிற்கின்றன. கடவுள், மதம், வழிபாட்டு முறைகள் ஆகியனவெல்லாம் அவரவருடைய தனிப்பட்ட நம்பிக்கை, வாழ்க்கைச் சூழல், அனுபவத்தைப் பொறுத்தவை. ஆனால் பா.ஜ.க., திட்டமிட்டு மத அடிப்படையிலான அரசியலை இங்கு கட்டமைக்க விரும்புகிறது. இந்தியாவில் பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களுக்கான கட்சி தங்களின் கட்சி மட்டும் தான் என்பது போலவும், பிற கட்சிகள் எல்லாம் இந்து மதத்திற்கு எதிரானவை என்பது போலவும் ஒரு கருத்தை அவர்கள் உருவாக்க விரும்புகின்றனர். அப்படி செய்வதன் மூலம், பெரும்பான்மையினரின் வாக்குகளைத் தாங்கள் பெற்றுவிட முடியும் என்பதே அவர்களின் எண்ணம்.

இந்த மதவாத அரசியலைத் தமிழ்நாட்டிற்குள்ளும் கொண்டு செலுத்திவிட வேண்டும் என்னும் நோக்கத்தில் தான் திரும்பத் திரும்ப ஒரு கேள்வியை இங்கு அவர்கள் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற மத விழாக்களுக்கு எல்லாம் வாழ்த்துகளைச் சொல்லும் தி.மு.க.வும், தமிழ்நாடு அரசின் முதல்வரும் ஏன் தீபாவளி உள்ளிட்ட இந்து மக்களின் விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதில்லை என்பதுதான் அந்த கேள்வி. நீண்ட நெடுநாட்களாக இந்தக் கேள்வியை அவர்கள் எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர்.

இந்த கேள்விக்கான உண்மையான விடையை, உள்நோக்கமுடைய அவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை என்றாலும், பொது மக்களுக்கு நாம் சொல்லியாக வேண்டிய கடமை இருக்கிறது. மற்ற மத விழாக்கள் எல்லாம், அவர்களின் இறைத்தூதர்கள் பிறந்த நாட்களைக் கொண்டாடும்போது, தீபாவளி என்பது ஒருவரைக் கொன்ற நாளைக் கொண்டாடுவதாக இருக்கிறது. அடுத்தவன் சாவைக் கொண்டாடும் அந்தப் பழக்கம் எப்போதும் தமிழர்களிடம் இல்லை. அது மட்டுமல்லாமல், இந்துக்களின் விழாக்களில் பெரும்பான்மையானவை, தேவ - அசுர யுத்தம் என்னும் கற்பனையில் உருவானவையாகவே உள்ளன.

தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும் இங்கு குறிப்பிடப்படுகின்றவர்கள் யார் என்னும் வினாவிற்கு, அவர்களால் உண்மையான, தெளிவான விடையை ஒரு நாளும் சொல்ல முடியாது. பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போரினையே அவர்கள் தேவ அசுர யுத்தம் என்கின்றனர். இதை ஆரிய திராவிடப் போர் என்பார் ஜவஹர்லால் நேரு.

இன்னொன்றையும் நாம் பார்க்கலாம். இயேசுநாதர், நபிகள் ஆகியோர் வரலாற்று மனிதர்கள். பிள்ளையார், ராமர், கிருஷ்ணர் ஆகியோர் புராணப் பாத்திரங்கள். இரண்டிற்கும் இடையில் பெரும் வேறுபாடு உண்டு. வரலாறு என்பது உண்மை, புராணம் என்பது நம்பிக்கை. ஒருவர் நம்பிக்கையை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவது, நாகரிகமும் இல்லை - ஜனநாயகமும் இல்லை.

இறுதியாக, "சூத்திரர்கள் யார்?' என்னும் நூலில், அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ள சில வரிகளோடு, இந்தக் கட்டுரையை நிறைவு செய்யலாம். "மேலை மதங்களின் பிரபஞ்சத் தோற்றம் குறித்த கருத்தாக்கத்தில், மனிதன் முக்கியத்துவம் பெறுகிறான். ஆனால் இங்கோ, ஒரு வருணம் அல்லது சாதி தான் அடிப்படை அலகாக இருக்கிறது'' என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

ஆம்! இந்து மதம் என்பது கடவுளை விட, மதத்தை விட, வழிபாட்டு முறைகளை விட வருணத்தையும், சாதியையும்தான் தூக்கிப் பிடிக்கிறது. சாதி அடுக்குகளைக் கொண்டே, இந்து மதம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்னும் உண்மையை நாம் அனைவரும் உணர்ந்திட வேண்டும். அதை உணரும்போதுதான், பா.ஜ.க. என்பது பாசிசத்தின் மறுவடிவம் என்பதையும் நம்மால் உணர முடியும். 

Next Story

"திராவிடம் என்றால் என்ன என்பதை பல வடிவங்களில் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது" - பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் பேச்சு!

Published on 08/12/2021 | Edited on 09/12/2021

 

 Jeyaranjan

 

திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீ எழுதிய ‘இடதுசாரி தமிழ்த்தேசியம்’, பத்திரிகையாளர் திருமாவேலன் எழுதிய ‘திரும்பத்திரும்ப திராவிடம் பேசுவோம்’, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எழுதிய ‘மார்க்சியமும் பெரியாரும்’ ஆகிய நூல்கள் கருஞ்சட்டை பதிப்பகம் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. மூன்று நூல்களையும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா வெளியிட, பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் பெற்றுக்கொண்டார்.

 

பின் விழாவில் ஜெயரஞ்சன் பேசுகையில், "இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு நீங்கள் வரவேண்டும் என்று பேராசிரியர் சு.ப.வீ தொலைபேசியில் சொன்னபோது சரி வருகிறேன் என்றேன். நூலை யார் வெளியிடுகிறார் என்று கேட்டதற்கு திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா வெளியிடுகிறார் என்றார்.

 

இன்றைக்கு வெளியிட்ட நூல்கள் இன்றைய காலத்திற்கு அவசியமான நூல்கள். இன்றைய அரசியலை எதிர்கொள்ளவும் தேவைப்படுகிறது. இன்று 12ஆம் வகுப்பிற்கு பிறகு மேல்படிப்பு படிக்கக்கூடியவர்களின் விகிதம் 55 விழுக்காடு வந்துவிட்டது. இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. இந்தியாவின் சராசரி விழுக்காடே 26 விழுக்காடுதான். 55 விழுக்காடு அளவில் பிள்ளைகள் படிக்கிறது என்றால் அவர்களுடைய தேடல் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தேவையானதை இயக்கம் தயாரித்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். 

 

அமெரிக்காவில் இன்று சமூக நீதி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஐரோப்பாவும் இன்று பேச ஆரம்பித்துள்ளனர். புதிய பொருளாதார கொள்கைகள்தான் நம்மை காப்பாற்றும் என்று பேசிக்கொண்டு இருந்தவர்கள் இன்று சமூக நீதிதான் முக்கியம் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். காரணம் சமத்துவமின்மை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. சமத்துவமின்மை அதிகரிக்கும்போது வலதுசாரிகள் வெறுப்பரசியலை வளர்க்கிறார்கள். வெறுப்பரசியல் நம் ஊரில் மட்டும் இல்லை. இன்றைக்கு நம்மை தமிழ்ச்சமூகத்தின் எதிரிகள் எனக் கட்டமைக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்திற்கு நம்முடைய இயக்கம் அளித்துள்ள பங்களிப்பு பல தளங்களில் உள்ளது. 

 

பெரியாரை வெறும் கடவுள் எதிர்ப்பாளராக மத மறுப்பாளராகச் சுருக்கி பார்க்கிறார்கள். இன்றைக்கு நவீன சிந்தனையில் பேசக்கூடிய விஷயங்களை பெரியார் அன்றைக்கே செய்துள்ளார். சமுதாயத்தை பற்றி தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருந்ததால் அந்த அறிவு அவருக்கு கிடைத்தது. பல இயக்கங்கள் தோன்றியிருந்தாலும் அவர்கள் தங்கள் பார்வையை மதவிடுதலை, இன விடுதலை எனக் குறுகலாக வைத்திருந்தனர். ஆனால், பெரியார் அப்படியில்லை. காலையில் அமர்ந்து மடாதிபதிகளுடன் இந்தியை எதிர்த்துக்கொண்டு இருப்பார். மாலையில் அந்த மாடாதிபதிகளை திட்டி கூட்டத்தில் பேசிக்கொண்டு இருப்பார். இங்கிருக்கும் அனைத்து பேதங்களையும் ஒழிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்கு எவையெல்லாம் எதிராக இருக்கிறதோ அவற்றையெல்லாம் விமர்சனம் செய்தார். பெரியார் என்ன செய்தார் என்பதையும் திராவிடம் என்றால் என்ன என்பதையும் பல வடிவங்களில் சொல்லவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.    

 

பெரியார் என்னென்ன வேலைகள் செய்துள்ளார் என்பதை ஆங்கிலத்தில் கொண்டுசெல்ல வேண்டும். அண்ணன் ராசா டெல்லியில் பெரியார் பற்றி பேசிக்கொண்டு இருக்கையில் பெரியார் பற்றி எதாவது புத்தகம் இருந்தால் கொடுங்கள் என்று யாராவது கேட்டால் நம்மிடம் கொடுக்க என்ன புத்தகம் இருக்கிறது? இந்த அனுபவம் எனக்கே நிகழ்ந்துள்ளது. ஆகவே அந்த தளத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

 

திராவிட இயக்கத்தின் கொள்கை என்பது பிச்சைக்காரராக இல்லாமல் அனைவரையும் மானுடராக மாற்றுவது. தலை நிமிர்ந்து நடக்கும்போதுதான் ஒருவன் மானுடராக மாறுகிறான். தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்றால் அவனுக்கு சமஉரிமை வேண்டும் . கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி குப்பை அள்ளுபவராக இருந்தாலும் சரி ஒருத்தருக்கு ஒரு ஓட்டு என்றார் அம்பேத்கர். அது வழியாகத்தான் அரசியல் அதிகாரம் ஜனநாயகப்படுத்தப்பட்டது. பொருளாதார அதிகாரத்தையும் சமூக அதிகாரத்தையும் ஜனநாயகப்படுத்த முடியாத நாடுதான் இந்த நாடு. இவர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை 1967இல் இருந்து செயல்வடிவத்தில் கட்டிக்கொண்டு இருக்கிறோம்" எனக் கூறினார்.