Skip to main content

எழுத்தாளர் டூ வேட்பாளர்... என்னென்ன செய்திருக்கிறார் இவர்???

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரான சு. வெங்கடேசனை வரும் மக்களவைத் தேர்தலில், மதுரை தொகுதியின் வேட்பாளராக நிறுத்தியுள்ளது, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
 

su venkatesan

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரான சு. வெங்கடேசனை வரும் மக்களவைத் தேர்தலில், மதுரை தொகுதியின் வேட்பாளராக நிறுத்தியுள்ளது, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும், மதுரை புறநகர் மாவட்டத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். எழுத்தாளர் சு.வெங்கடேசன் மதுரையைச் சேர்ந்தவர். மதுரையிலுள்ள ஹார்விபட்டியில் பிறந்தார். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்தார். தனது 18 வயதிலேயே ஓட்டை இல்லாத புல்லாங்குழல் என்ற கவிதை நூலை எழுதினார்.
 

அதன்பின் 2011ல் வெளிவந்த ‘காவல் கோட்டம்’ புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். இந்த புத்தகத்திற்காக அவர் 10 ஆண்டுகள் உழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது காவல் கோட்டம் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், ‘நாவல் எழுதத் துவங்கியபோது என் மூத்த மகள் யாழினி பிறந்தார். எழுதி முடித்தபோது அவர் என் தோளுக்கு இணையாக வளர்ந்திருத்தார். நாவலுக்காக 10 ஆண்டுகள் உழைத்தேன். இதற்காக நான் இழந்தது அதிகம்’.
 

மதுரை குறித்த பார்வை அவருக்கு என்றும் உண்டு. கீழடி அகழாய்வு நடைபெறாமலிருந்தபோது அதை எதிர்த்து போராடியவர்களில் இவரும் ஒருவர், கீழடியை உலகளவில் கொண்டுசென்றதற்கு  இவரும் ஒரு காரணம். ஜல்லிக்கட்டு உட்பட தமிழ், தமிழர் சார்ந்தவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர். தனது நாவல்களில் அதிகமான வரலாற்று பதிவுகளைக் கையாள்வது இவரது சிறப்பாகும். மற்றொரு நாவலான சந்திரஹாசம் பாண்டியர்கள் குறித்தது. தொடராக வெளியாகி, அண்மையில் புத்தகமாக வெளிவந்த வேள்பாரி மிகுந்த வரவேற்பை பெற்றது. 
 

இப்படியாக மதுரை சார்ந்த வாழ்வியலிலும், வரலாற்றிலும் அதிக அக்கறை கொண்டவராக இருக்கும் வெங்கடேசன்தான் தற்போது மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். 2011 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார்.